நிறைவேறியது...!
பசிலுக்கு 3 மாதம் விடுமுறை
பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்
சீகிரியா சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விடுதலை
புதிய கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் இரு வருடங்களுக்குள் பாவனைக்கு வரும்
நிறைவேறியது...!
28/04/2015 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எதிராக வாக்களித்ததோடு அஜித் குமார எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நன்றி வீரகேசரி
பசிலுக்கு 3 மாதம் விடுமுறை
28/04/2015 பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிற்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்
29/04/2015 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட உள்வாரி பல்கலைக்கழக பிக்கு மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
சீகிரியா சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விடுதலை
30/04/2015 சீகிரியா சுவரில் எழுதி சேதப்படுத்திய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்ட யுவதி ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த 18 வயதுடைய குறித்த யுவதி அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் இரு வருடங்களுக்குள் பாவனைக்கு வரும்
01/05/2015 கைவிரல் ரேகையை மையப்படுத்திய புதிய கடவுச் சீட்டும் இலத்திரனியல் அடையாள அட்டையும் அடுத்து வரும் இரு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க குறிப்பிட்டார்.
இலத்திரனியல் அடையாள அட்டைக்கன வேலைகள் ஏற்கனவே ஆட்பதிவு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறிமுகம் செய்யும் விதமாக அனைத்து வேலைப்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள கடவுச் சீட்டுக்கள் ஊடாக மோசடிகள் மிக சூட்சுமமாக முன்னெடுக்கப்படும் நிலையில் அதனை தடுக்கும் விதமாகவே இந்த புதிய கடவுச் சீட்டுக்கள் வடிவமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய கடவுச் சீட்டில் கைவிரல் ரேகையே பிரதான இடம் வகிக்கும் எனவும் அதனால் விமான நிலையத்தில் தேவையற்ற கால தாமதத்தையும் தவிர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment