.


மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று மாலை நடைபெற்றன. உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும் என்னும் தலைப்பில் மூன்று தினங்கள் நடைபெறும் முத்தமிழ் விழாவில் இரண்டாம் நாள் நிகழ்வு சுவாமி விபுலானந்தர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நாடகம் மற்றும் இசை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இன்று சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.




நன்றி http://www.seithy.com/

No comments: