உலகச் செய்திகள்


பிரான்ஸில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பாரிஸில் ஆர்ப்­பாட்டம்

குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு

எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது

மத்திய ஆபிரிக்காவில் படகு விபத்து: 100 பேரை காணவில்லை

பிரான்ஸில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து பாரிஸில் ஆர்ப்­பாட்டம்
12/01/2015 பிரான்ஸில் 3 நாட்­க­ளாக இடம்­பெற்ற வன்­மு­றை­களில் 17 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் அந்­நாட்டின் தலை­நகர் பாரிஸில் பாரிய ஊர்­வ­ல­மொன்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. மேற்­படி ஊர்­வ­லத்தில் சுமார் 40 உல­கத் ­த­லை­வர்கள் வரை கலந்து கொண்­டுள்­ளனர்.



முதல்நாள் சனிக்­கி­ழமை அந்­ந­கரில் இடம்­பெற்ற எதிர்ப்பு ஊர்­வ­லங்­களில் 700,000 பேர் வரை கலந்து கொண்­டனர்.
இந்­நி­லையில் பாரிஸ் நகரின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த சுமார் 2,000 பொலிஸ் உத்­தி­ யோ­கத்­தர்­களும் 1,350 படைவீரர்­களும் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

பாரி­ஸி­லுள்ள சார்ளி ஹெப்டோ சஞ்­சிகை அலு­வ­ல­கத்தில் கடந்த 7 ஆம் திகதி துப்­பாக்­கிச்­சூட்டை நடத்தி 12 பேரை படு­கொலை செய்து துப்­பாக்­கி­தா­ரி­க­ளுக்கு அனு­ச­ர­ணை­யாக செயற்­பட்­ட­வர்­களை தேடிக் ­கண்­டு­பி­டிக்கும் நட­வ­டிக்­கையை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.
மேற்­படி சகோ­த­ரர்­க­ளான செய்த் மற்றும் செரிப் கோயசி ஆகிய இரு சகோ­த­ரர்­களும் சஞ்­சிகை மீதான துப்­பாக்கிச் சூட்­டை­ய­டுத்து தமது காரை கைவிட்டு பிறி­தொரு காரில் தப்பிச்சென்­றிருந்தனர்.
அதன்பின் வில்லர்ஸ் கொட்­டெரெட்ஸ் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள சேவை நிலை­ய­ மொன்றை கொள்­ளை­யிட்டு காரில் தப்பி சென்ற அந்த சகோ­த­ரர்­க­ளுக்கும் பொலி­ஸா ­ருக்­கு­மி­டையில் பாரிஸின் வட­கி­ழக்­கே­யு ள்ள தேசிய நெடுஞ்­சா­லையில் துப்­பாக்கிச் சமர் இடம்­பெற்­றது.
தொடர்ந்து பாரி­ஸி­லி­ருந்து 35 கிலோ மீற் றர் தொலைவில் டம்­மார்ரின் – என் – கோய லி நக­ரி­லுள்ள தொழிற்­சாலைக் கட்­டடத்­துக் குள் நுழைந்த அந்த அந்த துப்­பாக்­கி­தா­ரிகள் அங்­கி­ருந்­த­வர்­களை பண­யக்­கை­தி­க­ளாக பிடித்துவைத்­தி­ருந்­தனர்.
ஒரு கட்­டத்தில் அந்த கட்­ட­டத்தை விட்டு வெளியே வந்து பொலி­ஸாரின் மீது துப்­பாக் கிச் சூட்டை நடத்­திய துப்­பாக்­கி­தா­ரி­க­ளான சகோ­த­ரர்கள் பொலி­ஸாரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டனர்.
அதே­ ச­மயம் கடந்த 8 ஆம் திகதி பாரிஸின் தெற்கே அமெடி கோலி­பாலி என்ற துப்­பாக்­கி­தாரி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரை சுட்­டுக்­கொன்­றி­ருந்தார்.
அதன்பின் கோலி­பாலி கிழக்கு பாரி­ஸி­லுள்ள சிறப்புச் சந்­தை­யொன்றில் பலரை பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைத்­தி­ருந்த நிலையில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட் டில் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் கோலி­ப­ாலியின் வாழ்க் கைத் துணை­யான ஹாயத் போமெட்­டி­ய­னி யை பொலிஸார் தொடர்ந்து வலை வீசித்­தேடி வரு­கின்­றனர்.பிரான்ஸில் எதிர்­வரும் வாரங்­களில் உயர் எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பிரான்ஸ் உள்­துறை அமைச்சர் பெர்னார்ட் கஸெ­னி­யுவி தெரி­வித்தார்.
அவர் ஞாயிற்­றுக்­கி­ழமை பிரித்­தா­னிய உள்­துறை அமைச்சர் தெரே­ஸா மே உள்­ள­டங்­க­லாக ஐரோப்­பிய நாடு­களை சேர்ந்த உள்­நாட்டு அமைச்­சர்­களை சந்­தித்து போரா­ளிக்­கு­ழுக்­களால் ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் குறித்து கலந்­து­ரை­யா­டினார்.
அதே­ச­மயம் சார்ளி ஹெப்டோ சஞ்­சி­கையின் இறைதூதரை அவ­தூறு செய்யும் கேலிச்­சித்­தி­ரங்­களை மீள வெளி­யிட்ட ஜேர்­ம­னிய பத்­தி­ரிகை அலு­வ­ல­க­மொன்றின் மீது தீ வைப்பு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹம்பேர்க் மோர்னிங் போஸ்ட் பத்திரிகை அலுவலகத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எவரும் காயமடையவில்லை.  நன்றி வீரகேசரி 










குரோஷியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக கொலிண்டா தெரிவு


13/01/2015 குரோ­ஷி­யாவின் ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்­சியை சேர்ந்த கொலிண்டா கிரபர் - கிரா­ரோவிக் வெற்றி பெற்­றுள்ளார்.
குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றுள்ள கொலிண்டா குரோ­ஷி­யாவின் முத­லா­வது பெண் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­க­வுள்ளார்.
அவர் மேற்­படி தேர்­தலில் 50.5 சத­வீத வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். அவ­ரது போட்­டி­யா­ள­ரான பதவி விட்டு விலகிச் செல்லும் ஜனா­தி­பதி ஐவோ ஜொஸி­போவிக் இந்தத் தேர்­தலில் 49.5 சத­வீத வாக்­கு­களை மட்­டுமே பெற்­றி­ருந்தார்.
தோல்­வியை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஜொஸி­போவிக், தேர்­தலில் வெற்றி பெற்­றுள்ள கொலிண்­டா­வுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துள்ளார்.
கொலிண்­டாவின் தேர்­த­லி­லான வெற்­றி­யா­னது குரோ­ஷி­யாவின் ஆட்சி, மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வலது சாரி கட்­சிக்கு மாறு­வ­தற்­கான அடை­யா­ள­மா­க­வுள்­ளது.
மேற்­படி தேர்­த­ல் இந்த வருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்தல் தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்­கான முக்­கிய பலப்­ப­ரீட்­சை­யாக நோக்­கப்­ப­டு­கி­றது.

முன்னாள் யூகோஸ்­லா­வி­யா­வி­லி­ருந்து 1991 ஆம் ஆண்டு குரோ­ஷியா விடு­தலை பெறு­வ­தற்கு பங்­க­ளிப்புச் செய்த குரோ­ஷிய ஜன­நா­யக ஒன்­றிய கட்­சியின் உறுப்­பி­ன­ரான கொலிண்டா (46 வயது), கடந்த காலங்­களில் வெளி­நாட்டு அமைச்­ச­ரா­கவும் நேட்டோ செய­லாளர் நாய­கத்தின் உத­வி­யா­ள­ரா­கவும் சேவையா­ற்­றி­யுள்ளார்.
தேர்தல் வெற்றியை­ய­டுத்து தலை­நகர் ஸக்­ரெப்பில் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய கொலிண்டா, குரோ­ஷி­யாவை சுபீட்­சமும் செல்­வமும் அற்ற நாடென எவரும் கூறு­வ­தற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை என சூளு­ரைத்­துள்ளார். அத்­துடன் பொரு­ளா­தார நெருக்­க­டியை களைய மக்கள் அனை­வரும் தேசிய மட்­டத்தில் ஐக்­கி­யத்­துடன் செயற்­பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
சட்ட நிபு­ண­ரான ஜொஸி­போவிக் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து குரோ­ஷி­யாவின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்து வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.அவ­ரது மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்பு அரசாங்கமானது குரோஷியாவை 6 வருட கால பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கத் தவறியமையே அவரது தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
குரோஷியா 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.  நன்றி வீரகேசரி 










எயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடித்தளத்தில் மோதி வெடித்து சிதறியுள்ளது

14/01/2015 இரு வாரங்­க­ளுக்கு முன் விபத்­துக்­குள்­ளான எயார் ஏசியா கியூ.இஸட். 8501 விமானம் ஜாவா கடலின் அடித்­த­ளத்தில் மோதிய பின்னர் வெடித்துச் சித­றி­யுள்­ள­தாக மேற்­படி விமா­னத்தின் சிதை­வுகள் தொடர்­பான ஆரம்­ப­கட்ட பகுப்­பாய்­வுகள் தெரி­விப்­ப­தாக அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
இந்­தோ­னே­சிய கடற்­படையைச் சேர்ந்த நீர்மூழ்கிவீரர்கள் விமா­னி­களின் அறை ஒலிப்­ப­திவு கரு­வியை செவ்­வாய்க்­கி­ழமை கட­லி­லி­ருந்து வெற்­றி­க­ர­மாக மீட்­டுள்­ளனர்.
கறுப்புப் பெட்­டியின் முத­லா­வது பாக­மான விமான தரவு பதிவு கருவி மீட்­கப்­பட்­ட­தற்கு மறு­நாளே இந்த கருவி மீட்கப்பட்டுள்ளது.
எயார் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 162 பேருடன் பய­ணித்த வேளை காணாமல் போயி­ருந்­தது.
மேற்­படி விமா­னத்தில் பயணம் செய்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது 48 சட­லங்கள் மட்­டுமே இது­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன. ஏனைய சட­லங்கள் கடலின் அடித்தளத்தில் விமா­னத்தின் பிர­தான உடல் பகு­திக்குள் சிக்­கி­யுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

கடந்த வாரம் விமா­னத்தின் வால் பகுதி கண்டு பிடிக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சுமார் 1.5 கிலோ­மீற்றர் தொலைவில் விமா­னத்தின் பிர­தான உடல் பகுதி உள்­ளது.
மேற்­படி விமா­னத்தின் பிர­தான உடல் பகு­தியை கண்டு பிடித்து மீட்­ப­தற்கு இது­வரை திட்டம் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என இந்­தோ­னே­சிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலை­யத்தைச் சேர்ந்த எஸ்.பி.சுப்­பி­ரி­யடி தெரி­வித்தார்.

விமா­னத்தின் ஒலிப்­ப­திவு கருவி கடலின் கீழ் சுமார் 30 மீற்றர் ஆழத்தில் விமா­னத்தின் கன­மான இறக்கை பாகமொன்றின் கீழி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளது.
இந்த கண்­டு­பி­டிப்­பா­னது எயார் ஏசியா விமானம் எவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­னது என்­பதை கண்­ட­றிய உதவும் எனக் கூறப்­ப­டு­கி­றது.
தற்போது அந்த உபகரணம் ஜாவா கடலிலிலுள்ள இந்தோனேசிய பண்டா ஏக் போர்க் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி யொருவர் கூறினார்.  நன்றி வீரகேசரி 









மத்திய ஆபிரிக்காவில் படகு விபத்து: 100 பேரை காணவில்லை


15/01/2015  மத்திய ஆபிரிக்காவில் படகொன்று தீப்பற்றி ஆற்றில் மூழ்கியதில் சுமார் 100பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பான் குயியிலிருந்து பயணத்தை மேற்படி படகானது ஒயு பான்குயி ஆற்றில் மூழ்கியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி படகு  அனர்த்தத்தில் குழந்தையொன்றின் சடலம்  மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.
படகு அனர்த்தத்தையடுத்து நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் எவரும் ஈடுபடுத்தப்படாததால் காணாமல் போனவர்களில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதை அறிய முடியாதுள்ளதாகவும் பிராந்திய அ திகாரிகள் தெரிவித்தனர்.  நன்றி வீரகேசரி



No comments: