"விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்


29/09/2019 தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும்.


முல்லை மண்ணில் அரங்­கேற்­றப்­பட்ட மனி­தப்­பே­ர­வ­லங்­க­ளுக்­கான நீதிக்­கோ­ரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கையில் அதே மண்ணில் வர­லாற்­றுப்­ப­ழைமை வாய்ந்த செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்தில் இரா­ணு­வத்­தி­னரின் பங்­கேற்­புடன் உரு­வான பௌத்த விகாரை இன முறு­கல்­க­ளுக்கு வித்­திட்­டது.

தற்­போது அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியின் மர­ணத்தின் பின்னர் அவ­ரது உடல் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி தகனம் செய்­யப்­பட்டு மீண்டும் தமி­ழி­னத்­திற்கு நீதி மறு­த­லிக்­கப்­பட்­டுள்­ளது.


இப்­பின்­ன­ணியில் இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் இம்­மண்ணில் ஒரு நேரடி­சாட்­சி­ய­மாக இருக்கும் தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் வி.நவ­நீதன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவ்­வி­ட­யங்கள் குறித்த முக்­கிய தக­வல்­களை பகிர்ந்து கொண்டார். அவை வரு­மாறு,

வர­லாற்­றுத்­தொன்­மையும் கேந்­திர முக்­கி­யத்­து­வமும்

செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தின் வர­லாறு மிகப்­ப­ழை­மை­யா­னது. இந்த ஆல­யத்தின் விக்­கி­ர­கங்­களை ஆய்வு செய்த வர­லாற்­றா­சி­ரி­யர்­களால் அவற்றை செதுக்­கிய காலத்­தி­னைக்­கூட கணிக்க முடி­யா­த­ள­வுக்கு உள்­ளது. பிள்­ளையார் சிலை எப்­போது பிர­திஷ்டை செய்­யப்­பட்­டது என்­ப­தற்­கான மிகத்­தெ­ளி­வான வர­லாற்­றுத்­த­க­வல்கள் இல்லை. இருப்­பினும் இப்­பி­ர­தே­சத்தில் மக்­களின் வாய்­வழி வர­லாற்றுத் தக­வல்கள் மூலம் மிகத்­தொன்­மை­யா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

தற்­போது வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் 93 வய­தான முதி­யவர், தான் சிறு­ப­ரா­யத்­தி­லேயே இந்த ஆல­யத்தில் வழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கின்றார். இவை இந்த ஆல­யத்தின் வர­லாற்­றுப் ­ப­ழைமையை காட்­டு­கின்­றது.

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­ய­மா­னது வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தியில் அதா­வது கொக்­கு­ளாய்க்கும் நாயா­றுக்கும் இடையில் உள்ள பழைய செம்­மலைப் பகு­தியில் காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலத்தில் கொக்­குளாய், முல்­லைத்­தீவு இடையில் மாட்­டு­வண்­டி­களில் பய­ணிப்­ப­வர்கள் பழைய செம்­மலை எனப்­படும் உய­ர­மான இப்­ப­கு­தியை கடக்­கின்­ற­போது நன்­றிக்­க­ட­னாக இந்த ஆல­யத்தில் வழி­பா­டு­களைச் செய்­வார்கள். தற்­போதும் அந்த மர­பு­முறை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.
இரா­ணுவ உத­வி­யுடன்  உரு­வா­கிய விகாரை
2009ஆம் ஆண்டு போரின் உச்­ச­கட்­டத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்­தனர். பின்னர் மீள்­கு­டி­யே­றிய போது செம்­ம­லைப்­ப­கு­தியில் அமைக்­கப்­பட்ட இரா­ணுவ முகா­மிற்குள் ஆல­யமும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­ச­ம­யத்தில் ஆல­யத்­திற்கு எந்­த­வொரு நபர்­களும் செல்­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

2004ஆம் ஆண்டு அந்த முகா­மி­லி­ருந்த இரா­ணு­வத்­தினர் பௌத்த தேரர் ஒரு­வரை அழைத்து வந்து இந்த ஆல­யப்­ப­கு­தியில் சிறிய அளவில் பௌத்த மத வழி­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தி­னரின் நிதிப்­பங்­க­ளிப்­புடன் விகாரை அமைப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டவும் அழைத்­து­வ­ரப்­பட்ட கொலம்பே மேதா­லங்­கார தேரரும் அங்கு சிறிய அறை அமைத்து தங்­கி­விட்டார். தற்­போதும் இந்த விகா­ரையின் நிர்­மாணப் ­ப­ணி­க­ளுக்­காக எந்­தெந்த இரா­ணுவ வீரர்கள் எவ்­வ­ளவு நிதி­ய­ளிப்புச் செய்­தார்கள் என்­ப­தற்­கான சான்­றுகள் விகா­ரை­யினுள் உள்­ளன. இதன்­மூலம் போரின் பின்னர் இரா­ணு­வத்தின் பங்­க­ளிப்­புடன் பிள்­ளையார் ஆல­யத்­துடன் இணைத்து விகாரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.
மக்கள் போராட்­டமும் நீதி­மன்ற உத்­த­ரவும்
ஆல­யத்­தினை விடு­விக்க வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக பொது­மக்கள் கோரி­வந்­தி­ருந்த நிலையில் 2014ஆம் ஆண்­டு­கா­லப்­ப­கு­தியில் வரு­டாந்த பொங்கல் நிகழ்­வு­க­ளுக்குச் சென்­ற­போ­தெல்லாம் இரா­ணு­வத்­தி­னரால் அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். 

இந்தப் பின்­ன­ணியில் 2018இல் மிகுந்த ஆக்­ரோஷத்­துடன் அணி­யாக திரண்டு மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்கள். இதனால் பிர­தே­சத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்­ப­டுகின்றது என்ற அடிப்­ப­டையில் பொலிஸார் இந்த விட­யத்­தினை நீதி­மன்­றத்­திற்கு எடுத்துச் சென்­றனர்.

இதற்கு சம­கா­லத்தில், கரைத்­து­றைப்­பற்று பிர­தேச சபை­யி­டத்தில் தக­வ­ல­றியும் உரி­மைச்­சட்­டத்தின் கீழ் பௌத்த விகாரை தொடர்பில் எட்டு வினாக்கள் எழுப்­பப்பட்­ட­போது, ஆலயம் அமைந்­துள்ள அரை ஏக்கர் நிலம் நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்­திற்குச் சொந்­த­மா­னது என்றும் இங்கு பௌத்த விகாரை பின்­னரே நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தென்றும் அதற்கு காணி அனு­ம­திகள் பெறப்­ப­ட­வில்லை என்றும் இரா­ணு­வத்­தி­னரின் வழி­பாட்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட சிறிய பகுதி பௌத்த விகா­ரை­யாக உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்றும் பௌத்­தர்கள் அங்கு வாழ­வில்லை என்றும்  தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் ஆலயம் அமைந்­துள்ள நில­மா­னது ஆல­யத்­திற்கே உரித்­தா­னது என்­பதை பிர­தேச செய­லா­ளரும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் நீதி­மன்றில் தொட­ரப்­பட்ட வழக்கின் மீது நீண்ட விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. அதன் ஈற்றில் பழைய செம்­ம­லையில் நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் பாரம்­ப­ரிய இந்­துக்­கோவில் காணப்­பட்­ட­தென்றும் தற்­போ­தைய சூழலில் இரு மதத்­த­வர்­களும் வழி­பா­டு­களை மேற்­கொள்­ள­மு­டியும் என்றும் ஆனால் நிர்­மா­ணங்­களைச் செய்­வ­தாக இருந்தால் எந்­த­வொரு தரப்­பி­னரும் பொருத்­த­மான உள்ளூர் திணைக்­க­ளங்­களின் அனு­ம­தியைப் பெறு­வது அவ­சியம் என்றும் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­தது.
இந்த உத்­த­ரவால் அதி­ருப்தி யடைந்த விகா­ரா­தி­பதி தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் அதற்கு எதி­ராக வவு­னியா மாவட்ட நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்­தார்கள். இந்த வழக்கு  நிலு­வையில் இருக்­கின்ற நிலையில், நீரா­வி­யடி ஆலய வளாகம் நிலை­யியல் மாற்­றங்­க­ளுக்கு உட்­படும் வகையில் எவ்­வா­றான­தொரு நிர்­மா­ணங்­க­ளையும் செய்­ய­மு­டி­யாது என்றும் வழி­பா­டு­களில் தொடர்ந்தும் ஈடு­ப­ட ­மு­டியும் என்றும் இடைக்­கால உத்­த­ர­வொன்றை பிறப்­பித்­துள்­ளது.
விகா­ரா­தி­ப­தியின் பூத­வு­டலும் மீறப்­பட்ட நீதியும்
இந்த நிலை­மைகள் இருக்­கையில் தான் கடந்த 21ஆம் திகதி சனிக் ­கி­ழமை விகா­ரா­தி­பதி புற்­று­நோயால் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கவும் அவ­ரது உடலை செம்­ம­லைக்கு கொண்­டு­வந்து அங்கு தகனம் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. 

இத­னை­ய­டுத்து அன்­றைய தினம் நீதி­மன்­றுக்கு விடு­மு­றை­யா­கையால் தமிழர் மர­பு­ரி­மைப்­பே­ர­வையும், ஆலய நிரு­வா­கத்­தி­னரும் ஆலய வளா­கத்­தினுள் உயி­ரற்ற உட­லத்­தினை வைக்­கக்­கூ­டாது என்றும் அவ்­வாறு வைக்­கப்­ப­டு­கின்­ற­ போது இந்­துக்­களின் பாரம்­ப­ரியம் மீறப்­படும். 

இதனால் இன,மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குக்கும். 

ஆகவே அதனை உடன் தடுக்க வேண்டும் என்று கோரி முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்டோம். பொலிஸார்  முதலில் இந்த முறைப்­பாட்­டினை கருத்தில் கொண்­டி­ருக்­காத நிலையில் தொடர்ச்­சி­யாக எமது தரப்­புக்­களின் அழுத்­த­மான கோரிக்­கை­க­ளினை அடுத்து நள்­ளி­ரவைத் தாண்டி எமது முறைப்­பாட்­டினை பதில்­நீ­தி­வானின் வீட்­டிற்கு எடுத்துச் சென்­றனர். 

அத­னை­ய­டுத்து பதில்­நீ­திவான் 23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்­டளை பிறப்­பிக்கும் வரையில் பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு தடை உத்­த­ரவை விதித்­தி­ருந்தார்.

பின்னர் திங்கட்­கி­ழ­மை­யன்று நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது எமது தரப்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் தேரர்­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையில் நீண்ட வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. இத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­னரின் இணக்­கப்­பாட்­டிற்­காக வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
அச்­ச­ம­யத்தில் பௌத்த மத கு­ருவின் தக­னக்­கி­ரி­யை­களை முல்­லைத்­தீவில் நடத்­து­வ­தற்கு நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் இந்து ஆல­யத்­திற்­குள்ளோ அல்­லது வளா­கத்­திலோ நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று தெளி­வாக கூறினோம். அத­னை­ய­டுத்து ஆல­யத்­திற்கு முன்னால் உள்ள இரா­ணுவ முகா­மினை அண்­டிய கடற்­க­ரைப்­ப­கு­தியில் தக­னக்­கி­ரியை நடத்­து­வ­தற்கு இணக்­கப்­பாடு ஏற்­ப­டவும் நீதி­மன்றம் அதனை ஏற்று கட்­ட­ளையை பிறப்­பித்தது.
நீதி­மன்­றிற்கு வரு­கை­தந்­தி­ருந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் வாதப்­பி­ர­தி­வா­தங்­களை அவ­தா­னித்து விட்டு நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்­திற்குச் சென்­றி­ருந்தார். நீதி­மன்ற கட்­டளை தயா­ரிக்­கப்­படும் ஏக 
கா­லத்தில் அங்­கி­ருந்த ஞான­சார தேரர் ஆல­யத்தின் கேணிப்­ப­கு­தியில் விகா­ர­ாதி­ப­தியின் உட­லத்­தினை தகனம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார் என்ற தக­வல்கள் எமக்கு கிடைத்­தி­ருந்­தன.
அத­னை­ய­டுத்து ஞான­சா­ர­தே­ரரும் அவர்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணி­களும் கலந்­து­ரை­யா­டி­விட்டு தாம் வழக்கில் வெற்­றி­ய­டைந்து விட்­ட­து­போன்று பிர­தி­ப­லிப்­புக்­களைச் செய்­து­விட்டு நீதி­மன்ற கட்­ட­ளைகள் தம்மைக் கட்­டுப்­ப­டுத்­தாது திட்­ட­மிட்ட வகையில் நாம் எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என்று கூறி தகன ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருந்த பகு­திக்கு விரைந்­தி­ருந்தார் என்ற தக­வல்­களும் ஒருங்கே கிடைத்­தன.
பொலி­ஸாரின் பரா­மு­கமும் திட்­டமிட்ட தாக்­கு­தல்­களும்
அச்­ச­ம­யத்தில் நீதி­மன்­றத்தில் குழு­மி­யி­ருந்த நாம் விட­யத்­தினை மீண்டும் நீதி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றோம். அப்­போது நீதி­மன்றக் கட்­ட­ளையை பொலிஸார் அமு­லாக்க வேண்டும் என்று குறித்­து­ரைக்­கப்­பட்­டது. இவ்­வா­றான கட்­ட­ளையை நாம் எடுத்­துக்­கொண்டு உரிய இடத்­திற்குச் சென்ற எமது சட்­டத்­த­ர­ணி­களின் கோரிக்­கைகள் மறுக்­கப்­பட்டு பொலிஸார் தேரர்­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்கு பதி­லாக அவர்­க­ளையும் எம்­மையும் அப்­ப­கு­திக்குள் பிர­வே­சிக்க விடாது தடுத்­தி­ருந்­தார்கள்.
அத்­துடன் நீதி­மன்றக் கட்­ட­ளையை அமு­லாக்­கு­மாறு வாதிட்ட சட்­டத்­த­ர­ணி­களும் தாக்­கப்­பட்­டனர். அங்­கி­ருந்த இளை­ஞர்கள், சாதா­ர­ண ­மக்­க­ளென அனைவர் மீதும் திட்­மிட்ட தாக்­கு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருந்­தன. 

குறிப்­பாக நீதி­மன்ற உத்­த­ர­வு­களை அமு­லாக்க வேண்­டிய பொலிஸார் குற்­ற­வா­ளி­களை நடத்­து­வது போன்று சட்­டத்­த­ர­ணி­க­ளையும் தமிழ் இளை­ஞர்­க­ளையும் நடத்தி அவர்­களை வன்­மு­றையை பிர­யோ­கித்­தா­வது அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு முயற்­சித்­தி­ருந்­தார்கள். 

அத்­துடன் தேரர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்து சார்­பாக செயற்­பட்­டி­ருந்­தார்கள். நீதிமன்றக் கட்­ட­ளை­களை விடவும் பௌத்த தேரர்­களின் கட்­ட­ளை­க­ளையே அவர்கள் நிறை­வேற்­றி­னார்கள் என்­பதை கண்­கூ­டாக கண்­டி­ருந்தோம். இந்த சம்­பவம் தமி­ழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப்­பி­ர­ஜை­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை மீண்டும் சான்­றுப்­ப­டுத்­தி­யது.

இவ்­வா­றான நிலை­மைகள் இடம்­பெற்­று­க்­கொண்­டி­ருந்த தரு­ணத்தில் தேரர்கள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி மர­ணித்த தேரரின் உடலை ஆலய கேணிக்கு அருகில் வைத்து எரி­யூட்­டி­விட்­டார்கள். 

தமிழ் இளை­ஞர்கள் கிளர்ந்­தெ­ழுந்­த­போதும் மீண்டும் வன்­மு­றை­யான நிலை­மைகள் தோற்­றம்­பெ­றக்­கூ­டாது என்­பதில் அங்­கி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்ட அனை­வரும் அவர்­களை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.

தென்­னி­லங்­கையின் புரி­தலும் மக்­களின் ஜன­நா­யக எழுச்­சியும்
தென்­னி­லங்­கையில் முல்­லைத்­தீவில் தேரரின் உடலை தகனம் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை என்ற தவ­றான செய்தி பரப்­பப்பட்­டுள்­ளது. உண்­மையில் நாம் மத­கு­ருவின் இறு­திக்­கி­ரி­யைகள் இடம்­பெ­று­வ­தை­எ­திர்க்­க­வில்லை. ஆனால் இந்­து­மத பாரம்­ப­ரி­யங்­களை சிதைத்து, பண்­பா­டு­களை அழித்து, எமது புனி­தத்­தினை இல்­லாதொ­ழிக்கும் ஒரு திட்­ட­மிட்ட செயற்­பாட்­டி­னையே எதிர்த்­தி­ருந்தோம். மேலும் பௌத்­தர்­க­ளையும், இந்­துக்­க­ளையும் பிரிப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு செயற்­பா­டாக தேரர்­களால் கூறப்­ப­டு­கின்­றது. 

அவ்­வாறு திட்­ட­மிட்­ட­ செ­யற்­பாடு என்றால் ஓரி­ரு­வ­ருடன் அல்­லது சில­நூறு பேருடனேயே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் இந்த சம்­பவம் தமி­ழர்­க­ளையும் இந்­துக்­க­ளையும் காயப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட அநீ­தி­யான செயற்­பா­டாகும். அதனால் தான் எட்டு மணி­நே­ரத்­தினுள் ஏற்­பாடு செய்து போராட்­டத்தில் இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் மறு­தி­னமே ஒன்­றி­ணைந்து ஜன­நா­யக முறையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

அத்­துடன் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தார்கள். சட்­டத்­த­ர­ணிகள் வடக்கு கிழக்கில் பணிப்­பு­றக்­க­ணிப்பில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இதில் தமி­ழர்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாகவும் ஆட்­சியின் உறு­திப்­பாட்­டிற்கு கார­ண­மாக இருப்­ப­வர்­க­ளு­க­்குமான கூட்­ட­மைப்பின் பங்­க­ளிப்பும் அர­சாங்­கத்­திற்­கான அழுத்­தங்­களும் எந்­த­ள­விற்கு இருந்­தன என்­பதை சீர்­தூக்கி பார்க்­க­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையில் இருக்­கின்றோம்.
தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு உள்­நாட்டு நீதிப்­பொ­றி­மு­றைக்குள் நீதி­யைப்­பெ­ற­ மு­டி­யாது என்­பதை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு உள்­நாட்டில் நீதியைப் பெற­மு­டி­யாது என்­ப­தற்கு இது மற்­று­மொரு உதா­ர­ண­மாக உள்­ளது. குறிப்­பாக நீதி­மன்­றங்கள் உத்­த­ர­வு­களை, தீர்ப்­புக்­களை பிறப்­பி­த்தாலும் பெரும்­பான்மை, இன, மத தரப்­பி­ன­ருக்கு எதி­ராக அவை ஒரு­போதும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்­பது இதன்­மூலம் வெளிப்­பட்­டுள்­ளது.
இதன்­மூலம் நீதித்­து­றையின் மீதான நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கின்­றது. அது­மட்­டு­மன்றி நல்­லெண்­ணத்­தினை வெளிப்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் நீதியான விடயங்களை முன்னெடுப்பார்கள். ஆகவே தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை இந்த விடயம் நிச்சயமாக தீண்டும்.

பௌத்த துறவிகளின் இருவேறு நிலை

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று பௌத்த தேரர்கள் இதய சுத்தியுடன் கிழக்கு மாகாணத்தில் போராடியிருக்கவில்லை. ஒருசிறுபான்மையினத்தின் பிரச்சினையை பயன்படுத்தி பிறிதொரு சிறுபான்மையினத்தினை அடக்குவதற்கு அவர்கள் கையாண்ட தந்திரோபாயமாகவே அதனை பார்க்கின்றேன்.  

கிழக்கில் மனச்சாட்சியுடன் தமிழர்களின் தார்மீகமான கோரிக்கைக்காக அவர்கள் போராடியிருந்தால் முல்லையில் தமிழர்கள், இந்துக்களின் பாரம்பரியத்தினையும், பண்பாட்டினையும் அவமதித்து நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமன்றி அத்தகைய செயற்பாட்டினை சரியென்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கவும் மாட்டார்கள்.


பரிந்துரைகள்
முல்லைத்தீவில் மட்டுமல்ல, தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்ற பௌத்த மதத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்களும், சட்ட மீறல்களும் ஓரிரு தேரர்களால் நடைபெறவில்லை. தமிழர் தாயகத்தில் பௌத்த ஆக்கிரமிப்புக்களும், சட்டமீறல்களும் அரச அனுசரணையுடன் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போதைய சூழலில் அந்த நிலைமைகளுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைப்பதானால், நாம் தோற்றுப்போனாலும் நீதிப்பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும். 

ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டமிடலை சர்வதேச மயமாக்குதல் வேண்டும். தமிழர்களின் அரசியல் பலத்தினை ஒன்றுதிரட்டி குரலெழுப்புதல் வேண்டும். இந்த நான்கு வழிகள் ஊடாகவே எமது எஞ்சியிருக்கும் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும்.


 - ஆர்.ராம் -  நன்றி வீரகேசரி 

No comments: