.
மலர்களின் கண்ணீர்
மனிதனுக்குத் தெரிவதில்லை
பன்னீராய் மாறியது
பரவசத்தைக் கொடுக்கிறது
ஏழைகள் கண்ணீர்
எவருக்கும் தெரிவதில்லை
வற்றாமல் பெருகியது
மனமுடையச் செய்கிறது !
சிப்பியின் கண்ணீர்
முத்தாக மிளிர்கிறது
செங்கரும்பின் கண்ணீர்
தித்திப்பைத் தருகிறது
சொத்துள்ளார் கண்ணீர்
சோம்பலுடன் திரிவார்க்கு
கண்ணீரே வருவதில்லை !
சீதையின் கண்ணீர்
இராவணனை வீழ்த்தியது
சிலம்பினது கண்ணீர்
ஆட்சியையே வீழ்த்தியது
பாண்டவர்கள் கண்ணீர்
பாதகத்தை வீழ்த்தியது
பண்புடையார் கண்ணீர்
பாரையே திருத்திவிடும் !
No comments:
Post a Comment