மரண அறிவித்தல்

.                        
                             திருமதி இரத்தினமணி சிவஞானசுந்தரம் 



மட்டக்களப்பு கோட்டமுனையை பிறப்பிடமாகவும் சிட்னி, மெல்பேர்ண் நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சன்ட கல்லூரியின் முன்னாள் மாணவியும், இளைப்பாறிய கணித ஆசிரியையுமான திருமதி இரத்தினமணி சிவஞானசுந்தரம் அவர்கள் சனிக்கிழமை (24/06/2017) மெல்பேர்ணில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற நல்லரத்தினம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் அச்சுவேலியைச் சேர்ந்த காலம் சென்ற திரு பொன்னையா சிவஞானசுந்தரம் அவர்களின் ஆருயீர் மனைவியும்

காலம் சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

அனுசியா, குருபரன், தயாபரன், ஞானபரன், சுசிலா, சுகுபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்

ஆனந்த டி சில்வா, சிவாஜினி குருபரன், விஐயகோமளா தயாபரன், பிறேமளா ஞானபரன், இரட்ணராஜ், பிரியதர்சினி சுகுபரன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்

அபினா, அஸ்வினா, நிஷாந்தி, டிவ்யா, அவித்தா, அஸ்மித்தா, விக்னேஸ், லக்ஷ்மி, சாம்பவி, சுபாணன், மகிழினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்

திருமதி முத்துரத்தினம் சிவலிங்கம், காலம் சென்ற சீவரத்தினம், காலம் சென்ற திருமதி பவமணி டயஷ், திருமதி இராசலஷ்மி அந்தோனிபிள்ளை, காலம் சென்ற சிவா, காலம் சென்ற சிவராசா, திருமதி விஐயலஷ்மி சதாசிவம், யெஐஸ்வரி ஈஸ்வரன், ஜீவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்

அச்சுவேலியைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திருமதி பவளம்மா அப்புராசா, திருமதி தங்கரத்தினம் வேலும்மயிலும், திருமதி புஷ்பரத்தினம் திருவளங்கம், சிவராமலிங்கம், செல்வரட்ணம்,
திருமதி மகேஸ்வரி ராஐதுரை, மகாதேவன், திருமதி பத்மாவதி சுந்தரலிங்கம், செல்வி சத்தியபாமா செல்லையா, திருமதி சரோஐனிதேவி கனகசபாபதி, திருமதி மனோரஞ்சிதம் இராஐவடிவேல் (ராசாத்தி), திருமதி ரோசராணி ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29/06/2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.


பார்வைக்கு:

வியாழக்கிழமை 29/06/2017, முற்பகல் 9:30 தொடக்கம் 10:30 மணிவரை.

இடம்:

Stratus Chapel,
Bunurong Memorial Park, 790 Frankston-Dandenong Road, Dandenong south, VIC 3175

இறுதிக்கிரியை இடம்பெறும் நேரம்:

வியாழக்கிழமை 29/06/2017, முற்பகல் 10:30 மணி தொடக்கம் பிற்பகல் 12:30 மணி வரை.

தொடர்புகளுக்கு:

குருபரன் (சிட்னி): 0432 160 726
ஞானபரன் (சிட்னி): 0417 494 168
சுசிலா (மெல்பேர்ன்):   0401 960 045
சுகுபரன் (சிட்னி): 0401 398 310

No comments: