N.S தனபாலசுந்தரம் நெறியாள்கையில் " ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் "

.
அவுஸ்திரேலிய தமிழ் திரைப்படத்துறையில்  இயக்குனரான N.S தனா என்று அழைக்கப்படடும் தனபாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது முழுநீளத் தமிழ் திரைப்படமான ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் மிக விரைவில் அவுஸ்ரேலிய திரை அரங்குகளில் வெளிவர இருக்கின்றது. 


திரு தனபாலசுந்தரம் Sydney film School இல் diploma of screen கற்கை நெறியை 2006 ஆம் ஆண்டு பூர்த்தி செய்து, 2007 ஆண்டில் சிகரம் தொலைக்காட்சியின் அனுசரணையில் நினைவுகளே நினைவுகளே என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். 2015 ம் ஆண்டு “யார் அந்த தேவதை” என்ற முழு நீளத்தமிழ் திரைப்படத்தை உள்ளூர் கலைஞர்ளின் பெரும் பங்களிப்போடு இயக்கியிருந்தார். 

மீண்டும் N.S தனா இயக்கத்தில் சந்திரா புரடக்சன் தயாரிப்பில்  “ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும்” என்ற திரைப்படம் விரைவில் அவுஸ்திரேலிய திரை அரங்குகளில் வர இருக்கிறது. கதையின் நாயகர்களாக தினேஷ் மற்றும் சுதர்சன் நடித்திருக்கிறார்கள் . தினேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ஷோணா நடித்திருக்கிறார். 

 “ஒருகுயிலும் இரண்டு கோட்டான்களும்” படத்துக்கு கமராவை சிட்னி பிரசாத் பொறுபரபேற்க எடிட்டிங்கை ஜோன் டொமினிக் ( இந்தியா) செய்திருக்கிறார். கவி பேரரசு வைரமுத்து அனைத்பாது பாடல்களை எழுத இசை அமைத்திருக்கின்றார் வர்ஷன் (இந்தியா). சிட்னியை சேரந்த கண்மணி ஜெகேந்திரன், வர்சனின் இசையில் வைரமுத்துவின் வரிகளை பாடியிருக்கிறார். இவரோடு திப்பு, சத்யபிரகாஷ் மற்றும் அமிர்தவாஷினி ஆகியோர் பாடல்களை பாடியிருக்கிறார்கள் . கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்பவற்றை N.S தனபாலசுந்தரம் செய்திருக்கின்றார்

தனபாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது முழுநீளத் தமிழ் திரைப்படமான ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் மிக விரைவில் அவுஸ்ரேலியா திரை அரங்குகளில் வர இருக்கின்றது.






No comments: