இலங்கைச் செய்திகள்


மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற முஸ்லிம் எம்.பி.க்கள்

யாழில் பட்டதாரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரித்த சி.ஐ.டி. குழுவிடம் ஷாபியின் சொத்து விவகாரம் ஒப்படைப்பு

இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக பலாலி !

கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக மதவழிபாடுகள் !

 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானம்

உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்

யாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் 6 ஆக அதி­க­ரிப்பு

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி

வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்




மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற முஸ்லிம் எம்.பி.க்கள்

29/07/2019 அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சரவை அந்தஸ்துள்ள, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளில் பதவிப்பிரமாணம் செய்தனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,
நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்
3. அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன்- விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
4. அப்துல்லாஹ் மஹ்ரூப்- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்
5. புத்திக பத்திரண- கைத்தொழில், வர்த்தக அலுவல்கள்,
நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர்
எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மெளலான, பைஷல் காஷீம் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


யாழில் பட்டதாரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

29/07/2019 யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  கவயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாத அதாவது, 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுரை நியமனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில்நுட்பக் க ல்லூரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் மாணவர்ளே இந்த கவனயீர்பபுப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட பட்டாதரிகளிடைடைய வெளிவாரி உள்வாரி என்ற பாகுபாடு காட்டோத, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கு, போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட செலயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர்.
இதில் கலந்து கொண்ட கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவிககையில், நாட்டில் உள்ள சகல பட்டாதாரி மாணவர்ளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு ஐக்கய தேசிய அரசாங்கம் அமைச்சரரைவை பத்திரைத்தை போடவுள்ளது. இனிவரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியியேறிய மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், இனிமேலும் பட்டதாரி மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த அரசாங்கம் இடமளிக்காமல் வேலைவாப்பினை வழங்க ஆலோசித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது போராட்டத்தினை மேற்கொணடு வரும் மாணவர்ளின் கோரிக்கை அதாவது நியமனம் தொடர்பான பிரச்சினை ஒகஸ்ட் மாத இறுதிக்குள் தீர்த்து வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 










பிணை முறி மோசடி தொடர்பில் விசாரித்த சி.ஐ.டி. குழுவிடம் ஷாபியின் சொத்து விவகாரம் ஒப்படைப்பு

30/07/2019 வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தை விசாரணை செய்த சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  
சி.ஐ.டி.யின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷனை அபேசேகர ஆகியோரின் மேற்பார்வையில், பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பியசேன அம்பாவலவின் கீழ், சி.ஐ.டி.யின் நிதிக் குற்றங்களைக் கையாளும் விசாரணை அறை இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர்  தர்மலதா சஞ்ஜீவனீ தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 










இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக பலாலி !

30/07/2019 யாழ் குடா நாட்டில் பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தின் விமானத்தின் ஓடு பாதை 70 பயணிகளை கொண்ட விமானங்களை கையாளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாவது விமான சேவை பலாலி விமானநிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சென்னைக்கிடையிலான விமான சேவைகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார். 
விமான நிலையத்தின் ஓடு பாதை அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.  தற்காலிக விமான கட்டுபாட்டு கோபுரம் மற்றும் திருப்பு முனை அமைக்கப்படவுள்ளன.
யு - 320 ரக விமானங்கள் தரையிறங்கக் கூடியதாக 3800 மீற்றர் நீளமான ஓடு பாதை அமைக்கப்படவுள்ளது. 
இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபை தெல்லிப்பளையில் இருந்து பலாலி விமான நிலையம் வரையிலான வீதியை அமைக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 











கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக மதவழிபாடுகள் !

31/07/2019 ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.
இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன்  அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது  தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.
இதேவேளை இப்பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.
நன்றி வீரகேசரி 








48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானம்

31/07/2019 இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  
இந்த நடவடிக்கைகள்  நாளைமுதல்  அமுல்படுத்தப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல நாடுகளுக்கும் எதிர்வரும்  ஆறு மாதங்களுக்கு  கட்டணமற்ற முறையில்  வீசாக்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்று  சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார். 
இது தொடர்பில் விளமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. 
அமைச்சர் ஜோன் அமரதுங்க ,அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.  வெளிநாட்டு தூதுவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.  
மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளுடன் ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா, பெலிஜியம், பெல்காரியா, கனடா, கம்போடியா, சீனா, கொராடியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்டோனியா. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, க்றீஸ், ஹங்கேரி, இந்தோனிசியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லட்வியா, லிதுஹானியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. 
மேலும் மலேசியா, மல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிபைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரோமானியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவானியா, ஸ்பெயின், சுவிடன், சுவிஸ்லாந்து, தாய்லாந்து , செக் குடியரசு, ஸ்லொவொக் குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய 48 நாடுகளுக்கே இவ்வாறு கட்டணமற்ற வீசாக்கல் வழங்கப்படவுள்ளன. 
இந்நிலையில் குறித்த நாடுகளுக்கான வீசாக்களை  தற்போது இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக   www.eta.lk  என்ற இணையத்தளத்தினூடாக வீசாக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் முடியும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 










உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானம்

31/07/2019 பிராந்திய வணிக விமான சேவைகளை முன்னெடுப்பதற்காக உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
உள்ளக விமான சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் கீழ் மட்டக்களப்பு விமான நிலையத்தை அபவிருத்தி செய்யவும் இரத்மலானை விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக வசதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அத்தோடு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக சம்பந்தப்பட்ட தரத்திற்கு அமைய வெளிநாட்டு விமானத்தில் பயணத்தை மேற்கொள்ளும் பிராந்திய வணிக சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த விமான நிலையங்களில் உறுதி செய்யுமாறு இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபைக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் இந்த விமான நிலையங்களில் சட்ட ரீதியில் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய எல்லை நிர்வாக விதிமுறைகளை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 











யாழ்ப்­பாணம் – கொழும்­புக்கு இடையில் புகை­யி­ரத சேவை­கள் 6 ஆக அதி­க­ரிப்பு

01/08/2019 கொழும்­புக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் இடையில் தினமும் இடம்­பெற்று வரும் புகை­யி­ரத சேவைகள் எதிர்­வரும் 3ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆறு சேவை­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. 
இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புதிய புகை­யி­ர­தங்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு சேவையில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு புகை­யி­ரத திணைக்­களம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் இது­வரை காலமும் நான்கு சேவை­க­ளாக நடை­மு­றை­யி­லி­ருந்த புகை­யி­ரத சேவைகள் 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை முதல் ஆறு சேவை­க­ளாக இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இத­ன­டிப்­ப­டையில் உத்­த­ர­தேவி புகை­யி­ரத சேவைக்கு அடுத்­த­தாக புதிய புகை­யி­ரத சேவை யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. பிற்­பகல் 1.45 மணிக்கு இடம்­பெறும் குளி­ரூட்­டப்­பட்ட நகர்சேர் கடு­க­திக்குப் பின்னர் மாலை 5.45 மணிக்கு காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து கொழும்­புக்கு மற்­று­மொரு புகை­யி­ரத சேவையும் இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்­நி­லையில் இரவு தபால் புகை­யி­ரதம் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்து 7.45 மணிக்கு புறப்­பட்டு இரவு 8.10 மணிக்கு யாழ்.மத்­திய புகை­யி­ரத நிலை­யத்தை வந்­த­டைந்து கொழும்­புக்குப் புறப்­படும். தற்போது கொழும்பிலிருந்து இரவு 8.30 மணிக்கு யாழ்.நோக்கிப் புறப்படும் இரவு தபால் புகையிரதம்  இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 











தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி

01/08/2019 தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 
பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. 
குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 












வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்

04/08/2019 சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.
அந்த அமைப்­பின் ஏற்­பாட்­டில் நல்லை ஆதீ­னம் முன்­பாக நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்று  முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
போராட்­டத்­தின் முடி­வில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­து­வ­ரும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் வர­லாற்­றுக் காலம் முதல் அமைக்­கப்­பட்­டி­ருந்த இந்து ஆல­யங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தும் ஆலய வளைவு உடைக்­கப்­ப­டு­வ­தும், பௌத்­தர்­கள் வாழ்ந்­தி­ராத பிர­தே­சங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­டு­வ­தும் இலங்கை வாழ் இந்­துக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யி­ருப்­பதை நன்கு உணர்ந்த நிலை­யில் இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­ய­மா­னது அமைதி வழி­யில் மேற்­படி அதர்ம செயல்­க­ளைக் கண்­டித்­தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தி­யும் அகிம்மை முறை­யில் கவ­ன­வீர்ப்பை இந்து சம­யப் பேர­வை­யு­டன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளது.
இலங்­கை­யின் ஜனாதிபதி, பிரதமர் மற்­றும் இந்­திய தலைமை அமைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் இந்து சமய விவ­கார அமைச்­சர் ஆகி­யோ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு இந்­துக்­கள் அனை­வ­ரும் அச்­ச­மின்றி சமய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தி உத­வு­மாறு தய­வாக வேண்­டு­கின்­றோம்.
இலங்கை வேந்­தன் இரா­வ­ணண் காலம் முதல் இந்­துக்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு பாரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்த கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் பகு­தி­யை­யும் அங்­கி­ருந்த ஆல­யங்­க­ளை­யும் தடை­யே­து­மின்றி மீள­வும் அமைத்து வழி­பாடு செய்­ப­வ­தற்­கும் இந்­தப் பகுதி சைவத் தமி­ழ­ரின் நிர்­வா­கத்­தின் கீழ் தொடர்ந்து இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தல். இந்­தப் பிர­தே­சத்­துக்கு அண்­மை­யில் பௌத்த விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடுத்­தல். வவு­னியா வெடுக்­கு­நாறி சிவன் ஆல­யத்­துக்­குச் செல்­லும் பாதை­யூ­டாக தடை­யின்றி போக்­கு­வ­ரத்­துச் செய்­வது, அடி­வா­ரத்­தி­லி­ருந்து மலை உச்­சிக்­குச் செல்­வ­தற்­கான ஏணிப் படி­களை அமைக்க பொலி­ஸா­ரும் தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் தடை ஏற்­ப­டுத்­தாது இருத்­தல்.
மத­நல்­லி­ணக்­கத்­தைச் சிதைக்­கும் நோக்­கில் இடித்து அழிக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திருக்­கே­தீச்­சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்­தில் சமா­தா­ன­மான முறை­யில் மீள அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து மத நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­தல்.
தொல்­லி­யில் திணைக்­க­ளம் நடு­நி­லைமை தவறி பக்­கச்­சார்­பா­கச் செயற்­பட்டு பௌத்த வர­லாற்­றுச் சின்­னங்­கள் காணப்­ப­டாத இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தி வரு­வதை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தோடு அத்­தி­ணைக்­க­ளத்­துக்கு தகு­தி­யான சைவத் தமி­ழர் களை­யும் நிய­மித்து குறித்த திணைக்­க­ளம் பக்­கச்­சார்­பின்றி செயற்­படு வதை உறு­திப்­ப­டுத்­து­தல்.
மத­மாற்­றங்­க­ளைத் தடை செய்­தல்.
முல்­லைத்­தீவு செம்­ம­லைப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­யா­தி­ருத்­தல்.
நீரா­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தி­யில் பௌத்த மத வழி­பாட்­டுத் தலங்­கள் இருந்­த­மைக்­கான ஆதா­ரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்­க­ளமே கூறி­யுள்ள நிலை­யில் அங்கு விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடை செய்­ய­தல்.
வடக்கு, கிழக்கு பிர­தே­சத்­தில் பௌத்த மேலா­திக்க செயற்­பா­டு­களை நிறுத்­து­தல்.
மேலே விவ­ரிக்­கப்­பட்ட எமது நியா­ய­மான கோரிக்­கை­களை சாத­க­மா­கப் பரி­சீ­லித்து அவற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து மத நல்­லி­ணக்­கத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத் தித் தரு­மாறு அன்­பு­டன் வேண்­டு­கின்­றோம், என்­றுள்­ளது.  நன்றி வீரகேசரி 





No comments: