நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை
சிங்கப்பூரில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கலவரம்
பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்
நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
09/12/2013 இந்தியாவில் அடுத்த ஆண்டு, பாராளுமன்ற
தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள
டில்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு
மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி
பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் கட்சி
படுதோல்வியடைந்துள்ளது. இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க
மாற்றமாக, தலைநகர் டில்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியமைத்துவந்த
காங்கிரஸை, புதிதாக வந்த 'ஆம் ஆத்மி' கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளி
இரண்டாம் நிலைக்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடும் பின்னடைவை
சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முடிவு பாராளுமன்ற
தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கலக்கத்தில் உள்ளது.

டில்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட
மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களின் வாக்குபதிவு கடந்த
வியாழக்கிழமை இடம்பெற்றது. இதனையடுத்துஇ இந்த வாக்குகள் எண்ணும்
பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தது.
டில்லியை இழந்தது காங்கிரஸ்
ஜனநாயகத்தின் வெற்றி என்கிறது 'ஆம் ஆத்மி' இதில், 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைத் தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது.
34 இடத்தை பெற்று பாரதிய ஜனதா கட்சி இந்த மாநிலத்தில் வெற்றிபெற்றது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 27 இடங்களை பிடித்து இரண்டாம்
இடத்தைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் ஊழல் தொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் வீடு
வீடாகச் சென்று மேற்கொண்ட பிரசாரமே காங்கிரஸின் பின்னடைவுக்கும்
'ஆம் ஆத்மி'யின் வெற்றிக்கும் காரணமாக அமைந்ததாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து 'ஆம் ஆத்மி' தலைவர் அர விந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கையில்,
இது என்னுடைய வெற்றி அல்ல. புதுடில்லி தொகுதி மக்களின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி'' என்றார்.
'பெரிய கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு எச்சரிக்கை'
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
'முதல் தேர்தலிலேயே ஹஆம் ஆத்மி' கட்சியின் வளர்ச்சி மற்ற பெரிய
கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதேநேரம், காங்கிரஸ்
கட்சி, ஒருபோதும் 'ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவு அளிக்காது'' என்றார்.
கட்டுப்பணத்தை இழந்தது தே.மு.தி.க.
இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்டுப்பணத்தை இழந்தது.
இத் தேர்தல் குறித்து முன்னதாக கருத்து தெரிவித்திருந்த விஜயகாந்த்,
'வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை'' என்று குறிப்பிட்டிருந்தமை
இங்கு குறிப்பிடத்தக்கது.
தொங்கு சட்டசபை?
நேற்று 5 மணிவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின்படி பாரதிய ஜனதா
கட்சி 34 இடங்களை பெற்றிருந்தது. டில்லியில் ஆட்சி அமைக்க 36
சட்டசபை உறுப்பினர்களின் பலம் வேண்டும் என்ற நிலையில்இ பாரதிய
ஜனதாவுக்கு 2 குறைவான நிலை உள்ளது. இதனால்இ டில்லி சட்டசபை
தேர்தலில் யாருக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு
தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, 3 சுயேச்சைகளின் ஆதரவை
பெறும் பட்சத்தில் டில்லியில் பாரதிய ஜனதாவின் ஆட்சி அமைக்கும். அவ்வாறு நிகழாத பட்சத்தில் டில்லி மாநிலத்தில் தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
ராஜஸ்தானும் காங்கிரஸின் கை நழுவிச் சென்றது
ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்
சரிவு ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சி இம்மாநிலத்தில் பல இடங்களில்
முன்னிலை வகித்தது. இதனால், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை இழக்கும்
நிலை உருவானது.
200 தொகுதிகளை கொண்ட இம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 158
இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 26 இடங்களிலும்இ மற்றவை 15
இடங்களிலும் முன்னிலை வகித்தன.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. சாதனை
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 157
தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 62 இடங்களிலும், மற்றவை 7
இடங்களிலும் முன்னிலை பெற்றன.
மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் செளகான் தலைமையிலான பாரதிய ஜனதா
கட்சியின் ஆட்சி உள்ள நிலையில், இப்போது இடம்பெற்ற தேர்தலின் மூலம்
பாரதிய ஜனதா தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 71, பாரதிய ஜனதா 143 இடங்களில்
வெற்றி பெற்றிருந்தன. ஆனால், இம்முறைத் தேர்தலிலில் பாரதிய ஜனதா
கட்சி மேலதிக இடங்களில் முன்னிலை பெற்று சாதனை படைத்தது. இதில், காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளை இழந்தது.
சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைத்த பா.ஜ.க.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி
ஆட்சியை கைப்பற்றியது. இதில், பாரதிய ஜனதா 48 இடங்களையும்,
காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், மற்றவை இரண்டு இடங்களையும்
பெற்றுக்கொண்டன.
இந்த மாநில சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியே
வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதற்கு வாக்குகள்
எண்ணப்பட்ட நேரத்திலிருந்து காங்கிரஸ் முன்னிலை வகித்ததே காரணம்.
ஆனால், நேரம் செல்லச்செல்ல பாரதிய ஜனதா, - காங்கிரஸிடையே பெரும்
போட்டி நிலவியது. இறுதியில் அம்மாநிலத்தையும் பாரதிய ஜனதா
கைப்பற்றியது.
பாராளுமன்ற தேர்தல் கலக்கத்தில் காங்கிரஸ்
இதன்படி, நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி
பெற்றுள்ளது. 'ஆம் ஆத்மி' கட்சியால் காங்கிரஸ் கட்சி, தலைநகர்
டில்லியை இழக்க நேரிட்டது. எனவே, இந்த முடிவுகள் காங்கிரஸுக்கு பலத்த
பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இந்த
தேர்தல் முடிவுகள் அதில் எதிரொலிக்குமா என்ற கலக்கத்தில் காங்கிரஸ்
தற்போது உள்ளது.
இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாகத்
தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சிஇ மக்களின் தீர்ப்பை ஏற்பதாகத்
தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட பிரசாரங்களும் இந்த
வெற்றிக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுவதால் அடுத்த ஆண்டு
இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்பால் அனைவரின் கவனமும்
திரும்பியுள்ளது.
பா.ஜ.க. தொண்டர்கள் எங்கும் கொண்டாட்டம்
இதனிடையே, தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்ததைத்தொடர்ந்து
பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
பல இடங்களில் தொண்டர்கள் இனிப்புக்களை பகிர்ந்தும் பட்டாசுகளை
வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
டில்லி வந்தார் மோடி
அதேநேரம், நரேந்திர மோடியும் குஜராத்திலிருந்து புறப்பட்டு
டில்லிக்கு விரைந்து வந்தார். அப்போது அவரை பாரதிய ஜனதாவின் மூத்த
நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
'2014 இல் மோடி பிரதமராவது உறுதி' - ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
நான்கு மாநில தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, 2014 இல் நடைபெறவுள்ள
பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராவார் என ம.தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சட்டசபைத் தேர்தல்
முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை வரலாறு காணாத
படுதோல்வி கிடைத்துள்ளது.
தமிழக வாழ்வாதாரங்களுக்கு
தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், இலங்கைத் தமிழர் படுகொலையில் பங்கா
ளியாகச் செயற்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு,
காங்கிரஸின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள
பாராளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு நான்கு
மாநில தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறுகின்றன. அந்தத் தேர்தலில்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்யம்தான் மக்களின் தீர்ப்பாக
இருக்கும்.
டில்லியில் ஹஆம் ஆத்மி' கட்சி, ஓராண்டு காலத்தில் மக்களின் மதிப்பையும்,
ஆதரவை யும் பெற்று மதிக்கத்தக்க இடங்களைப் பெற்றுள்ளது, பாராட்டுக்கு
உரியதாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை

மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது. நன்றி வீரகேசரி
சிங்கப்பூரில் இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் கலவரம்
10/12/2013 சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என பிரபலம் பெற்ற பகுதியில் தனியார் பஸ்ஸொன்றால் மோதுண்டு 33 வயது இந்தியப் பிரஜை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு பலியானதையடுத்து அங்குள்ள பிரதேசவாசிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வீதிகளில் இறங்கிய சுமார் 400 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
பொலிஸாரை நோக்கி கற்களை வீசியதுடன், பொலிஸ் கார்களுக்கும்
அம்புலன்ஸ் வண்டியொன்றுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.
சிங்கப்பூரில் கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலப் பகுதியில் கலவரமொன்று இடம்பெறுவது இதுவே முதற் தடவையாகும்.

இந்நிலையில், பொலிஸார் பெரும் போராட்டத்தின் மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும், கலவரத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் 27 தென் ஆசியர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.25 மணியளவில் தனியார் பஸ்ஸொன்று
குறிப்பிட்ட நபரை மோதியது குறித்து அவசர சேவைப் பிரிவுக்கு
அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவசர
சேவைப் பிரிவினர் பஸ்ஸின் கீழ் சிக்கியிருந்த அந்நபரின் உடலை மீட்க
முயற்சித்தபோது அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.

இதன்போது சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு சேவைக்குச் சொந்தமான 9 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள் 7 வருடத்துக்கு
மேற்பட்ட சிறைத்தண்டனையையும் பிரம் படித் தண்டனையையும் எதிர்கொண்டுள்
ளனர். நன்றி வீரகேசரி
பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்
10/12/2013 அமெரிக்காவின்
லூசியானா மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் நபர்
ஒருவர் தூங்கிச் சென்று பிறகு விழித்துப் பார்க்கும்போது விமானத்தின்
கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.

ஜன்னல் ஓர ஆசனத்தில்அமர்ந்திருந்த வாக்னர் என்ற அந்த நபர் நன்றாகத் தூங்கிவிட்டார். விமானம் ஹூஸ்டன் வந்து விமானம் நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. விமானத்தின் உள்ளே நபர் ஒருவர் இருப்பது தெரியாமல் இது நடந்துள்ளது.
வாக்னர் விழித்துப்பார்க்கும்போது இருட்டில் தனியாக இருப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளார். நல்லவேளையாக அவரது தொலைப்பேசி சிக்னல்கள் செயலில் இருந்தது.


ஜன்னல் ஓர ஆசனத்தில்அமர்ந்திருந்த வாக்னர் என்ற அந்த நபர் நன்றாகத் தூங்கிவிட்டார். விமானம் ஹூஸ்டன் வந்து விமானம் நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. விமானத்தின் உள்ளே நபர் ஒருவர் இருப்பது தெரியாமல் இது நடந்துள்ளது.
வாக்னர் விழித்துப்பார்க்கும்போது இருட்டில் தனியாக இருப்பதைக் கண்டு மிரண்டு போயுள்ளார். நல்லவேளையாக அவரது தொலைப்பேசி சிக்னல்கள் செயலில் இருந்தது.

நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment