பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார் !
மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார் !
நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார் !
எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம் !
|
அனைவருமே ஆசை கொள்வோம் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment