மேற்கத்திய மருந்தும் நாமும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

          மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப்  பெரும் பணத்தை சம்பாதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள்.  மேற்கத்திய வைத்தியம் கற்ற டாக்டர்கள் இந்த மருந்துகளை மட்டுமே அறிந்தவர்கள்.  இவர்களால்  இந்த மருந்துகள் தாராளமாக விலைப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதால் மேற்கத்திய வைத்திய முறையான Allopathy  வைத்தியத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை,  அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.                                                             

           அதே சமயம் எமது ஆயுள்வேேம், சித்த வைத்தியம் போன்றவற்றை நாம் முற்றாக புறக்கணித்து விட முடியாது. இவர்கள்  மருந்துகளை தாமே மூலிகைகள் கொண்டு தயாரிப்பவர்கள்.  நோய் தீர்க்க வல்லவை.  இவை எல்லாம் நாம் அறியாததா. நமது குடும்ப வைத்தியர் கூறுவர் வைத்தியரிடம் போய் “நோயை மாற்றி விடுங்கோ” என கேட்க கூடாதாம்.  ஏனெனில் ஒரு நோயிலிருந்து பிறிதொரு நோய்க்கு அவர் மாற்றி  விடுவாராம், அதனால் நோயை குணப்படுத்தி விடுங்கோ என கேட்க வேண்டுமாம் இது வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் ஆழ்ந்த கருத்து உடையது.                                                  

           மேற்கத்திய வைத்திய மருந்துகளோ சில பாத விளைவுகளை கொண்டு வரக்கூடியவை.  அதுதான் பக்க விளைவு side effect  என்பார்கள்.  இந்த விஷயத்தில் வைத்தியரின் மருந்தை உண்ணும் வைத்தியமும்,  நோயாளியும் கவனமாக இருக்க வேண்டும்.  இவை பற்றி எல்லாம் கூற சில சமயங்களில் வைத்தியருக்கு நேரம் இருக்காது. மருந்து வாங்கும்போது கெமிஸ்ட் இடம் கேட்டால் அவர்கள் விவரமாக கூறுவார்கள். இது அவர்கள் கடமையும் கூட , அது மட்டுமல்ல மருந்தின் குணங்கள் யாவற்றையும்,  எவ்வாறன நிலையில் இருக்கும் நோயாளிகள் எதை அருந்தக் கூடாது என்ற அத்தனையையும் விவரமாக ஒரு  கடதாசியில் அடித்து  தருவார்கள். நீங்கள் வீட்டில் வைத்து படித்து விவரமாக அறிந்து கொள்ளலாம்.                                          

           வைத்தியயர் எழுதிய மருந்து சரியில்லை என கெமிஸ்ட் எண்ணினால் அதை அவர் நோயாளிக்கு கொடுக்காது மேலும் வைத்தியரிம் விசாரிக்கும் தகுதி அவருக்கு உண்டு. டாக்டரும் கெமிஸ்ட்டும் மறெயில் வண்டியும் தண்டவாளமும் போன்று இயங்க வேண்டியவர்கள். எனது மாணவி ஒருத்தி பல்கலை கழகத்தில் medical science  படித்து வருகிறாள்,  ஏதோ பேச்சுவாக்கில் நான் கூறினேன்,  நோய்க்கான மருந்துகளை மருந்து கொம்பனிகளில் இதற்கென பயிற்றப்பட்ட chemistry  படித்தவர்களே தயாரிக்கிறார்கள். நாம் கண்டறிந்த formulaவை மருந்தாக்கி பல மிருகங்களில் பரீட்சிர்த்த பின் தான் மனிதருக்கு கொடுத்துப் பார்த்து நோய் குணமானால், அந்த மருந்து தயாரித்து விற்பனைக்கு வரும். இத்தனையும் ஐந்து வருடங்களுக்கு மேல் வரை பரீட்சார்த்த நிலையில் இருந்து வெளிவரும். அதன் பின்   மருந்து கம்பெனிகள் டாக்டரிடம் மருந்து  சாம்பிள்  மருந்துகளையும் அதன் குணங்களையும் துண்டு பிரசாரமாக அடித்து அனுப்புவார்கள்.  இதை படித்த டாக்டர்கள்  நோயாளிக்கு கொடுப்பார்கள் என்றேன்.  டாக்டருக்கு மருந்து தயாரிப்பு பற்றி எதுவும் தெரியாதா என்று அவள் திகைத்தாள். இது அவளுக்கு ஏதோ புதிய செய்தியே.   

                                                    


      

            தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மேற்கத்திய வைத்தியமும், ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், போன்ற பாரம்பரிய முறைகளையும் இணைத்து வைத்தியம் சில இடங்களில் நடைபெறுகிறது. இதை மத்திய அரசே நடத்தி வருகிறது.  நமது நீண்ட நாள் நண்பர்  டாக்டர் தெய்வநாயகம்  தலைமையில் நடைபெற்று வந்தது. இப்பொழுது அவர் காலமாகி விட்டார். ஆனால் இந்த சேவை நடைபெறுகிறது. இவர் Edinburgh  Medical College இல்  சுவாசம் சம்பந்தமான நிபுணத்துவம் பெற்றவர்.  உலகளாவிய ரீதியில் மதிக்கப்பட்டவர்.    

            மூலிகைகளின் மகிமையை மேற்கத்திய நிபுணர்கள் என்றோ அறிந்திருந்தார்கள். எனது கணவர் 1969இல் Boots Drug Company என்ற மருந்து  தயாரிக்கும் கம்பெனியில் மருந்து தயாரிப்பு பற்றிய பயிற்சி பெற்றவர். இந்த காலகட்டத்திலே  அவர்  எழுதிய Air Mail தபாலில்  எமது வீட்டு முகவரி  எழுதியிருந்தார். நாம் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள்.  முகவரியில் திருநெல்வேலி என எழுதப்பட்டிருந்ததை நோட்டமிட்ட இவரது தலைமை ஆய்வாளர் Are you from Thirunelvely?  என வியப்பாகக் கேட்டாராம்.  என் கணவரோ சாதாரணமாக ஆமா என்றாராம். .  அவரோ we import Thirunelvely Sana  it is a wonderful medical plant என்றாராம்.  எனது கணவர் ஆராய்ந்த போது அறிந்தது,  இது எமது மூலிகை ஆன சூரத் தாமரையே.  பார்த்தீர்களா 50 வருடங்களுக்கு முன்பே உலகளாவ மருந்தை தயாரித்து விற்பனை செய்யும் Boots Drugs Company  தமது மூலிகைகளை பயன்படுத்தி உள்ளது.                                                                   

            எனது மலையாள தோழியின் தந்தையர் மேற்கு நாடுகளுக்கு மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் புரிபவர் இதை நான் 1987 இல் அறிவேன்.   

               இன்றோ நிலமை மாறி மேற்கத்திய மருந்து கம்பெனிகள் இந்தியாவிலேயே நிலம் வாங்கி அதில் மூலிகைகளைக்  பயிரிட்டு வருகிறார்கள்.  அதில் வேலை பார்ப்பவர்கள் இந்தியரே.  இவ்வாறு அவர்கள் மேற்கத்திய வைத்தியர்களையும் உருவாக்கி அவர்கள் மூலம் எமது மூலிகைகளை தயாரித்து விற்பனை செய்ய நாமோ மேற்கே எதற்கும் மேலானது என்ற நம்பிக்கையை வளர்க்கும் அடிமை மனப்பாங்கை வளர்த்து வருகிறோம்.         

                                       வாழ்க வளமுடன்      


No comments: