உலகச் செய்திகள்


தென் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பிரதான நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

பொலி­வி­யாவின் முதல் தொலைத்­தொ­டர்­பாடல் செய்­மதி

சிரி­யாவில் கார்க் குண்டுத் தாக்­குதல் 5 சிறு­வர்கள் உட்­பட 7 பேர் பலி

தென் சூடானில் எண்ணெய் வளம் மிக்க பிரதான நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

23/12/2013                      ''இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் அந்நாட்டிற்கான அமெரிக்க மற்றும் சர்வதேச ஆதரவை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யும்'' -–அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை
தென் சூடானின் எண்ணெய் வளம்­மிக்க முக்­கிய மாநி­ல­மான யுனிட்­டி­யையும் நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­க­ளையும் கிளர்ச்­சி­யா­ளர்கள் கைப்­பற்­றி­யுள்­ள­தாக முன்னாள் உப ஜனாதி­பதி ரெயிக் மாசர் தெரி­வித்தார்.
அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராடும் படை­யினர் தனது கட்­ட­ளையின் கீழேயே செயற்­ப­டு­வ­தாக மாசர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். மாசர் ஒரு வாரத்­துக்கு முன் அர­சாங்­கத்தை கவிழ்க்க சதிப் புரட்­சி­யொன்றை முன்­னெ­டுத்­த­தாக ஜனா­தி­பதி சல்வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ள நிலை­யி­லேயே மாசரின் மேற்­படி அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.
சிரியாவில் அர­சாங்கப் படை­யி­ன­ரு­ட­னான மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு இதுவரை குறைந்­தது 500 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். தென் சூடானில் நிலவும் நெருக்­க­டியை களைய அர­சியல் வழி­மு­றை­யொன்றை கண்­ட­றிய அந்­நாட்டில் மோதல்­களில் ஈடு­பட்­டுள்ள இரு தரப்­பி­ன­ரையும் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் கோரி­யுள்ளார்.



இரா­ணு­வத்­தி­னரைப் பயன்­ப­டுத்தி அதி­கா­ரத்தைப் கைப்­பற்­று­வ­தற்­கான எந்­த­வொரு முயற்­சியும் அந்­நாட்­டிற்கு அமெ­ரிக்­காவும் சர்­வ­தேச சமூ­கமும் நீண்ட கால­மாக வழங்கி வரும் ஆத­ரவு முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு வழி­வகை செய்யும் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா எச்­ச­ரித்­துள்­ள­தாக வெள்ளை மாளிகை தெரி­வித்­தது.
தென் சூடானில் விமா­ன­மொன்று தாக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு குழு­வி­ன­ருடன் கலந்­து­ரை­யாடி வரும் பராக் ஒபாமா, யேம­னி­லுள்ள அமெ­ரிக்­கர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த தென் சூடான் தலை­வர்­களை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
பெரு­ம­ளவில் கிறிஸ்­த­வர்­களைக் கொண்ட தென் சூடானில் யுத்த நிறுத்­த­மொன்றை அமுல்­ப­டுத்த உலக கிறிஸ்­தவ தலை­வர்கள் அழைப்பு விடுத்­துள்­ளனர்.
மாச­ருக்கு விசு­வா­ச­மான போரா­ளி­களின் ஆக்­கி­ர­மிப்­பி­லுள்ள பொர் நகருக்கு அண்­மையில் 3 விமா­னங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் காயமடைந்த 4 அமெரிக்கர்களும் நைரோபியிலுள்ள மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேற்படி விமானங்கள் உகண்டாவுக்கு சொந்தமானவை என கருதியே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நம்பப் படுகிறது.   நன்றி வீரகேசரி









பொலி­வி­யாவின் முதல் தொலைத்­தொ­டர்­பாடல் செய்­மதி

 23/12/2013      பொலி­வியா தனது முத­லா­வது தொலைத்­தொ­டர்­பாடல் செய்­ம­தியை விண்­ணுக்கு வெற்­றி­க­ர­மாக ஏவி­யுள்­ளது.
சீனாவின் சிசுவான் மாகா­ணத்­தி­லுள்ள தள­மொன்­றி­லி­ருந்து இந்த செய்­மதி ஏவப்­படும் காட்சி லா பாஸ் நகரில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பெரிய திரையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.
இந்த செய்­ம­திக்கு ஸ்பெயின் கால­னித்­துவ ஆட்­சிக்கு எதி­ராக போரா­டிய பூர்­வீக இனத்தைச் சேர்ந்த வீர­ரது பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.     நன்றி வீரகேசரி










சிரி­யாவில் கார்க் குண்டுத் தாக்­குதல் 5 சிறு­வர்கள் உட்­பட 7 பேர் பலி


23/12/2013     சிரிய ஹொம்ஸ் மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற கார்க் குண்டுத் தாக்­கு­தலில் 5 பாட­சாலைச் சிறு­வர்கள் உட்­பட 7 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
ஒம் அல்- அம்ட் நக­ரி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லைக்கு அருகில் இந்தக் குண்டு வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது. பலி­யா­ன­வர்­களில் இரு பணி­யா­ளர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். அத்­துடன் இந்த சம்­ப­வத்தில் 5 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இந்­நி­லையில் சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் சிரியா தொடர்பில் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில், அந்­நாட்டில் இடம்­பெற்ற மோதல்­களில் குறைந்­தது அரை மில்­லியன் பேர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் மில்­லி­யன்­க­ணக்­கானோர் தொடர்ந்து இடம்­பெ­யர்ந்த நிலையில் உள்­ள­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்­கப்­ப­டாமை கார­ண­மாக அவர்­களில் பலர் உயி­ரா­பத்­தான நிலையில் உள்­ள­தாக மேற்­படி சங்கம் தெரி­வித்­துள்­ளது.
ஆதலால் சிரிய அர­சாங்­கமும் கிளர்ச்­சி­யா­ளர்­களும் 33 மாத கால­மாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள அனைத்து மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி










No comments: