மரண அறிவித்தல்

.
                      திருமதி பிலோமினா அன்ரன்சாள்ஸ்வின்சன்

                                                     மறைவு - 22 .03. 2015

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்கள் 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார்,  திரு.திருமதி அன்ரனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்ரன்சாள்ஸ்வின்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலா டேவிட், காலஞ்சென்ற அலன் வின்சன்சாள்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற மாக்கிரட்ஜோட்ச், மரியதாஸ்(இலங்கை), பீற்றர் ஜேசுதாசன்(கனடா), ஞானம்மா இமானுவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டேவிட் அந்தோணி அவர்களின் அன்பு மாமியும்,
வின்சன்பொனவென்சர், சுகந்தபொனவென்சர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், டிலன் அந்தோணி அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருப்பலி 28.03.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ST Gerards Catholic Church, 71 Gladstone Road, Dandenong VIC இல் கொடுக்கப்பட்டு

நல்லடக்கம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு   Springvale Botanical Cemetery, 600 Princes Highway, Springvale VIC 3171இல் இடம்பெறும் 

தகவல்
அன்ரன்சாள்ஸ் வின்சன்(கணவன்) 03 9792 9907
வின்சன்பொனவென்சர்  0421 890 110
டேவிட்                           0401 468 168
 

No comments: