'மிஸ்டர் கிளீனின்' கைது வரலாற்றுத் தடம்

 

24 Aug, 2025 | 10:31 AM


ஆர்.ராம்

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்­தவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அர­சியல் சாணக்­கி­யங்கள் நிறைந்த அவ­ருக்கு 'மிஸ்டர் கிளீன்' என்ற பெய­ரு­முண்டு. இலஞ்ச, ஊழல், மோச­டிகள் உள்­ளிட்ட  கறை­களை அவ­ரது கரங்கள் கொண்­டி­ருக்­கா­மையால் கிடைத்த பெரும் கௌரவம்.

அத்­த­கைய ஒருவர் மீது, அண்­மைய காலத்தில் அர­சாங்க நிதியை தவ­றாக பயன்­ப­டுத்தி தனிப்­பட்ட வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால்  ரணில் அழைக்­கப்­பட்டார்.

அவ்­வாறு வாக்­கு­மூலம் பெறு­வ­தற்­காக அழைக்­கப்­பட்ட நிலையில் 9 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் ஆஜ­ரா­னவர் சுமார் 4 மணி நேரம் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணை பிரிவின் மூன்றாம் இலக்க பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நளின் ஹேரத்­தினால் கைது செய்­யப்­பட்டார்.

பின்னர் அவர் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் நீதிவான் நிலு­புலி லங்­கா­புர முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பிணைக் கோரிக்­கைக்­கான வாதப்­பி­ர­தி­வாங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஈற்றில் பிணை அனு­ம­தியை வழங்­கு­வதா இல்­லையா என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக 6.15 இலி­ருந்து 9.50 வரையில் விசா­ர­ணைகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு இறு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை 26ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.  

நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து ரணி­லுக்கு கைவி­லங்­கி­டப்­பட்டு சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு, அங்கே மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னையில் தற்­போது சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.  

ரணிலின் கைதும் தடுத்­து­வைப்பும், இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் அழிக்­க­மு­டி­யாத தடத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  1815இல் ஸ்ரீ விக்­கி­ரம இரா­ஜ­சிங்கன் ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளர்­களால் சிறைப்­பி­டிக்­கப்­பட்டார். அவர் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்டார்.

அதன்­பின்னர் இலங்­கையை பிரித்­தா­னிய தேசா­தி­ப­திகள் ஆட்சி செய்­தனர். 1948 இல் நாடு சுதந்­திர பின்னர் பிர­த­மர்கள் ஆட்சி செய்­தனர்.  1978இல் உரு­வாக்­கப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பின் பின்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திகள் அதி­கார பீடத்தில் இருந்­தனர்.

இத்­த­கைய ஆட்­சி­யா­ளர்கள் மீது எத்­த­னையோ குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­ட­போதும் எந்­த­வொரு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கா­கவும் அவர்கள் எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வா­றி­ருக்­கையில் 210 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த முன்னாள் ஜனா­தி­ப­தி­யொ­ருவர் குற்­ற­வியல் குற்­றச்­சாட்டின் கீழ் கைது செய்­யப்­ப­டு­வது இதுவே முதல் முறை­யாகும்.

நாடு பொரு­ளா­தார ரீதி­யாக வங்­கு­ரோத்­த­டைந்­தி­ருந்த சூழலில் 'அர­சியல் வியூ­கத்தால்' ஜனா­தி­பதி பத­வி­யேற்ற ரணில், விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால் மிகக் கடி­ன­மான நிலை­மை­களில் இருந்து நாட்டை மூச்­செ­டுக்கும் நிலைக்கு கொண்­டு­வந்தார் என்ற அபி­மா­னத்தைப் பெற்­றி­ருந்தார்.

அத்­த­கை­யவர், பொது நிதியை முறை­கே­டாகப் பயன்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கா­கி­ய­தோடு அதற்­காக சிறை­செல்லும் நிலை ஏற்­பட்­டுள்­ளதால் 'மிஸ்டர் கிளீன்' என்ற நன்­ம­திப்­புக்கு நாமத்­திலும் கறை­ப­டிந்­துள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரு­டைய வர­லாறும், குடும்பப் பின்­ன­ணியும் நாட்டின் மிகவும் செல்­வாக்­கு­மிக்­கதும், அர­சியல் பாரம்­ப­ரி­யங்­களைக் கொண்­ட­து­மாகும். அவர் எச்.ஆர். விக்­கி­ர­ம­சிங்க, தியா­லினி விக்­கி­ர­ம­சிங்க தம்­ப­தி­யரின் இரண்­டா­வது மக­னாக மார்ச் 24, 1949 அன்று பிறந்தார்.

அவ­ரது தந்தை ஒரு சட்­டத்­த­ர­ணி­யா­கவும், பின்னர் 'லேக் ஹவுஸ்' பத்­தி­ரிகை நிறு­வ­னத்தின் தலை­வ­ரா­கவும் விளங்­கினார். ரணிலின் தாய்­வழி தாத்தா, டி.ஆர். விஜே­வர்­தன, இலங்­கையின் மிகப்­பெ­ரிய பத்­தி­ரிகை நிறு­வ­ன­மான 'அசோ­சி­யேட்டட் நியூஸ்­பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட்' (லேக் ஹவுஸ்) நிறு­வ­னத்தை நிறு­வி­யவர்.

இத்­த­கைய அர­சியல், ஊடகம் மற்றும் செல்­வந்த குடும்பப் பின்­ன­ணியில் இருந்த ரணில் தனது மாம­னா­ரான ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் தலை­மையில் தேசிய அர­சி­ய­லுக்குள் பிர­வேசம் செய்தார்.

1977இல் முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வான ரணில், வெறும் 29 வய­தி­லேயே ஜே.ஆர். அர­சாங்­கத்தில் மிக இள­வ­யது அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இது, அவ­ரது அர­சியல் வாழ்க்­கைக்கு வலு­வான அடித்­த­ளத்தை அமைத்­தது. இத்­த­கைய குடும்பப் பின்­ன­ணியும், இளம் வய­தி­லேயே அவ­ருக்குக் கிடைத்த அதி­கா­ரமும், அவ­ரது அர­சியல் வாழ்க்­கையின் பய­ணத்தை இல­கு­வாக்­கின.

அது­மட்­டு­மன்றி, இயல்­பா­கவே அர­சியல் சாணக்­கியம் நிறைந்து காணப்­பட்ட அவ­ருக்கு, சர்­வ­தேச தொடர்­பு­களும், நன்­ம­திப்­புக்­களும் ஒருங்கே காணப்­பட்­ட­மையால் தெற்­கா­சி­யாவில் 'மதிப்பு மிக்க தற்­து­ணி­வுள்ள தலைவர்' என்ற உய­ரிய அந்­தஸ்தை கிடைக்கச் செய்­தது.    

அது­மட்­டு­மன்றி, விஜே­வர்­தன குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­களில் கைவி­லங்­கி­டப்­பட்ட இரண்­டா­வது நப­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­வா­கி­யுள்ளார். அக்­கு­டும்­பத்தைச் சேர்ந்த விமல விஜே­வர்­தன, பண்­டா­ர­நா­யக்க கொலை­வ­ழக்கில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வ­ராக உள்ளார்.இந்­நி­லையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­போது 2023 செப்­டம்பர் 13 முதல் 20வரை­யான காலத்தில் கியூபா மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டார்.

இந்த விஜ­யத்தைத் தொடர்ந்து, செப்­டம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்­க­ளுக்கு, லண்­டனில் உள்ள வோல்­வர்­ஹாம்டன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தனது மனைவி, பேரா­சி­ரியர் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க 'கௌரவப் பட்டம்' பெறும் நிகழ்வில் கலந்­து­கொண்டார்.

மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க, களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆங்­கிலப் பேரா­சி­ரி­ய­ரா­கவும், பாலின ஆய்­வுகள் தொடர்­பான துறைக்கு நிறு­வு­ன­ரா­கவும் இருந்­துள்ளார். அவர் கல்வித் துறையில் குறிப்­பி­டத்­தக்க சாத­னை­களைப் படைத்­தவர் என்­பது முக்­கி­ய­மான விடயம்.

அதே­நேரம், லண்­ட­னுக்குச் சென்ற மேற்­கு­றித்த இரண்டு நாட்கள் பய­ணத்தை ரணில் ஒரு தனிப்­பட்ட விஜ­ய­மாக வெளிப்­ப­டுத்­தாது அதற்­கான செல­வு­க­ளுக்கு அர­சாங்க நிதியை பயன்­ப­டுத்­தி­யுள்ளார் என்­பது தான் அவர் மீதான பிர­தான குற்­றச்­சாட்­டாகும்.

குறித்த இரு நாட்­க­ளுக்கு மட்டும், ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் பொலிஸ் பாது­காப்புச் சேவை உட்­பட, சுமார் 166 இலட்சம் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது. ரணில் தம்­ப­தி­யி­னரின் தனிப்­பட்ட விஜயம், பின்னர் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மாக ஆவ­ணங்­களில் மாற்­றப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான விசா­ர­ணையில், ரணில் ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது அவ­ரது தனிப்­பட்ட செய­லா­ள­ராகச் செயற்­பட்ட சாண்ட்ரா பெரேரா, முதலில் ஒரு தனிப்­பட்ட விஜ­ய­மா­கத்தான் கரு­தப்­பட்­ட­தா­கவும், பின்னர் விக்­கி­ர­ம­சிங்­கவே அதை தனிப்­பட்ட விஜயம் அல்ல என்று கூறி­ய­தா­கவும் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.

மேலும், வோல்­வர்­ஹாம்டன் பல்­க­லைக்­க­ழகம் லண்­டனில் 206கிலோ­மீற்றர் தொலைவில் இருந்­த­போ­திலும், விக்­கி­ர­ம­சிங்க லண்­டனில் உள்ள ஆடம்­ப­ர­மான ஹோட்­ட­லான லாண்ட்­மார்க்கில் தங்­கி­யி­ருந்­துள்ளார். இதனால், வாகன வாடகை, உணவு என்று தங்­கிய நாட்­களில் அதிக செல­வுகள் செய்­யப்­பட்­டி­ருப்­பது போன்­றவை முறை­கே­டு­க­ளுக்கு ஆதா­ர­மாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றன.

நீதி­மன்றில் பிணை அனு­ம­திக்­கான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்­ட­போது அர­ச­த­ரப்பில் ஆஜ­ரான மேல­திக சொலிசிட்டர்  ஜெனரல் திலீப பீரிஸ், 'வறு­மையில் வாடும் குடும்­பத்தின் உண்­டி­யலில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று தனிப்­பட்ட செல­வு­க­ளுக்கு பயன்­ப­டுத்தி மகிழ்ச்­சி­யாக இருந்­த­தைப்­போல ரணிலின் செயல் உள்­ளது'  என்று கடு­மை­யாக விமர்­சித்­தி­ருக்­கிறார்.

நாட்டை மீட்­டெ­டுத்த தலைவர் என்­ப­தற்கு அப்பால், நாட்­டிற்கு டொலர் பற்­றாக்­குறை ஏற்­பட்டு, சாதா­ரண மக்கள் நெருக்­க­டி­கயில் காணப்­பட்ட  கால­கட்­டத்தில், 'ஜனா­தி­பதி' என்ற பொறுப்­புள்ள முதற்­கு­டி­மகன் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக அரச நிதியை ஆடம்­ப­ர­மாக செல­விட்­ட­மை­யா­னது அவ­ரது நற்­பெ­யரை சிதைத்­தி­ருக்­கி­றது.

மைத்­ரி விக்­கி­ர­ம­சிங்க புற்­றுநோய் மற்றும் ஆர்த்­ரைட்டிஸ் நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் நீரி­ழிவு உள்­ளிட்ட நோய்கள் உள்­ளன. ரணில், மைத்­திரி தம்­ப­தி­யி­ன­ருக்கு குழந்­தைகள் இல்லை.

ஆகவே இரு­வரும் ஒரு­வ­ரை­யொ­ருவர் கவ­னித்துக் கொள்ளும் நிலை­மைகள் தான் உள்­ளன என்று நீதி­மன்­றத்தில் ரணில் தரப்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன சுட்­டிக்­காட்டி பிணை­கோ­ரி­யி­ருந்தார்.

இந்த விடயம் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லான கவ­னத்தை ஈர்த்­தாலும், மறு­புறம், ஒரு அர­சியல் தலை­வரின் தனிப்­பட்ட  சோகங்கள், பொதுச்சொத்து துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்கான நியாயமாக இருக்க முடியுமா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

அதேநேரம், ரணிலின் கைது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளுக்கு எதிரான பரபட்சமான நடவடிக்கையையும், சட்டத்தின் ஆட்சியை மீள உறுதிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாகக் கொள்ள முடியும்.

ஆனால், இக்கைது அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என்ற வாதங்களையும் தாராளமாகக் கொண்டிருகிறது. குறிப்பாக, பிரதமர் ஹரிணியால் அரசாங்கத்துக்குள் ஏற்படும் குடைச்சல்களுக்கு ரணில் காரணம் என்ற சந்தேகம் ஜே.வி.பிக்குள் உள்ளது.

அதுமட்டுமன்றி ரணில், எதிரணிகளை கூட்டி, ஆட்சி மாற்றத்துக்கான காய்களை பல தளங்களில் நகர்த்துகின்றார் என்ற அச்சமும் ஜே.வி.பிக்கு உள்ளது.

சர்வதேச அரங்கில் ரணிலுக்குள்ள கௌரவம் தமது அரசாங்கத்துக்கு தொடர் தலையிடியாக இருப்பதாகவும் ஜே.வி.பி. சிந்திக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக ரணில் பட்டலந்த விவகாரத்தின் சூத்திரதாரி என்றும் ஜே.வி.பி குற்றம் சாட்டுகிறது.

ஆகவே, ரணிலின் கைது வெறுமனே தனிப்பட்டதொரு நிகழ்வு அல்ல. கைதும் அதன் விளைவுகளும் நாட்டின் எதிர்கால அரசியலை வடிவமைப்பதில் முக்கிய பங்கை வகிக்கப்போகிறது.   நன்றி வீரகேசரி 

No comments: