17/07/2019 அமெ­ரிக்கா நெருப்­புடன் விளை­யாடிக் கொண்­டி­ருப்­ப­தாக  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை புதி­தாக எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­துள்ளார்.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இதை­யொத்த எச்­ச­ரிக்­கையை  ஈரா­னுக்கு முன்­பொரு சமயம் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் வரை­யறை செய்­யப்­பட்ட 3.67 சத­வீ­தத்தை விடவும் அதி­க­ள­வான அளவில்  யுரே­னி­யத்தை செறி­வூட்­டி­யுள்­ள­தாக ஈரான் கடந்த வாரம் அறி­வித்தி­ருந்­தது.  
இந்­நி­லையில் என்.பி.சி. நியூஸ் செய்திச் சேவைக்கு ஈரா­னிய வெளிநாட்டு அமைச்சர்   அளித்த பேட­டியில், "இந்தச் செயற்­கி­ர­மத்தை ஒரு சில மணித்­தி­யா­லங்­களில் திரும்­பவும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்" எனக் குறிப்­பிட்­டுள்ளார்.
"நாம் அணு ஆயு­தங்­களைத்  தயா­ரிக்­கப்­போ­வ­தில்லை. நாம் அணு ஆயு­தங்­களைத் தயா­ரிக்க விரும்­பி­யி­ருந்தால் அது எமக்கு   நீண்ட காலத்­துக்கு முன்­னரே  சாத்­தி­ய­மா­க­ இ­ருந்­தி­ருக்கும்" என  அவர் தெரி­வித்தார்.
ஐக்­கிய நாடுகள் சபைக் கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காக  மொஹமட் ஜாவத் ஸரீப் அமெ­ரிக்கா வரு­கையில் அவ­ரது நட­மாட்­டத்­துக்கு அசா­தா­ரண கட்­டுப்­பா­டு­களை அமெ­ரிக்கா விதித்­துள்ள நிலை­யி­லேயே  ஈரா­னிய வெளிநாட்டு அமைச்­சரின் மேற்­படி விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
 சில வாரங்­க­ளுக்கு முன்னர்  மொஹமட் ஜாவத் ஸரீப்­புக்கு எதி­ராக தடை­களை விதிக்கப் போவ­தாக அமெ­ரிக்கா அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­தது.
இதன்­போது ஸரீப் தெரிவிக்­கை­யில், 
தனக்கு உடை­மை­யாக ஈரா­னுக்கு வெளியில்  சொத்­துக்கள் இல்­லாத நிலையில் அந்தத் தடை­களால் பாதிக்­கப்­படப்போவ­தில்லை எனத் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ தெரி­விக்­கையில்,  ஐக்­கிய நாடுகள் சபைக் கூட்­டத்தில் கலந்து கொள்­வ­தற்­காக அமெ­ரிக்கா வரு­வ­தற்கு ஸரீப்­புக்கு விசா வழங்­கப்­படும் அதே­ச­மயம் அவ­ருக்கு மான்­ஹெட்டன் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஈரானின் ஐக்­கிய நாடுகள் தூத­ரக கட்­டி­டத்­துக்கு அப்பால் நட­மா­டு­வ­தற்கு தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
"அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள் ஈரா­னியத் தலை­நகர் தெஹ்­ரானைச் சுற்­றி­வ­ர­வில்லை. இந்­நி­லையில்  ஈரா­னிய இரா­ஜ­தந்­தி­ரிகள் நியூயோர்க் நகரைச் சுதந்­தி­ர­மாக சுற்றி வரு­வ­தற்­கு எ­து­வித கார­ணத்­தையும் நான் காண­வில்லை" என மைக் பொம்­பியோ வாஷிங்டன் போஸ்ட் ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டியில் தெரி­வித்­தி­ருந்தார். 1979ஆம் ஆண்டு இஸ்­லா­மிய புரட்­சி­யை­ய­டுத்து ஈரா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான உற­வுகள் முறி­வ­டைந்­த­தை­ய­டுத்து ஈரானை அடிப்­ப­டை­யாகக் கொண்டு   எந்­த­வொரு அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரியும்  செயற்­ப­டா­துள்­ளனர்.
ஈரா­னிய வெளி நாட்டு அமைச்சர் அமெ­ரிக்­காவால் தனக்கு வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரங்­களைப்  பயன்­ப­டுத்தி  இங்கு வந்து தனது மோச­மான பிர­சார நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வுள்­ள­வுள்­ள­தாக மைக் பொம்­பியோ  தெரி­வித் தார்.
இது தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபைக்­கான பேச்­சாளர் எர்ஹான் ஹக் தெரி­விக்­கையில், ஐக்­கிய நாடுகள் செய­லகம்  அமெ­ரிக்க மற்றும் ஈரா­னியத் தூத­ர­கங்­களைத் தொடர்­பு­கொண்டு  மொஹமட் ஜாவத் ஸரீப்­பிற்­கான பயணக் கட்­டுப்­பா­டுகள் மற்றும் அது தொடர்­பான தனது கவ­லைகள் என்­பன குறித்து தெரி­வித்­தி­ருந்­த­தாகக் கூறி னார். 
அமெ­ரிக்­கா­வா­னது பொது­வாக ஐக்­கிய நாடுகள் சபைக் கூட்­டத்தில் கலந்து கொள்ள வரும்  இராஜதந்திரிகளுக்கு நியூயோர்க் நகரின் கொலம்பஸ் சுற்றுவட்டப் பிராந்தியத்திலிருந்து 40 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்துக்கு அப்பால்  பயணங்களை மேற்கொள்ளத் தடை விதித்து வருகிறது.
இந்நிலையில் ஸரீப் இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபைக்  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி