இலங்கைச் செய்திககள்


எதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர்

 “நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?












எதிர்க்­கட்­சித் ­த­லை­வரை இன்று சந்­திக்­கிறார் அவுஸ்­தி­ரே­லிய வெளி­வி­வ­கார அமைச்சர்


20/07/2017 அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை தந்­துள்ள நிலையில்  இன்று எதிர்க்­கட்­சித் ­த­லை­ரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை சந்­திக்­க­வுள்ளார்.
இச்­சந்­திப்பு இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னிகர் ப்ரைஸ் ஹட்­சனின் உத்­தி­யோகபூர்வ இல்­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது. அவுஸ்­தி­ரே­லிய வெளிவி­வ­கார அமைச்சர் ஜுலியா பிஷப்  பொரு­ளா­தாரம் மற்றும் பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வதை நோக்­காக கொண்டே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 
இதே­வேளை ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்தின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­மனை நாளை வெள்ளிக்­கி­ழமை காலையில் சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இச்­சந்திப்பின் போது சமகால அரசியல் நிகழ்வுகள் உட்பட பல்வேறு விட யங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது.  நன்றி வீரகேசரி 









 “நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல” ; காடழித்து மேற்கொள்ளும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

19/07/2017 நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென  சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும்  வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு நாம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் அவ் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூளாமுறிப்பு பகுதியில் 177 ஏக்கர் வனப்பகுதியில் அமையவிருக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும், காடழிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவில் பாரிய கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  வனப் பிரதேசமான ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் 177 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அதனை உடனடியாக தடை செய்யவேண்டுமெனவும் தெரிவித்து குறித்த கண்டன பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

'சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பினால் இன்று காலை 11 மணியளவில்  போராட்டம் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியிலிருந்து ஆரம்பித்து குடியேற்றம் நடைபெறவிருக்கும் கூளாமுறிப்பு வாரிவண்ணாங்காடு வரையான 6 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று  நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  "அழிக்காதே அழிக்காதே காடுகளை அழிக்காதே ', கூளாமுறிப்பு உனக்கு இன்னொரு வில்பத்தா " , “ எங்கள்  வனத்தாய் மடியில் தீ வைக்க விடமாட்டோம் ”, "முல்லையில் வரட்சிக்கு காரணம் ரிசாத்" , “கூளாமுறிப்பு வீழாது உங்கள் கோழைக்கத்தி ஏறாது”, "மண்ணில் துளையிட்டது  வீர்கள் மட்டுமல்ல மாவீரர்களது கனவுகளும்தான்” , “நம்  பூமி  வந்தாரை வாழவும் வைக்கும் நம் பூமி வஞ்சகர்களை வீழ்த்தவும் நிற்கும்” போன்ற  கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டத்தில் யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,வவுனியா, கிளிநொச்சி  போன்ற இடங்களிலிருந்து திரண்டுவந்த இளைஞர்களும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கஜதீபன் ,புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு  அறிக்கை வெளியிட்ட இளைஞர்கள் அடாத்து குடியேற்றத்தையும் காடழிப்பையும் நாம் எதிர்க்கின்றோம் ,தமிழர்களின் தாயக பகுதியான வடக்கு கிழக்கு பிரதேசம் பாரிய அபாயங்களை எதிர்நோக்குகின்றது.
இந்த செயற்பாடுகளால் இலங்கை தீவில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றது. இந்த நிலையில் தான் வடக்கு, கிழக்கில் நடாத்தப்படும் அடாத்து  குடியேற்றங்கள்  தமிழரின் இருப்பையும் பண்பாட்டு நிலத்தொடர்பையும்  முறித்து அழிக்கப்பதையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் நாம் தற்போது அனுபவிக்க தொடங்கியிருக்கின்றோம் . இந்த அபாயத்திலிருந்து விழிப்பு பெற்று எதிர்ப்பு குரல் காட்டவேண்டிய சூழல் தோன்றியுள்ளது. தொடர்பறாத  பண்பாட்டு நிலமாக காணப்பட்ட வடக்கு, கிழக்கு  பிரதேசம் தற்போது பௌதீக ரீதியில் உடைந்து காணப்பட இந்த திட்டமிட்ட குடியேற்றங்களே காரணம்.

கிழக்கில் எமது பண்பாட்டு ஊர்களை இன்று காணமுடியவில்லை  வளம் நிறைந்த கிழக்கு இப்படித்தான் துண்டு துண்டானது ,எங்கள் பண்பாட்டு தொடர்ச்சி முறிய முறிய நாம் பலமிழக்கின்றோம்.  இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு துறைகளிலிருந்து அழித்தொழிக்கப் படுகின்றோம் . இப்படித்தான் கிழக்கும் துண்டுதுண்டானது இப்போது வடக்கிலும் கண்வைத்துவிட்டார்கள் .மன்னாரில் வில்பத்து ,வவுனியாவில் பம்பைமடு ,முல்லைத்தீவில் குமாரபுரமென வன அழிப்பும் திடீர் குடியேற்றங்களும் உருவாகியுள்ளன.
தொன்றுதொட்டு நாம்  வாழ்ந்த எமது பண்பாட்டு  நிலங்களில் புதிய குடியேற்றங்களை உருவாக்குவதால் நாம் பின் தள்ளப்படுகின்றோம் ,மீள முடியாத அளவுக்கு பாதாளத்துக்கு தள்ளி விடப்படுகின்றோம் ,எனவே இளைஞர்களாகிய நாம் விழிப்படைய வேண்டும். முதல் கட்டமாக எங்கள்  கண்ணீராலும் செந்நீராலும் செழித்தோங்கிய வனத்தை அழித்து குடியேற்றங்களை உருவாக்கும் நாசகார செயல்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்
முள்ளியவளை கூளாமுறிப்பு பகுதியில் வனங்களை அழித்து  குடியேற்றம் மேற்கொள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது நாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல , அவர்களின் குடியேற்றத்துக்கு எதிரானவர்களுமல்ல ஆனால் திட்டமிட்டு வனங்களை அழித்தும் , எமது இனப்பரம்பலை சிதைக்கும் வகையிலான குடியேற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது . முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவர்கள் நிலங்களில் வாழ நாம் என்றும் தடையானவர்கள் அல்ல அவர்கள் நிலம் அவர்களுக்கு சொந்தம் ஆனால் வனங்களை அழித்து சுயலாபங்களை கருத்தில்கொண்டும் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் நோக்கோடும்  வடக்கில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டுவோம் என தெரிவித்தனர். நன்றி வீரகேசரி










பணத்திற்காக கடற்படையினர் கடத்திய எமது பிள்ளைகள் எங்கே?

18/07/2017 படித்து நாட்­டுக்கு சேவை செய்ய இருந்த எமது பிள்­ளை­களை பணத்­துக்­காக கடத்திச் சென்றனர். எம்­மிடம் கோடிக்கணக்கில் கப்பம் கோரினர். இதுவரை அவர்கள் தொடர்பில் எந்த தக­வல்­களும் இல்லை. கடற்­ப­டை­யி­னரே இந்த கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்­பதை குற்றப்புல னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடா­கவே நாம் அறிந்தோம். தற்­போது சில அர­சியல்வாதிகள் எமது பிள்­ளை­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்தி­ரிக்க முற்­ப­டுகின்­றனர். 8 வரு­டங்­க­ளாக நாம் எமது பிள்­ளை­களை தேடு­கின்றோம். 
அவர்கள் எங்கே? தயவு செய்து இந்த விட­யத்தில் அர­சியல் சாயம் பூசாது, எமக்­கான நியா­யத்தைப் பெற்­றுத்­தா­ருங்கள் என்று கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் உற­வி­னர்கள் நேற்று கண்ணீர் விட்­டு கதறிய­ழுது வேண்­டுகோள் விடுத்­தனர். 
கொழும்பு - நிப்போன் ஹோட்­டலில் விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்­தியே அவர்கள் அர­சாங்­கத்­திடம் இந்த வேண்­டு­கோளை விடுத்­த­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்துச் செல்ல அனு­ம­திக்­கு­மாறும் அவர்­க­ளுக்கு இடை­யூறு செய்யும் வகை­யி­லான அர­சியல் தலை­யீ­டு­களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்­டுகோள் விடுத்­தனர்.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்­தப்பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரும் விடு­தலை புலிகள் என முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச ஊடகங்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கு மறுப்பு தெரி­விக்கும் வித­மாக , காணாமல் ஆக்­கப்பட்­டோரின் பெற்­றோர்கள் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரிவித்தபோதே கண்­ணீ­ருடன் குறித்த உற­வுகள் மேற்­படி விட­யத்தை வெளிப்­ப­டுத்­தினர்.
காணாமல் ஆக்­கப்பட்ட ரஜீவ் நாக­நா­தனின் தாய் சரோ­ஜினி நாக­நாதன்:
2008 செப்­டம்பர் மாதம் 17 ஆம் திகதி எனது மகன் கடத்­தப்பட்டார். எனக்கு இருந்­தது ஒரே ஒரு மகன். உயர் கல்­விக்­காக வெளி­நாடு செல்ல இருந்த நிலையில் அவன் கடத்­தப்பட்டான். தில­கேஸ்­வரன், டிலான் ஆகிய தனது இரு நண்­பர்­க­ளுடன் அவன் வீட்டில் இருந்து காரில் சென்றபோதே, தெஹி­வ­ளையில் வைத்து கடத்­தப்­பட்­டுள்ளான்.
 கடற்­ப­டை­யி­னரால் அவன் கடத்­தப்பட்டு தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்த போது தொலை­பேசி ஊடாக எங்­க­ளுடன் கதைத்தும் உள்ளார். அவர்கள் பேசும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு நாமே ரீலோட்டும் செய்­துள்ளோம். மகனை விடு­விக்க என்­னிடம் ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்­டது. நான் 75 இலட்சம் ரூபா­வுடன்  நாரம்­ம­லைக்கு செல்ல முற்­பட்ட போது அப்­போ­தைய அமைச்சர் பீலிக்ஸ் பெரே­ராவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய நான் அங்கு செல்­ல­வில்லை.
 பீலிக்ஸ் பெரேரா அப்­போது கடற்­படை தள­பதி கரண்­ணா­கொ­ட­வுடன் பேசி, எனது மகனை விடு­விக்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். எனினும் இன்று வரை எனது மகன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.
இன்று அர­சியல் வாதிகள், கடத்­தல்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தஸ­நா­யக்க எனும் கடற்­படை அதி­கா­ரியைக் கைது செய்­ததும், தஸ­நா­யக்­கவின் பிள்­ளைகள் மனைவி அழு­வ­தாக பேசு­கின்­றனர்.
 உங்கள் மன­சாட்­சியைத் தொட்டு சொல்­லுங்கள். கடந்த 8 வரு­டங்­க­ளாக நாம் அழுத அழு­கையும், உங்­க­ளிடம் விடுத்த வேண்­டு­கோள்­களும் உங்­க­ளுக்கு தெரி­ய­வில்­லையா?. எமது பிள்­ளை­க­ளுக்­காக நாமும் இப்­படித் தானே 8 வரு­டங்­க­ளாக அழு­து­கொண்­டி­ருக்­கின்றோம்.
எனது மகனை கடத்திச் சென்று முதலில் வெலி­சறை முகாமில் வைத்­தி­ருந்­தனர். பின்னர் சைத்­திய வீதியில் உள்ள மறை­வி­டத்­திலும், பின்னர் திரு­மலை இர­க­சிய முக­ாமிலும் வைத்­தி­ருந்­தனர். இவை சம்பத் முன­சிங்க, ஹெட்டி ஆராச்சி மற்றும் ரண­சிங்க ஆகி­யோரின் கீழேயே இடம்­பெற்­றன. இதனை மகன் எனக்கு தொலை­பே­சியில் கதைக்கும் போதே தெரி­வித்தார். தயவுசெய்து எமது பிள்­ளை­களை எம்­மிடம் தாருங்கள் என கண்ணீர் மல்க தெரி­வித்தார்.
இதன் போது கடத்­தப்பட்ட ஐவரில் உள்­ள­டங்கும் டிலான் மொஹம்மட் எனும் மாண­வனின் பெற்றோர் பேசு­கையில்:
எமது பிள்­ளையைக் கடத்­தி­ய­வர்கள் கடற்­ப­டை­யினர் என்­பது தெரி­ய­வந்த போது மிக கவ­லை­யாக இருந்­தது. ஏனெனில் நாமும் இரா­ணுவ குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். எனது கணவர் ஓய்­வு­பெற்ற இரா­ணுவ வீரர். எனினும் இவ்­வா­றான கடத்­தல்­களை ஒரு போதும் உண்­மை­யான இரா­ணுவ வீரர்கள் புரி­ய­மாட்­டார்கள்.
எமது பிள்­ளைகள் புலிகள் இல்லை. அதனை நான் அடித்துச் சொல்வேன். எனது மகன் புலி என நிரூ­பித்தால் நான் எனது முறைப்­பாட்டை மீளப் பெற்­றுக்­கொள்வேன். அப்­பா­வி­களை கடத்தி காணாமல் ஆக்­கிய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை வேண்டும்.
 எமது பிள்­ளை­களை கடத்­தி­யோரை நாம் அடை­யாளம் காண­வில்லை. ஆனால் புல­னாய்வுப் பிரி­வி­னரே, கடற்­படை அதி­கா­ரிகளின் சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வா­கவே அவற்றை வெளிப்­ப­டுத்திக் கொண்டுள்ளனர். அதன்­படி கைது செய்­யப்பட்­டுள்­ள­வர்கள் எமது பிள்­ளை­களை கடத்­தி­ய­மைக்கு பொறுப்புக் கூற வேண்டும். தயவு செய்து அர­சி­யல் இலா­பத்­துக்­காக எமது பிள்­ளை­களைப் பயன்­ப­டுத்த வேண்டாம் எனக் கோரினார்.
இத­னை­ய­டுத்து தனது கணவன் மற்றும் மகன் ஆகியோர் கடற்­ப­டை­யி­னரால் கடத்­தப்பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் சம்சுன் நிஹாரா எனும் பெண் ஊட­கங்­க­ளுக்கு பேசினார்.
'தனது காத­லி­யுடன் வேனில் போகும் போது எனது மகன் 2008.09.11 ஆம் திகதி கடத்­தப்பட்டார். பின்னர் வீட்­டுக்கு வந்­த­வர்கள் எனது கண­வரை 2008.10.17 ஆம் திகதி கடத்திச் சென்­ரனர். மகன் கணவர் இருவர் தொடர்­பிலும் இது­வரை தகவல் இல்லை.
என்­னிடம் மக­னையும் கண­வ­ரையும் விடு­விக்க கடற்­ப­டையின் அண்ணாச்சி என தன்னை அறி­முகம் செய்த ஒருவர் கப்பம் கோரினார். 15 இலட்சம் கோரினார். என்­னிடம் அவ்­வ­ளவு பணம் இல்லை என்றேன். இறு­தியில் 5 இலட்சம் கோரி அதனை மூன்று இலட்­ச­மாக குறைத்­துக்கொண்டு பணத்­தையும் எடுத்துக் கொண்டு நாரம்­மல பகு­திக்கு சென்று கொடுத்தேன். அப்­போதும் அவர்­களை விடு­விக்­க­வில்லை. கொடுத்­ததில் ஒரு 1000 ரூபா நோட்டு குறை­வ­தாக கூறினர். மக­னையும் கண­வ­ரையும் திருப்பித் தர­வில்லை.
அண்­மை­யி­லேயே மகன் பய­ணித்த வேன் கைப்­பற்­றப்பட்­டுள்­ளது. அதிலும் எஞ்ஜின், செஸி இலக்­கங்கள் வேறாக்­கப்பட்­டுள்­ள­தாக புல­னாய்வுப் பிரி­வினர் கூறு­கின்றனர். என்ன நடக்­கி­றது என தெரி­ய­வில்லை. தயவு செய்து எனது கண­வ­ரையும் மகனையும் மீட்டுத் தாருங்கள் என்றார்.
இத­னை­ய­டுத்து கடத்­தப்பட்டு காணாமல் போயுள்ள மொஹம்மட் சாஜித் எனும்  நபரின் சகோதரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவரும் தனது சகோதரை மீட்டுத் தருமாறும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் எவ்வித சம்ப்ந்தமும் அற்றவர் எனவும் கூறினார்.
 குறிப்பாக விமல் வீரவன்ச தமது பிள்ளைகளை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 8 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு விடயத்தை அவர் தெரிவிப்பதானது கவலையளிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்ததுடன் இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என கை கூப்பி வேண்டுகோள் விடுத்தனர்.   நன்றி வீரகேசரி




No comments: