படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளருமான முருகபூபதி எழுதிய இலங்கையில்
பாரதி ( ஆய்வு ) நூலின் வெளியீட்டு அரங்கு கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன் மண்டபத்தில்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி (05-10-2019) சனிக்கிழமை
மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

இலங்கையில் பாரதி நூல் வெளியீட்டரங்கு
செல்வி பாமினி செல்லத்துரையின் வரவேற்புரையுடன், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் திரு. தெளிவத்தைஜோசப்
தலைமையில் ஆரம்பமாகும்.
ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட
விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன், எழுத்தாளர்
கௌரி அனந்தன், இலக்கிய ஆர்வலர் வானதி ஆறுமுகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரை நிகழ்த்துவர்.
புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் நூலின்
முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
கலை, இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான திரு. உடுவை தில்லை நடராஜா,
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) இளங்கீரனின் புதல்வர் திரு. மீலாத் கீரன், திருமதி
ஜெயந்தி விநோதன் ஆகியோர் நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்வர்.
நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை நிகழ்த்துவார்.
நிகழ்ச்சியில் இலக்கிய கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெறும்.
கலை, இலக்கிய அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
---0----
No comments:
Post a Comment