மரண அறிவித்தல்



டாக்டர் ராசு வடிவேல் முதலியார்

தமிழ் நாட்டினைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்டிருந்த டாக்டர் ராசு வடிவேல் முதலியார் அவர்கள் மே மாதம் 26 ம் திகதி சிட்னியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற பழனி முதலியாரின் பேரனும் காலம் சென்றவர்களான இராசு முத்துக் குமார முதலியார் வள்ளியமை தம்பதிகளின் அன்பு மகனும்
முத்து வடிவேல் குமரன், ஆறுமுகம் வடிவேல் குமரன், மீனாட்சி வடிவேல் குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
டாக்டர் வடிவேல் அவர்கள் சிட்னி முருகன் கோவிலை நிர்வகிக்கும் சைவ மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர்கள் ஐவரில் ஒருவரும், சைவ மன்றத்தின் முதலாவது உறுப்பினரும் ஆவார்.
அன்னார் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தொடக்க காலத்தில் இந்திய செய்திகளைத்; தயாரித்து வழங்கியவரும், 
திருமுறைப் பாடல்களை உள்ளடக்கிய  Siva Tamil. Com  என்னும் இணையத் தளத்தினை உருவாக்கியவும் அதன் உரிமையாளரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இறுதிக் கிரிகைகள் ஜுன் மாதம் 1 ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 11.45 மணி வரை 
--> Magnolia Chapel Macquarie Park  மயானத்தில் நடைபெற்றது.

தொடர்புகளுக்கு: முத்துக் குமரன் 0403 311 259 மீனாட்சி 0413 402 847 
  






No comments: