அருந்ததிராய்

.

அழகான பெண்ணை
அணைத்துக்கொள்ளும் சமூகம்... அறிவான பெண்ணை
அணைத்துவிட முயல்கிறது.
ஐஸ்வர்யா ராய்க்கான பாராட்டுகளுக்கும்
அருந்ததி ராய்க்கான எதிர்ப்புகளுக்கும் அதுதான் காரணம்.
காடாக இருந்தாலும் சரி...
நாடாக இருந்தாலும் சரி...
ஒவ்வொரு உயிரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைக்கிற ஜனநாயகி அருந்ததி ராய்.

இயற்கை வளத்தைச் சுரண்டுகிறவர்களுக்கும் அதிகார போதை தலைக்கேறியவர்களுக்கும் அவர் அடங்காப்பிடாரி. அறிவுதான் அழகு என்பதை அறிந்துகொள்ளும்வரை இந்த அறியாமை இருக்கத்தான் செய்யும்.
 
நீங்கள் ஒரு பழங்குடி என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் வாழும் காட்டில் 800 சிஆர்பிஎப் ராணுவத்தினர் மக்களுக்கு எதிராக வன்முறையாளர்களாக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் உங்கள் கிராமங்களை தீயிட்டு கொழுத்துகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் ?
இந்த நேரத்தில் பட்டினி சத்யாகிரகம் செய்ய முயற்சிப்பீர்களா ? பட்டினியால் வாடுபவர்கள் சத்யாகிரகம் நடத்துவதில் அர்த்தம் உண்டா ? சத்யாகிரகம் ஒரு தியேட்டர், அதற்கு பார்வையாளர்கள் தேவை. பார்வையாளர்கள் இல்லாத காட்டில் இந்த மாதிரி போராட்டத்திற்கும் சம்மந்தம் உண்டா ? இருப்பினும், அநீதி எதிர்க்கப்பட வேண்டும்.
மாவோயிஸ்ட்கள் என்று நீங்கள் அழைப்பது அவர்களைதான். எல்லா பழங்குடிகளும் மாவோயிஸ்ட்டுகள் அல்ல ஆனால் மாவோயிஸ்ட்டுகள் அனைவரும் பழங்குடிகளே.


No comments: