இலங்கைச் செய்திகள்


ஐந்து மாணவர் கடத்தல் விவ­காரம்: கடற்­படை அதி­காரி ஒருவர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது

19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு

ரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்­ப­டை­யினர் கைது

30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு

யாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி






ஐந்து மாணவர் கடத்தல் விவ­காரம்: கடற்­படை அதி­காரி ஒருவர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது

16/03/2015 தெஹி­வளைப் பிர­தே­சத்தில் வைத்து மூன்று தமிழ் மாண­வர்கள், அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரு முஸ்லிம் மாண­வர்கள் உள்­ளிட்ட ஐவரை கடத்­தி­யமை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கடற்­ப­டையின் முக்­கிய அதி­காரி ஒருவர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த கடத்­தல்­க­ளுக்கும் அப்­போது கடற்­ப­டையில் இருந்த சில முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கும் இடையே தொடர்­புகள் உள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டிருந்த நிலையில் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் இது தொடர்பில் விசேட விசா­ரணை ஒன்று இடம்­பெற்று வரும் நிலை­யி­லேயே லெப்ரின்ட் கொமான்டர் தர கடற்­படை அதி­கா­ரியை நேற்று கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர உறு­திப்­ப­டுத்­தினார்.
குறித்த கடற்­படை அதி­கா­ரியை புல­னாய்வுப் பிரி­வினர் தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் அதற்­க­மைய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர மேலும் குறிப்­பிட்டார்.
2008 ஆம் ஆண்­டுக்கும் 2009 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் தலை நகரின் பல பிர­தே­சங்­களில் இருந்தும் கடத்­தப்­பட்டு திரு­கோ­ண­மலைஇ கொழும்பு கடற்­படை முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் காணாமல் போயுள்ள 11 பேர் தொடர்பில் 7 இற்கும் மேற்­பட்ட கடற்­படை அதி­கா­ரிகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
இந் நிலையில் குறித்த காலப்­ப­கு­திக்குள் தலை நகரின் மரு­தானை, மட்­டக்­குளி, கொட்­டஞ்­சேனை, புளூ­மென்டல் மற்றும் தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் காணாமல் போனோர் இது வரை உயிருடன் உள்­ள­னரா என்­பது தெரி­ய­வ­ராத நிலையில் இந்த காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக் கூறத்­தக்க அனை­வ­ரி­டமும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ர­ணையை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
முன்­ன­தாக இது தொடர்பில் கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கப்டன் தஸ­நா­யக்­கவை புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை செய்­து­விட்டு விடு­தலை செய்­துள்ள போதிலும் தேவை ஏற்­படின் அவரை மீண்டும் விசா­ரணை செய்­ய­வுள்­ள­தா­கவும் இந்த கடத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட குழுக்­களில் ஒன்று அவரின் கீழ் இருந்­துள்­ளமை தொடர்­பி­லான சந்­தே­கத்­தி­லேயே இந்த விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு குறிப்­பிட்­டி­ருந்­தது.
இது வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சுமார் 35 வாக்கு மூலங்­களை இந்த விவ­காரம் குறித்து பதிவு செய்துள்ள நிலையில் தெஹிவளையில் வைத்து 2008 ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட இரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளிட்ட 5 மாணவர்களின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் அதிகாரி ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 








19 ஆவது திருத்தத்திற்கு அங்கீகாரம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அமைச்சரவை பணிப்பு


16/03/2015 நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்கள் குறைப்பு உள்­ளிட்ட சில சரத்­துக்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் உத் ­தேசவரை­வுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை வெளியி­டு­மாறு அரச அச்­ச­கத்­திற்கு அமைச்­ச­ரவை அறி­வித்­துள்­ளது. அத்­துடன் தக­வ­ல­றியும் சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பிக்கவும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும் தேர் தல் முறை­மையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர் பில் அமைச்­ச­ர­வையில் இணக்கம் காணப்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.
நேற்­றை­ய­தினம் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் இடம்பெற்­றது. இக்­கூட்டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித்­த­லைவர் நிமல் சிறி­பால டிசில்வா, முன்னாள் அமைச்­சர்­க­ளான அநு­ர­பி­ரி­ய­தர்­ஷன யாப்பா, பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ், வாசு­தேவ நாய­ணக்­கார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யூதீன், அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய கட்­சி­களின் தலை­வர்கள் இக்­கூட்­டத்­தில்­பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.
இத­னைத்­தொ­டர்ந்து விசேட அமைச்­ச­ரவை கூட்டம் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு சில சரத்­துக்கள் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­துடன் அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
தற்­போது காணப்­படும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் ஜனா­தி­பதி இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பதவி வகிக்க முடி­யாது. பாரா­ளு­மன்றம் நிறு­வப்­பட்டு ஓராண்­டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு கிடை­யாது. புதிய திருத்­தங்­களின் அடிப்­ப­டையில் நான்கு ஆண்­டுகள் நிறை­வுறும் வரையில் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வுதல் ஆகி­ய­வற்­றுக்கு சட்டத் திருத்­தங்­களில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதி படை­களின் சேனா­தி­பதி, அமைச்­ச­ர­வையின் பொறுப்­பாளர், அமைச்­சர்­களை நிய­மிக்கும் அதி­கா­ரங்கள் என்­பன தொடர்ந்தும் அமு­லி­லேயே காணப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
19ஆவது திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள தகவல் அறியும் உரி­மை­யா­னது அடிப்­படை உரி­மை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஜன­நா­யக சமூகம் ஒன்றின் நீடிப்­புக்­காக தாக்கம் செலுத்தும் தேசிய பாது­காப்பு, தேசிய ஒரு­மைப்­பாடு, மக்கள் பாது­காப்பு, குற்­றங்­களை தடுத்தல் சுகா­தார பாது­காப்பு, ஏனை­ய­வர்­களின் உரி­மை­களை பாது­காத்தல்,தனிப்­பட்ட தன்­மையை பாது­காத்தல்இ இர­க­சி­ய­மாக பெரும் தக­வல்கள் வெ ளியி­டப்­ப­டு­வதை தடுத்தல்இ நீதி­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காத்தல், ஆகி­ய­வற்றை தவிர்த்தல் ஏனைய அனைத்து விட­யங்கள் தொடர்­பாக தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ளும் உரிமை மக்­க­ளுக்கு உள்­ளது என்ற சட்­ட­மூ­லத்­திற்கும் அமைச்­ச­ரவை அங்­கி­கா­ர­ம­ளித்­துள்­ளது.
அதே­நேரம் குறித்த 19ஆவது திருத்­தச்­சட்ட வரை­வா­னது அவ­சர சட்ட மூல­மாக பாரா­ளு­மன்றில் சமர்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் வர்த்­த­மான அறி­வித்­தலைத் தொடர்ந்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­னூ­டாக உயர் நீதி­மன்­றுக்கு சட்ட வியாக்­கி­யா­ணத்தைக் கோரு­வ­தற்­காக அனுப்­பி­வைக்­கப்­படும். அத­னைத்­தொ­டர்ந்து சில தினங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
62 பக்­கங்­களைக் கொண்ட 19 வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பான சட்­ட­மூலம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த புதன்­கி­ழமை இட­ம­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் போது சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பான சட்­ட­மூ­லத்தை வாசித்து ஆராய்­வ­தற்கு கால­அ­வ­காசம் அவ­சியம் என சில அமைச்­சர்கள் அறி­வித்­தி­ருந்­தனர் இதனால் அவ் அமைச்­ச­ரவை அமர்வின் போது 19 வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பாக இறுதி இணக்­கப்­பாட்­டிற்கு வரக் கூடிய சாத்­தியம் ஏற்­ப­ட­வில்லை.
அவ்­வா­றி­ருக்­கையில் நேற்­யை­தினம் நடை­பெற்ற கூட்­டத்தின் போது தேர்தல் முறைமை தொடர்பில் இணக்­க­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. இதனால் இவ்­வி­டயம் தொடர்­பாக தொடர்ந்தும் கட்­சிகள் கலந்­து­ரை­யா­ட­வி­ருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. குறிப்­பாக தேர்தல் முறைமை தொடர்­பாக ஏற்­பட்­டுள்ள கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­காக அர­சாங்­கத்தில் இடம்­பெற்­றுள்ள கட்சி தலை­வர்கள் நாளை­ய­தினம் செவ்­வாய்­கி­ழமை மீண்டும் சந்­திக்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.
அதே­வேளை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் சட்­ட­மூலம் மற்றும் தேர்தல் முறை­மையில் திருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் சட்­ட­மூலம் ஆகிய இரண்­டையும் ஒன்­றா­கவே பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வி­ருக்கும் சுதந்­திரக் கட்சி இன்­றைய தினம் அவ்­வி­டயம் தொடர்ந்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­வ­துடன் இதன்­போது தேர்தல் முறைமை தொடர்­பா­கவும் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.
முன்­ன­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நகல் வரைபு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்தவாரம் இடம் பெற்ற அரசாங்கத்தின் நிறைவேற்று சபைக்கூட்டத்திலும் இந்த நகல்வரைபுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










ரவிராஜ் எம்.பி. கொலை: 3 கடற்­ப­டை­யினர் கைது

19/03/2015 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவி­ராஜின் படு­கொலை தொடர்பில் மூன்று கடற்­ப­டை­யினர் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.


கடந்த 15ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட இவர்கள் 72 மணி நேரம் பயங்­க­ர­வாதத் தடைச்சட்­டத்­தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்ட நிலையில் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் படுத்­தப்­பட்டு நீதி மன்ற உத்­த­ரவின் பேரில் மீண்டும் விசா­ர­ணைக்­காக குற்றப் புல­னாய்வு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.
2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி நார­ஹேன்­பிட்­டியில் வைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் துப்­பாக்கி தாரி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டார். இவ­ரது படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூன்று கடற்­ப­டை­யி­னரும் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது ரவி­ராஜின் குடும்ப நலன் சார்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ராசா ஆஜா­ரானார்.
இவர் நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கையில்,
நட­ராஜா ரவிராஜ் கொலையில் சம்­பந்­தப்­பட்­ட­தாக 2006ஆம் ஆண்டு கார்த்­திகை மாதம் 12ஆம் திகதி மூன்று சந்­தேக நபர்கள் இந்த நீதி­மன்றில் ஆஜர்ப்­ப­டுத்­தப்­பட்­டார்கள் பின்னர் நான்கு தவ­ணை­களின் பின்னர் மூன்று சந்­தேக நபர்­களும் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.
இப்­பொ­ழுது ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் கொழும்பு குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் மூன்று சந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ள மூன்று சந்­தேக நபர்­களில் முத­லா­வது சந்­தேக நப­ரான ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கொமாண்டோ சம்பத் முன­சிங்க 2008 ஆம் ஆண்டு தெகி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஜந்து மாண­வர்­களில் கடத்­தலில் சம்­பந்­தப்­பட்­ட­மைக்கு சான்­றுகள் உள்­ள­ன­வென புல­னாய்­வுப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான நீதவான் நீதி­மன்றில் சான்று அளித்­துள்ளார்.
எனவே, நட­ராஜா ரவிராஜ் கொலை­யிலும் தெகி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஜந்து மாண­வர்­களின் கடத்­தல்­க­ளிலும் பிர­தான சந்­தேக நப­ராக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் கடற்­படை கொமாண்டோ சம்பத் முன­சிங்­க­விற்கும் மற்­றைய இரண்டு சந்­தேக நபர்­க­ளுக்­கு­மான விசா­ர­ணை­களை ஒரு­மித்து விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த வேண்­டு­மென புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­வி­டும்­படி நீதி­மன்­றத்தை வேண்டிக் கொண்­ட­துடன் பிர­தான நீதவான் நீதி­மன்றில் ஆட்­கொ­ணர்வு மனு விசா­ர­ணையில் தாக்கல் செய்­யப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­க­ளையும் நீதி­மன்­றிற்கு சிரேஸ்ட சட்­டத்­த­ரணி பாரப்­ப­டுத்­தினார்.
சந்தேக நபர்களான மூன்று கடற்படையினரையும மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமே பாரமளிக்கப்பட்டு நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் மேலதிக விசாரணை நீதிபதி நிரோசா பொ்னாண்டோ சித்திரை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்   நன்றி வீரகேசரி 







30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

19/03/2015 தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கொட்டகலை யூனிபீல்ட் பிரதேசத்தில் தனி வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று  இடம்பெற்றது.

 யூனிபீல்ட் வெலிங்டன் தோட்டத்தில் இயற்கை அனா்த்தங்களால் பாதிக்கப்பட்ட 30 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர். பி. திகாம்பரம் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், பெயர்பலகை தீரை நீக்கம் செய்யப்படுவதையும், அடிக்கல் நாட்டப்படுவதையும், கலந்து கொண்ட பிரமுகா்கள் மற்றும் மக்கள் தொகுதியினரையும் இங்கு படங்களில் காணலாம்.   நன்றி வீரகேசரி







குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை கட்டளை 53 வாக்குளால் நிறைவேற்றம்: கூட்டமைப்பு ஆதரவு


19/03/2015  குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டகோவை விஷேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை இன்று பாராளுமன்றத்தில் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்ததோடு ஜனநாயக தேசியக்கூட்டணி மாற்றுக்குழு உறுப்பினரான அஜித் குமார மாத்திரம் எதிராக வாக்களித்தார்.  நன்றி வீரகேசரி







யாழில் நீர் அருந்திய பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

19/03/2015 யாழ்ப்பாணம் ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய மாணவர்கள் 27பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிநீர் விஷமானதாலேயே இவர்கள் சுகயீனமடைந்துள்ளதாகவும்  இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையின்  குடிநீர் தாங்கியிலிருந்த  நீரை மாணவர் கள் சிலர் அருந்தியதையடுத்து சுகயீனமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



நன்றி வீரகேசரி


No comments: