ஆறுமுகநாவலர்


போற்றுதலுக்கு உரிய ஆறுமுகநாவலர்ரை இன்று சைவசமயிகள் போற்றுவது அரிதாகிவிட்டது. - போற்றகூடாத போலிகளை போற்றுவது எளிதாகியது இக்காலத்தில் !. இது வேதனைக்கு உரிய விடயமாம் இது சைவ உலகுக்கு கேடு அல்ல சைவசமயிகளுக்கே கேடு.

இன்று சைவசமயிகள்அனைவரும் போற்றி வணங்கவேண்டிய

ஓர் மகத்தான சைவசமய ஆச்சாரியாரின் குருபூஜை தினமாகும்
அவரே ஸ்ரீலஸ்ரீ நல்லை ஆறுமுக நாவலர்.



29/11/2018 நாயனார் ஆறுமுகநாவலர் சைவ உலகுக்கு செய்த சேவைக்கு சைவசமயிகள் ஆகிய நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்ததவறிக்கொண்டு இருக்கிறோம் !

தமிழில் முதன் முதலில் பிரசங்க மரபை ஆரம்பித்து வைத்தவர் நாயனார் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் "சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற்பொழிந்தார்என்று கைலாசபிள்ளை கூறுவதை நாம் அறியவேண்டும்.
சைவ வேதஆகமங்கள் பற்றியும்சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர்.
1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த நாவலர்பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம்31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார்இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.
🌷நாயனார் நாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சமயதீட்சை பெற்றனர்; 

-->மாமிச போசனத்தைத் தவிர்த்தனர்
-->கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர்
-->சைவாச்சிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர்இங்ஙனம் நாயனார் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

"யாழ்ப்பாணத்திலுள்ள சைவசமயிகளேஉங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள்நீங்கள் சிவதீட்சை பெறும் என்னைவிபூதி ருத்திராக்க தாரணம்,பஞ்சாக்ஷரசெபம்சிவாலய தரிசனம்இவைகளை நியமமாகச் செய்தும் என்னைஉங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும்அவைகளின்பயன்களாகிய சுவர்க்க நரகங்களையும்சிவபெருமானை வழிபடும் முறைமையையும்அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும்கிரமமாகப் படித்தாயினும்கேட்டாயினும்அறிகின்றீர்களில்லைஉங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லைஉங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம்தேவார திருவாசகபாராயாணம்சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை."

என உள்ளம் நொந்து நாயனார் நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் 'உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்என்ற அவர் கூற்று சமுதாயத்தின்அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது.

சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத பிராமணர்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியதுஇவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார்நாயனார்நாவலர் மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.
தான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரைஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.
"தமிழ்க்கல்வியும்சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ஸ்தாபித்தலும்சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம்இவற்றின் பொருட்டுக் கிரமமாகக்கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள்ஆதலினாலே நல்லொழுக்கமும்விவேகமும்கல்வியில் விருப்பமும்இடையறாமுயற்சியும்ஆரோக்கியமும்உடையவர்களாய்ப் பரீக்ஷிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம்வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும்சைவசாஸ்திரங்களையுங் கற்பித்தல்வேண்டும்அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்."
சைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டுசிவனும்சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறிவருகிறார்கள். "சுவரூபிஎங்கும் நிறைந்தவர் என்பதையும் 'கடவுள் திருமணம் புரிந்தார்என்பது அபத்தம்என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்." என்று நாவலர் தமதுசுப்பிரபோதத்திலே கூறியுள்ளார்கோவில்களிலே நடத்தும் கேளிக்கையான,துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாகதேவாரப் பண்களை இசைத்தல்சமயப் பிரசங்கங்களைச்செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.
பிறசமயத்தவர்களது மதமாற்றம் செய்யும் வேகமான பிரசாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக பிராமணர்கள் விளங்கினார்கள்இல்லைமதமாற்றத்தைக் கண்டும்அதைத் தடுக்க ஆவா செய்யாத பிராமணர்கள் மீதும் , சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள்துளைக்கத் தவறவில்லைசைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.
🌼நாயனார் நாவலர் 'பச்சைப்படி'யாக சொல்லுகிறவர் ,

ஒழித்து மறைத்து சொல்லத்தெரியாதவர்,
'பூசி மெழுகி ச்சொல்லத்தெரியாதவர்,இந்தக்காலத்து 'நாகரிக புருடர்கள்போல.

பச்சைப்படியாக சொன்னாலும் சொற்கள் ஊடுருவிப்பாய்வன.குற்றவாளியை கொதிக்கச்செய்வன.திருத்தம் விளைவிப்பனஇரக்கத்திலே பிறந்த சொற்கள்.தம்மவர் பிறர் என்று பாரபட்சம் பாராதசொற்கள் . அதனால் யாவரையும் கிடுகிடுத்து நடுங்கச் செய்த சொற்கள்,யாவருக்கும் திருத்தம் விளைவித்த சொற்கள் !
நாயனார் நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது.அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.
"நிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறதுஅதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்குவித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும்சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும்நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப்பணியும் செய்துள்ளேன்.எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள்இதுவே என்னுடையகடைசிப் பிரசங்கம்இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார்"

அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.

மறுநாள்நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள்என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாயனார் நாவலர்.
நாயனார் நாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்ததுஇப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.
நாயனார் நாவலரை போல நமக்காளில்லைமுற்போக்கு பேச நமக்காட்ளுண்டு,சமரசம் பேச நமக்காட்களுண்டு,இக்கால போலிகளின் நடிப்பை எடுத்துக்காட்ட நமக்காளில்லை நாவலரை போலநமக்காளில்லை !
இஃது பதிவு எழுத கையாண்டவை:-
1) யாழ்ப்பாணச் சமயநிலைஎழுத்து ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலர்.

2) ஆறுமுகநாவலரின் பிரசங்க வழி.

சுபம்
Thanks:- சைவ சித்தாந்தம்

No comments: