கற்றிடும் நூல்களால் பெற்றிடும் பயனினை நற்றுணை என்று நான் நினைக்கின்றேன்
மற்றவர் முகமதில் மகிழ்ச்சியை கண்டிட நித்தமும் விரும்பி நான் இருக்கின்றேன் !
சொற்களை என்றுமே இனிமையாய் பேசிட எண்ணி நான் சொற்களைத் தேடுவேன்
அடுத்தவர் மனத்தினில் அமர்ந்திடும் சொற்களால் அவர் அகம் நிறைந்திட்டால் மகிழுவேன் !
வேற்றுமை காட்டிடும் சொற்களை என்றுமே விரும்பி நான் பார்ப்பது இல்லையே
சாற்றிடும் அத்தனை சொற்களும் நாளுமே சங்கடம் வரா வண்ணம் வழங்குவேன் !
வள்ளும் தந்திடும் கருத்தினை நாளுமே மனம் அதில் இருத்தியே வாழ்கிறேன்
என்மனம் நிறைந்திடும் கருத்தினை ஈய்ந்திட என்றுமே விரும்பி நான் இருக்கிறேன் !
No comments:
Post a Comment