உலகச் செய்திகள்

 சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வாகனத்தை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் - நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்

நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்



சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது பிரான்ஸ் வான் தாக்குதல்

02 Jan, 2025 | 01:01 PM
image

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.

பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் பிரான்ஸ் ஐஎஸ் இலக்குகள் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்கள் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் ரபெல் போர்விமானங்களும் அமெரிக்காவின் ரீப்பர் ஆளில்லா விமானங்களும் ஐஎஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது 7 குண்டுகளை வீசின என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2014 - 2015 முதல் சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டுவரும் சர்வதேச கூட்டணியில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வாகனத்தை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் - நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்

Published By: Rajeeban

02 Jan, 2025 | 10:55 AM
image

நியு ஓர்லியன்சில் வாகனத்தை கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன

இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் அமெரிக்க இராணுவீரரானநபர் ஒருவர் ஐஎஸ்; அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை  மிக வேகமாக செலுத்தி தற்காலிக வீதிதடைகளை கடந்து வந்து புதுவருடத்தன்று பொதுமக்கள் மீது மோதினார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர்  ஏனையவர்களின் உதவியுடனேயே செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த 42 வயது சம்சுட் டின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் தனது வாகனத்தினால் பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து இவர் மீது நடத்தப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார்.

இரண்டு பொலிஸார் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர், பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்.

இசைநிகழ்வுகள் மதுபானசாலைகளிற்கு பிரபலமான சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் இப்பகுதியில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவருடன் இணைந்து செயற்பட்டவர்களை கைதுசெய்யப்போவதாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உறுதியளித்துள்ளனர்

வாகனத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அந்த பகுதியில்இரண்டு வெடிபொருட்கள் மீட்கப்பட்டு செயல் இழக்கச்செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட வாகனத்திலிருந்து ஐஎஸ் கொடி மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கு இந்த வன்முறையுடன் தொடர்புள்ளதா என விசாரணைகள் இடம்பெறுவதாக எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜபார் மாத்திரம் இந்த தாக்குதலிற்கு காரணம் என நாங்கள் நம்பவில்லை, அவரது சகாக்களை தேட முயல்கின்றோம் என தெரிவித்துள்ள எவ்பிஐ அதிகாரியொருவர் பல சந்தேகநபர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 





நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்டவர் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணியாற்றினார் - அமெரிக்க இராணுவம்

02 Jan, 2025 | 01:19 PM
image

நியுஓர்லியன்சில் டிரக்கை வேகமாக செலுத்தி பொதுமக்கள் மீது மோதி 15 பேரை கொலை செய்த சம்சுட் டின் ஜபார் அமெரிக்க இராணுவத்தில் 13 வருடங்கள் பணிபுரிந்தவர்  ஆப்கானிலும் பணிபுரிந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துகார்டியன் தெரிவித்துள்ளதாவது

அமெரிக்க இராணுவம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவல்கள்  நியுஓர்லியன்ஸ் தாக்குதலை மேற்கொண்ட நபர் யார் என்பதை  வெளிப்படுத்தியுள்ளன.

அமெரிக்க அதிகாரிகளும் நியுஓர்லன்ஸ் அதிகாரிகளும் ஜபார் தனியாக செயற்படவில்லை என கருதுவதாகவும் அவரின் சகாக்களை தேடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஜபாரின் டிரக்கில் ஐஎஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது இது பயங்கரவாத தாக்குதல் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஜபார் 2007 முதல் 2015 சம்சுட் - தின் - ஜபார் அமெரிக்க இராணுவத்தின் மனிதவள பிரிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்தவர்.

இதன் பின்னர் அவர் அமெரிக்க இராணுவத்தின் பிரிவில் இணைந்து 2020வரை தகவல்தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியிருந்தார்.சேவைகால இறுதியில் சார்ஜன்டாக பதவி வகித்தார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜபார் 2004 இல்  இணைந்துகொண்டார் எனினும் ஒருமாதத்தின் பின்னர் அதிலிருந்து விலக்கப்பட்டார் என அந்த அதிகாரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியா மாநில பல்கலைகழகத்தில் 2015 முதல் 2017 வரை கல்விகற்ற ஜபார் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி.

நன்றி வீரகேசரி 





No comments: