சிந்தடி:
எல்லோர்க்குமே
இடங்கொடுத்திடும் இயற்கையதுவும்
பொல்லாதயிம்
மாந்தனுமதைப் போற்றவேண்டுமே!
இல்லாதவர்
நிலைகண்டவன் இரங்கவேண்டுமே,
எல்லோர்க்குமே
உதவிநல்கிட இசையவேண்டுமே!
உள்ளவாழ்வுதான்
சிலகாலமே, உவந்துநீயுமே
உள்ளமதிலே
கனிவுபொங்கிட உதவிநல்கிடு!
மெல்லயாவரும்
உலகமதிலே மேன்மைபெற்றுதான்
வல்லமையுடன்
ஏற்றம்பெற வாழ்ந்திடுவமே!
தனிச்சொல்: அதற்கு
சுரிதகம்:
மனத்தை
விரித்திடு, மாண்பைப் பெருக்கிடு,
கனவைப்
போன்ற காட்சியும்
நனவாய்
மாறிடும் நல்லவை பெருகுமே!
No comments:
Post a Comment