எளிமையான சமோசா ரெசிபிக்கள்!!!

.
மாலையில் நல்ல மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவை தான். பெரும்பாலும் இவற்றில் சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த சமோசாக்களை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். அதுமட்டுமின்றி, சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமான சுவைகளைக் கொண்டவை. இப்போது அவற்றில் சில எளிமையான சமோசாக்களின் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, வீட்டில் செய்து மகிழுங்கள்.
வெஜிடேபிள் சமோசா குழந்தைகள் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டால், அவர்களுக்கு 2-3 காய்கறிகளைக் கொண்டு சமோசா செய்து கொடுக்கலாம். இதனால் அந்த சமோசா சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.




ஸ்நாக்ஸ்களில் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன. அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்: உள்ளே வைப்பதற்கு.... உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது) பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது)குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு.... மைதா - 2 கப் எண்ணெய் - 3 கப் உப்பு - 1 சிட்டிகை தண்ணீர் - 2 கப்
செய்முறை: ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

காளான் சமோசா காளான் சமோசா ஒரு அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைக் கொடுக்கக்கூடியது. மேலும் இது ஈஸியான செய்முறையைக் கொண்ட சமோசா என்றும் சொல்லலாம்.
இப்போது அந்த காளான் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 1/2 கப் உப்பு - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு... வெங்காயம் - 1 (நறுக்கியது)பட்டன் காளான் - 300 கிராம் (பொடியாக வெட்டியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான காளான் சமோசா ரெடி!!!

ஹரியாலி சமோசா ஹரியாலி சமோசாவின் ஸ்பெஷலே பட்டாணி, பீன்ஸ், அவல் போன்றவற்றை கொண்டு செய்வது தான்.இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சமோசாவும் கூட.
சமோசாவை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை காய்கறிகள் கொண்டு செய்வதால் தான். மேலும் சமோசாவானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். அந்த வகையில் இப்போது ஹரியாலி சமோசாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதனை டீ அல்லது காபி குடிக்கும் போது செய்மு சாப்பிட்டு, மாலை வேளையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 1 கப் பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கி, வேக வைத்தது) அவல் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன் ஓமம் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு(பொரிப்பதற்கு) உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் அவல் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின் ஒரு பௌலில் சிறிது மைதா மாவை போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சிறு சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் கூம்பு வடிவத்தில் செய்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து, முனையை மைதா பேஸ்ட் உதவியால் மூடிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான ஹரியாலி சமோசா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வெங்காய சமோசா வெங்காய சமோசா மிகவும் ஈஸியான மற்றும் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதற்கு வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். தற்போது வெங்காயத்தின் விலை அதிகமாக இருப்பதால், இது உலகிலேயே மிகவும் விலை அதிகமான ரெசிபி என்று சொல்லலாம்.
இப்போது சமோசாக்களில் ஒன்றான வெங்காய சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: மைதா - 3 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 1 கப் உள்ளே வைப்பதற்கு... வெங்காயம் -2 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய்- 1/2 கப்
செய்முறை: முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து, ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, இறக்க வேண்டும். அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து,இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி!!!
சிக்கன் சமோசா சிலருக்கு அசைவ உணவுகள் தான் பிடிக்கும். அத்தகையவர்கள் சிக்கனை சமோசா செய்து சாப்பிடலாம். அந்த சிக்கன் சமோசாவை கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: 150 கிராம் கோழிக்கறி, 4 பச்சை மிளகாய், 250 கிராம் வெங்காயம், 6 கிராம்பு, 2 தக்காளி, சிறிது கொத்துமல்லி, கொஞ்சம் அப்பளம், தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய், மைதா கரைசல்
செய்முறை: எலும்பு இல்லாத கோழிக்கறியை நன்கு கழுவி நறுக்கி வைத்திக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்புடன் நறுக்கி பொருட்களையும் கோழிக்கறியையும் சேர்த்து வதக்கவும். கறி வெந்ததும் உப்பு சேர்க்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். அப்பளத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து எடுத்து வைக்கவும். அதன்மேல் கறி கலவையை வைத்து முக்கோணமாக மடித்து மைதா கரைசலால் ஓரத்தை ஒட்டவும். கறிக்கலவை அனைத்தையும் இதுபோல் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சமோசா ரெடி.

ஸ்வீட் சமோசா குழந்தைகள் இனிப்புக்களைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அவர்களுக்கு ஸ்வீட் சமோசா செய்து கொடுக்கலாம்.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை தமிழ்நாட்டிலும் வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலத்தவர் அழைப்பின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அங்கே வகை வகையான இனிப்பு வகைகளை சமைத்திருந்தனர். அதில் இருந்த இனிப்பு சமோசா சாப்பிட சுவையாக இருந்தது. உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்
தேவையானப் பொருட்கள் மைதாமாவு - கால் கிலோ தேங்காய் – 1 வெல்லம் கால் கிலோ எண்ணெய் பொரிக்க தேவையான அளவு ஏலக்காய் பொடி – 2 டீ ஸ்பூன்
செய்முறை மைதா மாவினை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்துக் கொள்ளவும்.தேங்காய் பூரணம் தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து இனிப்பு சமோசா போலச் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை நான்கு நான்காக போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும்.குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவர். வெல்லம், தேங்காய் பூரணம் என்பதால் பெரியவர்களும் சாப்பிடலாம். தேங்காய் பூரணத்துக்குப் பதிலாக கடலைப் பூரணமவைத்தும்இனிப்புசமோசாசெய்யலாம்.    
Nanri:Kaavirimainthan                                                                                                                                                                               

No comments: