தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும்

.


ஈழத்தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும் கடந்த 14/12/13 மாலை 06.30 Vermont south community  center ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.பரமு பரமநாதன் தலமையில்  நடைபெற்றது இரண்டு நிமிட அகவணக்கதுடன்.ஆரம்பித்து  வரவேற்புரையை திரு.பரமநாதன் வழங்க  மாணவன் சுதன் அவர்கள்  தமிழ் கற்றதையும் தமிழால் தான்பெற்ற  பெருமையையும் தமிழின் பெருமையையும் அழகான தமிழில் எடுத்துரைதார் 
திரு. சதிஸ் நாகராசா சிறப்புப் பேச்சின் போது அவரின் வாழ்வனுபவத்தின் சில பகுதிகளையும், தமிழின் சிறப்பையும்,பற்றி சிறந்த உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதை ஒன்றை முத்தாப்பாய் தந்து சிறப்புரையை நிறைவு செய்தார்..
வீசி பழைய மாணவர்களின்  பட்டி மன்றம் ”மனிதன் பூரணமடைவதற்கு” பெற்றோரே காரணம்  என்று ஒரு குழுவினர்  இல்லை பிறகாரணிகளும் பங்களிக்கின்றன என்று  மற்றைய குழுவினரும் வாதாடினர்  எல்லா மாணவர்களும் மிகச்சிறப்பாக தமது குழுவுக்காக மிகச் சிறப்பாக தம்து வாதங்களுக்காக நல்ல உதாரணங்களை முன்னிறுத்திப் பேசினார்கள்.
கடைசியாக விசி பாடத்திட்டத்தின்  ஒருங்கிணைப்பாளர்  திரு.ரவிஸ்கந்தா கடந்தா ஆண்டு, நடப்பாண்டு திட்டங்களையும் மாணவர்களின் வளர்ச்சியையும் மிகச் சுருக்கமாக கூறி அமர்ந்தார் அதன் பின் மாலை விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.     

            
சந்திரன் சண்முகம் 

No comments: