உலகச் செய்திகள்


அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

 குடியேற்றவாசிகள் தொடர்பில் ஆசிய நாடுகள் இணக்கப்பாடு : ஸ்தம்பிதமடைந்த படகிலிருந்து 400 குடியேற்றவாசிகள் மீட்பு

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

18/05/2015 அமெரிக்க டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக சந்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேரை அமைரிக்க பொலிஸார் கைது செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 







குடியேற்றவாசிகள் தொடர்பில் ஆசிய நாடுகள் இணக்கப்பாடு : ஸ்தம்பிதமடைந்த படகிலிருந்து 400 குடியேற்றவாசிகள் மீட்பு

21/05/2015 தாய்­லாந்து மற்றும் மலே­சியா கடற்­க­ரை­களை வந்­த­டைந்த சமயம் பல தட­வைகள் திருப்பி அனுப்­பப்­பட்ட பட­கொன்­றி­லி­ருந்த 400 குடி­யேற்­ற­வா­சிகள் புதன்­கி­ழமை மீட்­கப்­பட்டு கரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.

குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் மேற்­படி ஆசிய பிராந்­திய நாடு­க­ளி­டையே எட்­டப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யொன்­றை­ய­டுத்தே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்கது.
மேற்­படி பட­கா­னது கடந்த வாரம் இயந்­திரம் பழு­த­டைந்த நிலையில் அவ­தா­னிக்­கப்­பட்­டது.

மியன்மார் மற்றும் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றி வந்த பல பட­கு­களில் இந்தப் படகும் ஒன்­றாகும்.
அள­வுக்­க­தி­க­மான எண்­ணிக்­கையில் வந்­த­டையும் குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றுக் கொள்­வ­தற்கு மலே­சியா, இந்­தோ­னே­சியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து மறுப்புத் தெரி­வித்து வந்­தி­ருந்­தன.
இந்­நி­லையில் அந்த நாடு­க­ளி­டையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.
மனி­தா­பி­மான நெருக்­க­டியை கருத்­திற்­கொண்டு குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு தற்­கா­லிக தங்­கு­மிட வச­தியை வழங்­க­வுள்­ள­தாக இந்­தோ­னே­சி­யாவும் மலே­சி­யாவும் தெரி­வித்­துள்­ளன. எனினும் தாம் ஆபத்­து­மிக்க கடல் பய­ணங்­களை மேற்­கொண்டு வரும் குடி­யேற்­ற­வா­சி­களைத் தேடும் செயற்­பாட்டில் ஈடு­படப் போவ­தில்லை எனவும் தமது கடற்­க­ரையை வந்­த­டையும் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு தங்­கு­மிட வச­தியை மட்­டுமே வழங்­க­வுள்­ள­தா­கவும் மலே­சிய வெளி­நாட்டு அமைச்சர் அனிபஹ் அமான் தெரி­வித்தார்.
சர்­வ­தேச சமூகம் அவர்­களை ஒரு வரு­டத்­திற்குள் அவர்­க­ளது சொந்த நாடு­க­ளுக்கு திருப்பி அனுப்ப அல்­லது அவர்­களை மீளக் குடி­ய­மர்த்த உதவும் என்ற நிபந்­த­னையின் கீழேயே இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறினார். இந்த விவ­காரம் தொடர்பில் இந்­தோ­னே­சியா, மலே­சியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களின் அமைச்­சர்கள் கோலா­லம்­பூரில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
தற்­போது இந்­தோ­னே­சிய கடற்­கரைப் பிராந்­தி­யத்தில் மட்டும் 2,000 க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் படகுகளில் ஸ்தம்பி தமடைந்த நிலையில் உள்ளனர். இது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு அமைச்சர் கூறுகையில், பிராந்தியத்தில் மொத் தமாக 7,000 பேருக்கும் அதிகமானோர் படகு களில் ஸ்தம்பிதமடைந்த நிலையில் உள்ளதாக நம்புவதாக தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 




No comments: