இலங்கைச் செய்திகள்

கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்

வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்

இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி

ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு 

ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்

ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை 

பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்

அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு

மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

 வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

 மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
============================================================

கடற்படை வீரரால் நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்

30/12/2013    குச்­ச­வெளி பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட திரி­யாய 5 ஆம் வட்­டா­ரத்தில் 4 வயது சிறு­மி­யொ­ருவர் கடற்­படை வீரர் ஒரு­வ­ரினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வ­மொன்று நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.குறித்த பகு­திக்கு பௌசர்­களின் மூலம் நீர் விநி­யோ­கித்து வரும் கடற்­ப­டையைச் சேர்ந்த ஒரு­வ­ரி­னா­லேயே மேற்­படி சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குச்­ச­வெளி பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வீட்டில் யாரும் இல்­லாத நிலையில் தனது சகோ­த­ரி­யுடன் இருந்த சிறு­மியை அழைத்துச் சென்ற குறித்த நபர் அவரை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.


இது தொடர்பில் சிறு­மியின் பெற்றோர் குச்­ச­வெளி பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ள அதே­வேளை சிறுமி திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்பு கொண்டு வினவிய போது, அப்படி ஒரு சம்பவம் நடந்தமை தொடர்பில் தனக்கு இதுவரை தெரியவில்லை எனவும் அது தொடர்பில் தேடிப்பார்ப்பதாகவும் குறிப் பிட்டார்.   நன்றி வீரகேசரி




 மன்னார் மாவட்ட பெரும் போக விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடல்

30/12/2013    மன்னார் மாவட்டத்தில் பெரும் போக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும்  அவசர கலந்துரையாடல் இன்று மன்னார் உயிலங்குளம் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பெரும் போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்  விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,
தற்போது மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாததன் காரணத்தினால் பெரும் போக விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நீர்  இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கட்டுக்கரை குளத்தை நம்பி தற்போது 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பெரும் போக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் இரண்டு மாதங்களை கடந்த பயிராக அப்பயிர்கள் காணப்படுகின்றது.
தற்போது நெற்பயிருக்கு உரிய நீர் இல்லாமையினால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.
தற்போது எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுக்கரை குளம் இது வரை திறந்து விடாததன் காரணத்தினாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் மாதம் நெற்கதிர் வருகின்ற காலம் என்பதினால் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி அப்பகுதிகளில் கால்நடைகளினால் விவசாயிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே விவசாய பயிர்ச் செய்கையை பாதிப்படையச் செய்கின்ற வகையிலும்,பயிர்களை உண்ணும் வகையிலும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே இவ்விடயம்  தொடர்பில் உரிய அதிகாரி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது கருத்துத்தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, விவசாயிகள் எதிர் நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி எதிர்வரும் 5 ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திறந்து விடப்படுகின்ற நீர் தேவையற்ற விதத்தில் பயன்படுத்திக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாஸ்,கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தேவரதன், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் எம்.மயூரன், நீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர் கிரிணஸ் ரூபன் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நன்றி வீரகேசரி 





வடக்கில் 71,716 ஹெக்டெயர் காணிகளை கரும்பு உற்பத்திக்கென சுவீகரிக்க திட்டம்
31/12/2013   கரும்பு உற்­பத்­தியை மேற்­கொள்­வ­தற்­கென வடக்கில் பெரு­ம­ள­வான காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் எதிர்­வரும் 3ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

சீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்தி அமைச்சர்  லக் ஷ்மன் சென­வி­ரத்ன இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்க உள்ளார். எதிர்­வரும் 3ஆம் திகதி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை யில் கூடும் அமைச்­ச­ர­வையில் இது­கு­றித்து இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. சீனிக் கைத்­தொழில் அபி­வி­ருத்திஅமைச்சின் கீழ் கரும்புச் செய்­கையை அதி­க­ரித்து சீனி உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்­காக நாடு­த­ழு­விய ரீதியில் ஒரு லட்­சத்து 8 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி இந்தத் திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் வடக்கில் 71ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதற்­கான பூர்­வாங்க அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஏற்­க­னவே அமைச்சர் லக் ஷ்மன் சென­வி­ரத்­ன­வினால் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்டு அமைச்­சர்­களின் கருத்­துக்கள் பெறப்­பட்­டுள்­ளன. இத­னை­ய­டுத்தே எதிர்­வரும் 3ஆம் திகதி இறுதி அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் கரும்பு பயிர்ச்­செய்­கைக்­காக அர­சுக்குச் சொந்­த­மான 109,801ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்படும். 99 வருட குத்­த­கையின் அடிப்­ப­டையில் இந்தக் காணிகள் அமைச்­சினால் கரும்பு உற்­பத்­திக்­காக பகிர்ந்­த­ளிக்­கப்­படும். இதற்கு அனு­மதி வழங்க வேண்டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்­கி­ணங்க வவு­னியா மாவட்­டத்தில் வவ­னியா, வவு­னியா வடக்கு, வவு­னியா தெற்கு, செட்­டி­குளம், ஓமந்தை, கன­க­ராஜன் குளம், நயி­ன­மடு, தந்­தி­ரி­மலை ஆகிய பகு­தி­களில் 42 ஆயி­ரத்து 111 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் புதுக்­கு­டி­யி­ருப்பு, ஒட்­டு­சுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகு­தி­களில் 24 ஆயி­ரத்து 340 ஹெக்­டெயர் காணி­களும் மன்­னார் மாவட்­டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகு­தி­களில் 5185 ஹெக்­டெயர் காணி­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் அக்­க­ராயன் பகு­தியில் 80 ஹெக்­டெயர் காணி­களும் சுவீ­கரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
இதேபோல் மட்­டக்­க­ளப்பில் செங்­க­லடி, வவு­ண­தீவு பகு­தி­களில் 4869 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.
இந்தத் திட்­டத்தின் கீழ் அம்­பா­றையில் 450 ஹெக்­டெ­யர்­களும் அநு­ரா­த­பு­ரத்தில் 600 ஹெக்­டெ­யர்­களும் பது­ளையில் 8000 ஹெக்­டெ­யர்­களும் மொன­ரா­க­லையில் 20 ஆயி­ரத்து 116 ஹெக்­யெ­டர்­களும் சுவீ­க­ரிக்­கப்­ப­டுமென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
வடக்கில் 71 ஆயி­ரத்து 716 ஹெக்­டெயர் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போ­திலும் அந்தக் காணிகள் எப்­படி யாருக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்ற விபரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. கரும்புச் செய்­கைக்­காக காணி சுவீ­க­ரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெரு­ம­ள­வான காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளமை தற்­போ­தைய நிலையில் பெரும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
இந்தத் திட்­டத்­தின்கீழ் நாடு முழு­வ­திலும் 1 லட்­சத்து 9 ஆயி­ரத்து 801 ஹெக்­டெயர் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெ்யர் காணி வடக்கில் மட்டும் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை இந்தக் கம்பனி கரும்புச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கும் என்றே அமைச்சரவைப் பத் திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.      நன்றி வீரகேசரி







 யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்

31/12/2013   கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வுள்ள யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்­ச­பேசன் நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு திடீர் விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.
சுற்­றுலா விசாவில் விடு­மு­றைக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள அவர் நேற்­றுக்­காலை தெல்­லிப்­பழை - மாவிட்­ட­புரம் கந்­தசுவாமி கோவில், கீரி­மலை நகு­லேஸ்­வரம் ஆலயம் ஆகி­ய­வற்­றுக்குச் சென்று வழி­பா­டு­களில் ஈடு­பட்டார். பாராளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன், வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் திரு­மதி அனந்தி சசி­தரன் வலி வடக்கு பிர­தே­ச­சபை உறுப்­பினர் சுகிர்தன் ஆகி­யோ­ரையும் சந்­தித்­துள்ளார்.
உற­வினர் நண்­பர்கள் வீட்­டிற்கும் சென்ற அவர் வலி.வடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள சுன்­னாகம் சபா­ப­திப்­பிள்ளை முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.    நன்றி வீரகேசரி 






இவ்வருடத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவர்ந்த டெவோன் நீர்வீழ்ச்சி

31/12/2013   இலங்கையில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் ஒன்று டெவோன் நீர்வீழ்ச்சி. எழில் கொஞ்சும் மலையக பகுதியின் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபல்யமானது. இந்த நீர்வீழ்ச்சி மகாவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.
இந்த டெவோன் நீர்வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இந் நீர்வீழ்ச்சியானது 281 அடி உயரத்தை கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த வருடத்திலும் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு தவறவில்லை என்பது குறிப்பிடதக்கது.



 நன்றி வீரகேசரி 





ராதிகா சிற்சபேசன் நல்லூரில் விசேட வழிபாடு

31/12/2013    கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த திருமதி ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார். இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்   பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார். இதன் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசனுக்கு எடுத்துக் கூறினார்.
இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர்  விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.

 நன்றி வீரகேசரி 




ராதிகாவை தேடிய குடிவரவு அதிகாரிகள்

01/01/2014    யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள கனடா நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ராதிகா சிற்­ச­பே­சனின் நட­வ­டிக்­கை­களை குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அவ­தா­னிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றமை தெரி­ய­வந்­துள்­ளது.
நேற்று முன்­தினம் யாழ்.குடா­நாட்­டிற்கு விஜயம் செய்­துள்ள ராதிகா சிற்­ச­பேசன் யாழில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அக்­கட்சி சார்­பி­லான முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­துடன் இடம்­பெ­யர்ந்து தற்­பொ­ழுதும் இடைத்­தங்கல் முகாம்­களில் வாழ்­கின்ற மக்­க­ளு­டனும் மீள்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.
இத­னை­ய­டுத்து இவர் நேற்றும் இன்றும் வன்­னிக்கு விஜயம் செய்து கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் மக்­க­ளையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­திப்பார் எனத் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
இதற்­க­மைய அவர் நேற்­றைய தினம் கிளி­நொச்­சிக்கு விஜயம் செய்வார் என்ற எதிர்­பார்ப்பில் அங்கு காத்­தி­ருந்த இலங்­கையின் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர என்­பவர் மூன்று பெண் பொலி­ஸாரின் உத­வி­யுடன் தேடு­தல்­களை நடத்­தி­யுள்ளார்.
இதன் தொடர்ச்­சி­யாக கிளி­நொச்­சி­யி­லுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அலு­வ­ல­கத்­திற்கு நண்­பகல் ஒரு மணி­ய­ளவில் சென்று அங்­கி­ருந்­தவர்­க­ளிடம் விசா­ர­ணை­களை நடத்­தி­யுள்ளார்.
இவ்­வி­சா­ர­ணை­களின் போது ராதிகா சிற்­ச­பேசன் அங்கு வந்­தாரா எனவும் கிளி­நொச்­சியில் வேறு இடங்­க­ளுக்குச் செல்­ல­வுள்­ளமை தொடர்­பாக அங்­கி­ருந்­த­வர்­க­ளுக்குத் தெரி­யுமா எனவும் விசா­ரித்­துள்­ளனர்.
அப்­பொ­ழுது அந்த அலு­வ­ல­கத்­தி­லி­ருந்­த­வர்கள் ராதிகா சிற்­ச­பே­சனின் விஜயம் மற்றும் அவ­ரு­டைய நகர்­வுகள் தொடர்­பாக தமக்கு எது­வுமே தெரி­யாது எனப் பதி­ல­ளித்­துள்­ள­துடன் வேண்­டு­மாயின் தம்­மு­டைய அலு­வ­ல­கத்­தினை சோத­னை­யி­டு­மாறு கூறி­யுள்ளனர். அப்­பொ­ழுது குறித்த குடி­வ­ரவு குடி­யல்வு திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­யான ரண­வீர தாம் அக்­கூற்­றினை நம்­பு­வ­தாகத் தெரி­வித்து அங்கு தேடுதல் நடத்தாமல் சென்றுள்ளதாக விடயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதே­வேளை ராதிகா சிற்­ச­பேசன் நேற்று வன்­னிக்கு வருவார் என்ற எதிர்­பார்ப்பில் காத்­தி­ருந்த குடி­வ­ரவு குடி­யல்வுத் திணைக்­கள அதி­கா­ரிகள் மேலும் பல­ரி­டமும் இர­க­சி­ய­மாக விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி







ராதிகாவிடம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை

01/01/2013  இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நன்றி வீரகேசரி






 பள்ளி வாயல் மீது இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்

01/01/2014    கண்டி மாவட்டத்தின் பூஜபிட்டிய பிரதேச சபை பிரிவிலுள்ள  அம்பதென்னை, முல்லேகமயில் பள்ளி வாயல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலா பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனம்தெரியாத குழுவினர் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் வாகனம் ஒன்றில் வந்த குழு ஒன்று கற்களை எரிந்து மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் பின்னர் பள்ளி வாயலின் கதவை உடைத்துக் கொண்டு  உள்ளே வந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத் தாக்குதல் காரணமான பள்ளி வாசலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கள முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழும் இப் பிரதேசத்தின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இச் செயலை செய்திருக்கலாம் என பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த தேரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியை கேள்வியுற்ற பௌத்த தேரர்கள் உற்பட பிரதேசத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.
பிரதி அமைச்சர் அப்புல் காதர் மற்றும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் உட்பட பலர் இவ் விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் அங்கு சமூகம் தந்திருந்தனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எச் .என். பீ. அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது.
 



 நன்றி வீரகேசரி 



அரச ஆதரவுடன் அப்பட்டமான நில அபகரிப்பு

02/01/2014    முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அரச ஆதரவுடன் இடம்பெற்ற அப்பட்டமான நில அபகரிப்பை வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் சென்ற மக்கள் இடைநிறுத்தியுள்ளனர். இதே வேளை, நேற்றைய தினம் அங்கு சென்ற மக்களை திருப்பி அனுப்பிய சிங்களவர்கள் இன்று மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வருவதை அறிந்து கனரக  இயந்திரத்தை காட்டுக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடினர்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத் தீவு கொக்குத்தொடுவாயில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற  நிலையில் தற்போது மேலும் 345 ஏக்கர் தமிழர் நிலம், அரச ஆதரவுடன் அபகரிக்கப்படுகிறது. கொக்குத்தொடுவாய் மக்கள் குடியிருப்புக்களுக்கு  அண்மையில் உள்ள கோட்டைக்கேணி, குஞ்சுக்குளம், அம்பட்டம்வாய்க்கால், கொத்தியகாடு, வெளிதொட்டக்கண்டக் குளம், வெள்ளக்கல்லடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 345 ஏக்கர் பரப்பளவுள்ள தமிழர்  நிலமே இவ்வாறு  புதிதாக அபகரிக்கப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
தகவலறிந்த அக்காணிகளுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் நேற்று சம்பவ இடத்திற்கு  சென்று அவதானித்துள்ளனர். எனினும் குறித்த இடத்தில் காடழிப்பை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள், அக்காணிகள் ஆளுக்கு 50 ஏக்கர் வீதம் 7 பேருக்கு இலங்கை அமைச்சர் ஒருவரால் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு சென்ற மக்களையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இது பற்றி கொக்குத்தொடுவாய் மக்கள் நேற்றிரவு ரவிகரனிடம்  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலையில் ரவிகரனுடன் கொக்குத்தொடுவாய் மக்கள் காடழிப்பு இடம்பெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். உழவு இயந்திரத்தில் மக்கள் ரவிகரனுடன் வருவதை அறிந்து கொண்ட சிங்களவர்கள் தாங்கள் பயன்படுத்திய இரண்டு கனரக இயந்திரங்களையும் காடுகளுக்குள் உருமறைப்புச் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற ரவிகரன் குறித்த நிலப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தார்.  இரு கனரக இயந்திரங்களும் இலக்கத் தகடு இல்லாமலிருந்ததை ரவிகரன் நேரில் அவதானித்தார்.
அந்நிலப்பகுதியில் சுமார் 63 ஏக்கர் தமிழருக்குரிய  அனுமதிப் பத்திரக்காணிகள் என்றும்  மிகுதி  நிலப்பகுதிகள் தமிழரின் அறுதி உறுதிக் காணிகள் என்றும் தமது காணிப் பத்திரங்களை தமிழ் மக்கள் தனக்கு காட்டினார்கள் என்றும்  ரவிகரன் தெரிவித்தார். இந்நில அபகரிப்பு  அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெறுவது மிகக்கேவலமான விடயம் எனும் அவர் தெரிவித்தார். இவ்விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் கூறியதாக  ரவிகரன் மேலும் தெரிவித்தார். இந்த அபகரிப்புத் தொடர்பான மகஜர் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வருகின்ற  திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் ஒப்படைக்கவுள்ளனர் என தெரியவருகிறது.


 நன்றி வீரகேசரி






மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

03/01/2014     மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் குறித்த பகுதியில் உள்ள மனித புதைகுழி தோண்டப்பட்டது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர்    முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.
ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும்இ சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை  அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவு படுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன.
குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 நன்றி வீரகேசரி




வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

04/01/2014      வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை என வவு­னியா பொது வைத்­தி­ய­சாலை தாதி­யர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
2014 ஆம் ஆண்டு தாதிப் பயிற்சி பெற்று வெளி­யே­றிய சுமார் 1,800 க்கும் மேற்­பட்ட தாதி­யர்­களில் வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு 95 தாதி­யர்கள் கோரி­யி­ருந்த போதிலும் 12 தாதி­யர்கள் மாத்­திரம் வழங்­கப்­பட்டுள்ளனர். அவர்­களில் ஒன்­பது பேரே தமது பொறுப்பை ஏற்­றுள்­ளனர்.
இதே­வேளை, வட­மா­கா­ணத்­திற்கு 46 தாதி­யர்­களே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 41 பேரே கட­மையை பொறுப்­பேற்­ற­மையால் மாகா­ணத்­திற்கு தேவை­யான தாதி­யர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சகல வச­தி­களும் உள்ள வவு­னியா பொது­வைத்­தி­ய­சா­லைக்கு ஒன்­பது தாதி­யர்கள் போது­மா­ன­வர்கள் இல்லை எனவும் இனி­வரும் காலங்­களில் தாதியர் படிப்பை முடித்து வெளி­யே­று­ப­வர்­களை இவ் வைத்­தி­ய­சா­லைக்கு நிய­மிக்­கக்­கோரி இவ் ஆர்ப்­பாட்­டத்தில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
வவு­னியா அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இவ் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் 12 மணி தொடக்கம் 01 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது. நன்றி வீரகேசரி





மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


03/01/2014     பள்ளிவாசல்கள், கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ மதஸ்தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து அக்குறணை நகரில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலி தலமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் அஸாத் சாலி கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக நாட்டில் 29 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இறுதியாக அம்பதென்னையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. இதன் பின் இவ்வாறான செயல்கள் இடம் பெறாது தடை செய்வதற்கு அரசை வற்புறுத்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாகவே இவ்வார்ப்பாட்டம் இடம் பெறுகின்றது எனத் தெரிவித்தார்.


No comments: