மரண அறிவித்தல்



அமரர் மாணிக்கம் கங்காதரன்

மலர்வு: 08. 10. 1935        –       உதிர்வு: 29.05.2021

நீர்வேலி - யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, மாணிக்கம் கங்காதரன் [Former General Manager, Agriculture Development Bank, (PNG)] அவர்கள், சனிக்கிழமை 29.05.2021 அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் -  இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கணேசமணி அவர்களின் அருமைக் கணவரும், ராம்சங்கர், பாரதிசங்கர், அனுஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,     நளாயினி, ஜெயந்தி, திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்வினி, கிருஷ்ணா, விஷ்ணு, ஷிவானி, ஹரி, ஷாலினி, அஞ்சலி, அஞ்சனா, தாமிரா, அபிரா மற்றும் சஞ்ஜெய் ஆகியோரின் பாசமிகு பெயரனாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரகுநாதன், செல்வரத்தினம் மற்றும் குணரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, மகேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் சிவனேசமலர் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிட்னியைச் சார்ந்த நிஷாந்தி, வசந்தி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல், பார்வைக்காகப் புதன்கிழமை, 02.06.2021 அன்று காலை 10:15 மணி முதல் - மதியம் 12:00 மணிவரை  Palm chapel, Macquarie Park Crematorium (Cnr Plassey & Delhi Rd North Ryde NSW 2113.) இல் வைக்கப்படும் என்பதையும்,  காலை 11:15 மணி முதல் மதியம் 12:30 மணிவரை நிறைவுக் கிரியைகள் நடைபெறும் என்பதனையும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: பாரதி: | ஜெயந்தி: 02 9642 3009 [bkangath@gmail.com]  

No comments: