( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று
உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும்
உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல்
பித்தேறி பலசெய்து பேதலித்துநிற்கின்றார் !
மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெருப்பயனே
ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க் அமைந்ததுவே
தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்
நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !
அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது
ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை
பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்
பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !
வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி
வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்
வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார்
வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !
பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்
பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும்
யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின்
அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !
யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி
பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார்
பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்
ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !
வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்
பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார்
பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்
பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !
பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்
இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்
பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்
பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !
பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்
உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்
ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்
உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !
No comments:
Post a Comment