மரண அறிவித்தல்




-->

திருமதி  கமலருலேஸ்வரி  சர்வானந்தா
யாழ்  ஓட்டுமடம்,   மற்றும்  வெள்ளவத்தை  கொலிங்வூட்  வீதியை  வதிவிடமாகவும்,  தற்போது  அவுஸ்திரேலியாவில்  வாழ்ந்து  வந்தவரும்;  யாழ் St.Johns College,  Bond Institute,  கொழும்பு  Ladies College  உட்பட  பல  பாடசாலைகளில்  பிரபல  தாவரவியல்  ஆசிரியையாகக்  கடமை  ஆற்றியவருமான  திருமதி  கமலருலேஸ்வரி  சர்வானந்தா  அவர்கள்  கடந்த 09/07/2017  அன்று  இறைபதம்  அடைந்தார். 
அன்னார்  திரு / திருமதி ராஜரட்ணம்  அவர்களது  அருமைப்   புதல்வியும்; சர்வானந்தாவின்  அன்பு  மனைவியும் ;  தினேஷ்  (மெல்பேர்ன்) ,  தர்ஷினி (மெல்பேர்ன்),  ரோஷினி (லண்டன்)  ஆகியோரது  அருமைத்  தாயாரும் :  பிரமிளா,  சுதர்  ஆகியோரின்  அன்பு  மாமியாரும் ; 
விமலருலேஸ்வரி,  சிவராஜா,  பாக்கியராஜா,  ராஜேஸ்வரி,  விஜயராஜா,  யோகேஸ்வரி  ஆகியோரின்  பாசமிகு  சகோதரியும் ;  மனோரஞ்சிதம்,  சச்சிதானந்தா,  விஜயானந்தா,  விஜயலக்ஷ்மி,  செல்வரஞ்சிதம்,  ஜெயலட்சுமி,  விவேகானந்தா  ஆகியோரின்  அன்பு  மைத்துனியும்  ஆவார். 
அன்னாரின்  பூதவுடல்   எதிர்வரும்   16 ந்  திகதி  ஞாயிறன்று  790  Frankston – Dandenong Road,  Dandenong South,  Victoriaவில்  அமைந்துள்ள  Bunurong  Memorial  Park  என்றவிடத்தில்  காலை   10 மணி  முதல்   11 மணி  வரை  பார்வைக்கு  வைக்கப்பட்டு,  அதனைத்  தொடர்ந்து  ஈமக்கிரியைகள்  நடந்தேறி,  தகனம்  செய்யப்படும். 
உற்றார்,  உறவினர்,  நண்பர்கள்  இந்த  அறிவித்தலை  ஏற்றுக்  கொள்ளுமாறு  தாழமையுடன்  வேண்டிக்  கொள்ளப்படுகின்றனர்.  


No comments: