வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று மாலை ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட மாகாணத்தின் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும்  விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியை  ராஜினமா செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் மேற்படி இரண்டு அமைச்சுக்களையும் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம்  மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.