நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள்

.

நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா


நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா
24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா
வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு விழா இந்திய தூதரக
அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் மணற்பூக்கள் என்ற
கவிதை தொகுப்பும், நடந்து முடிந்த தொல்லிசை மீட்ட வந்த தூய தமிழ்
கலைவிழாவின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.12.2014 அன்று
நந்தவனம் நடத்தவிருக்கும் பல்சுவை கலைவிழா - 2 ன் நோட்டீஸ் வெளியீடு
சிறப்பாக நடைபெற்ற‌து.


குழந்தைகளின் நடனங்கள் பாடகர்களின் இன்னிசைப்பாடல்
வந்த்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. திரு.மகேஷ்
,திரு.சரவணன் இயக்கத்தில் நநதவன சிறார்களின் தமிழைத் தேடி என்ற குறு நாடகம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றது. நிகழ்வுகளை திரு.விருதை பாரி மிகவும் சிறப்பக
தொகுத்து வழங்கினார். நநதவன நிகழ்வுகளை திருமதி.தேவிரவி தொகுத்தளித்தார்.
திரு.முனு.சிவசங்கரன் வரவேற்புரையுடன் வளமாய் தொடங்கிய விழா, இரவு 9.00
மணிக்கு திரு.ஐயப்பன் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிறையுற்றது.
Muduvai Hidayath

No comments: