உமாவின் Patchwork அமைப்புக்காக சேரனும்ஜனகனும் தங்கள் குழுவினரோடு இணைந்து ரசம் லயம் மூலம் புதுமை படைத்துவிட்டார்கள்
தாய் மண்ணிலே நிகழ்ந்த கோரப்போரிலே அங்கவீனப்பட் டவர்களுக்காக பலவழிகளிலும் உதவும் நோக்குடன் அவுஸ்திரேலியாவிலிருந்து PATCHWORK என்னும் அமைப்பை நடத்திவரும் உமாவின் அளப்பரிய சேவை பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது
நீண்ட காலமாக நடனக் கலைஞர் சேரன் சிறீபாலன் தனது நடனநிகழ்ச்சிகள் மூலம் இந்த அமைப்புக்கு அர்ப்பணிப்போடு பொருளுதவி செய்து வருவதையும் நாம் அறிவோம்
சென்ற ஞாயிறு செப்டெம்பர் 25'ம் நாள் 2016 அன்று பரமற்றா றிவர் சைட் அரங்கத்தில் சேரனோடு லய வித்துவான்ஜனகன் சுதந்திரராஜ் அவர்களும் இணைந்து பல இளைய இசைக்கலைஞர் நடனமணிகளுடன் புதுமையான நிகழ்வொன்றைப்படைத்து உமாவின் PATCHWORK அமைப்புக்கு நிதி சேகரித்து உதவிய செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது
புதுமையான நிகழ்வு என்று ஏன் கூறவேண்டும் ?
இங்கே பழமையும் புதுமையும் கைகோர்ப்பதை பார்த்தோம்
RASA LAYAM--
Neoclassical Bharathanatyam -Where Bharathanatyam Meets Contemporary Movement Theatre
Choreographed By Seran Sribalan And Composed By Janakan Suthanthiraraj
பாரம்பரிய தாள வாத்தியங்களான மிருதங்கம் கடம் தபேலா போன்றவற்றோடு நவீன டிரம்ஸ் கீபோர்டு Rhythm Pads ஐயும் இணைத்து புதுமை படைத்தார்கள் -
வாய்ப்பாட்டுடன் புல்லாங்குழலிசையும் இணைந்துகொண்டது காதுக்கு இனிமையாக இருந்தது
ஜனகனின் துரித கால ஜதிகளுக்கு இயைய சேரனின் நெறியாழ்கையிலே ஸ்னேகா ராவ் ,அனுரதி கிருஷ்ணமூர்த்தி கேர்ஷேகா சிவகுமாரன் , பானு போல் ரெமிசென் ஆகிய பிரபல நர்த்தகிகள் சேரனோடு இணைந்து அலாரிப்பு கவுத்துவம் நவரசம் தாண்டவம்
பதம் தில்லானா போன்ற பாரம்பரிய நடனங்களை நவீனம் கலந்தும் கலவாமலும் மற்றும் ''சுவர்களுக்குள்ளே'' என்னும் நவீன நடனத்தை பரீட் சார்த்த முறையிலே ஆடிப்புதுமை படைத்தார்கள்
பல்லவராஜன் நாகேந்திரன் ,கிருஷான் சேகரன், ஐங்கரன் காந்தராஜா , சாரு ராமச்சந்திர குரு , பிரணவன் பிரவீணன் ஜெயராசா சகோதரர் ஆகியோர் , ஜனகன் சுதந்திரராஜின் வழிகாட்டலில் தாளவாத்தியத்திலே இணைந்து தமது திறமையைக் காட்டினார்கள்
இவர்களுக்கு அனுசரணையாக புல்லாங்குழல் இசைத்த வெங்கடேஷ் கீபோர்டு வாசித்த கண அருணேஸ்வரன்
,இனிமையாகப் பாடிய காவ்யா ஜெய்ஷ்ங்கர் கோபிராம் சிறீரங்கநாதய்யர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்
இவ்விளம் கலைஞர்களின் இசையறிவு நடனத் திறன் பார்வையாளரை வியக்க வைத்தது
இசை ஆர்வம் மிக்க இன்றைய இளைய சமுதாயம் பாரம்பரியத்தின் ஆணிவேரை
இந்த நிகழ்வு மீண்டும் மேடையேறும்போது மேலும் மெருகு பெறும் என்பது நிச்சயம்
நிகழ்ச்சியின் நிறைவில் ,,உமா மேடையிலே தோன்றி தன்னுடைய முயற்சிக்கு ஆதரவு
அளித்த கலைஞர்கள் மற்றும் பொருளுதவியளித்தோருக்கு நன்றி கூறும்போது வன்னியிலிருந்து நேரடியாகவே மாற்றுத்திறனாளி ஒருவரின்
பேச்சையும் ஒலிபரப்பி PATCHWORK அமைப்பு வழங்கும் உதவிகளைப் பற்றிக் கூறியது நல்லதொரு செயல்
உமா தன்னுடைய உரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் தமது வாழ்வில் சுயமாக இயங்கவேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என்று வலியுறுத்தி '' நானும் ஒரு மாற்றுத்திறனாளிதான்'' என்று கூறியது கேட்போர் மனதை நெகிழவைத்துவிட்டது
No comments:
Post a Comment