உலகச் செய்திகள்


பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி

நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு

ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்










பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்; 14 பேர் பலி

பாகிஸ்­தா­னிய லாகூர் நக­ரி­லுள்ள தேவா­ல­யங்­களை இலக்குவைத்து இரு தலிபான் தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 14 பேர் பலி­யா­ன­துடன் 70 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

யுஹ­னபாத் பிர­தே­சத்தில் ஒன்­றுக்­கொன்று சுமார் அரை மைல் தொலை­வி­லுள்ள இரு தேவா­ல­யங்­களில் ஞாயிறு ஆரா­த­னைக்­கூட்­டங்கள் இடம்­பெற்ற வேளை­யி­லேயே இந்த குண்டு வெடிப்­புக்கள் இடம்­பெற்­றுள்­ளன.
இந்த குண்டு வெடிப்­புக்­களால் தேவா­ல­யத்தின் ஜன்னல் கண்­ணா­டிகள் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன.பலி­யா­ன­வர்­களில் குறைந்­தது ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உள்­ள­டங்­கு­கி றார்.

இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டவர் என கரு­தப்­படும் இருவர் அங்கு கூடி­யி­ருந்த கும்­பலால் அடித்து உதைக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­ட­துடன் அவர்களது சட­லங்களுக்குத் தீ வைக்­கப்­பட்­டது.

மேற்­படி தாக்­குதல் இடம்­பெற்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இரு சந்­தேகநபர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
தாமே இந்த தாக்­குதலை நடத்­தி­ய­தாக தெஹ்ரீக் ஈ-த­லிபான் போராளி குழுவின் ஜமாத் உல் - அஹ்ரர் பிரிவு உரிமை கோரி­யுள்­ளது.மத சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் இலக்கில் தாக்­கு­தல்­களை தொடரப் போவ­தாக அந்தக் குழு சூளு­ரைத்­துள்­ளது.
கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாக கொண்ட யுஹனபாத் பிரதேசத்தில் 100,000 க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நன்றி வீரகேசரி 






நைஜீரிய கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; 95 பேர் உயிரிழப்பு

17/03/2015 மத்­திய நைஜீ­ரி­யா­வி­லுள்ள கிரா­ம­மொன்றில் அதி­காலை வேளையில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் பெண்கள், சிறு­வர்கள் உட்­பட பெருந்­தொ­கை­யானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.

பெனு மாநி­லத்தில் எக்பா கிரா­மத்தில் இனந்­தெ­ரி­யாத துப்­பாக்­கி­தா­ரிகள் நடத்­திய தாக்­கு­தலில் 95 க்கு மேற்­பட்ட கிரா­ம­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரி­வித்­தனர்.
கிராமவாசிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்­டி­ருந்த வேளை­யி­லேயே இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
மேற்­படி பிராந்­தி­யத்தில் புலானி இனத்­துவ குழுவைச் சேர்ந்த கால்நடை வளர்ப்­ப­வர்­க­ளுக்கும் விவசாயிகளுக்குமிடையே மோதல்கள் இடம்பெறுவது வழமையாக வுள்ளது.   நன்றி வீரகேசரி








ஆப்கானில் தலிபான் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்; 7 பேர் பலி; 40 பேர் காயம்

19/03/2015 தென் ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தற்­கொலைக் குண்­டு­தாரி ஒருவர் டிரக் வண்­டி­யொன்றை செலுத்தி வந்து புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 7 பொது மக்கள் பலி­யா­ன­துடன் 40 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

ஹெல்மண்ட் மாகா­ணத்­தி­லுள்ள லஷ்கார் காஹ் நகரில் ஆளுநர், மாகாண சபைத் தலைவர், பிரதி மாகாண பொலிஸ் தலைவர் ஆகி­யோரின் வீடு­களைக் கொண்ட கட்­டடத் தொகு­திக்கு அருகில் ட்ரக் வண்­டியை செலுத்தி வந்து தற்­கொலை குண்­டு­தாரி தாக்­கு­தலை நடத்­தி­யுள்ளார்.
இந்தச் சம்­ப­வத்தில் ஆளு­நரும் மாகாண சபைத் தலை­வரும் பிரதி மாகாண பொலிஸ் தலை­வரும் உயிர் தப்­பி­யுள்­ளனர்.
மேற்­படி தாக்­கு­த­லா­னது ஆட்­க­டத்தல் தொடர்பில் கருத்­த­ரங்கு ஒன்று நடை­பெற்ற மண்­ட­ப­மொன்றில் கூடி­யி­ருந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள், பொதுச் சேவை உறுப்­பி­னர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்­டுள்­ள­தாக மாகாண பிரதி ஆளுநர் மொஹமட் ஜான் ரஸோல்யர் தெரி­வித்தார்.
இந்தத் தாக்­கு­தலில் அந்த வளா­கத்­தி­லி­ருந்த கட்­ட­டங்கள் சில சேத­ம­டைந்­துள்­ளன.மேற்­படி தாக்­கு­தலை தாமே நடத்­தி­ய­தாக தலிபான் போரா­ளிகள் உரிமை கோரியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்களில் மாகாண சபை பேச்சாளர் ஓமர் ஸஹ்வக் உள்ளடங்குகிறார்.   நன்றி வீரகேசரி 

















No comments: