மனத்தினை விரிவாக்கி வைத்திடுவாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).

  

 

சிந்தடி:

எல்லோர்க்குமே இடங்கொடுத்திடும் இயற்கையதுவும்

பொல்லாதயிம் மாந்தனுமதைப் போற்றவேண்டுமே!

இல்லாதவர் நிலைகண்டவன் இரங்கவேண்டுமே,

எல்லோர்க்குமே உதவிநல்கிட  இசையவேண்டுமே!

உள்ளவாழ்வுதான் சிலகாலமே, உவந்துநீயுமே

உள்ளமதிலே கனிவுபொங்கிட உதவிநல்கிடு!

மெல்லயாவரும் உலகமதிலே மேன்மைபெற்றுதான்

வல்லமையுடன் ஏற்றம்பெற வாழ்ந்திடுவமே!

 

தனிச்சொல்: அதற்கு

 

சுரிதகம்:

மனத்தை விரித்திடு, மாண்பைப் பெருக்கிடு,

கனவைப் போன்ற காட்சியும்

நனவாய் மாறிடும் நல்லவை பெருகுமே!

------

No comments: