மரண அறிவித்தல்

.


புத்திசிகாமணி இராமநாதன் காலமானார் 



பிறப்பு 24 -11- 1935 -இறப்பு 25-06-2012    













ஏழாலை வடக்கை பிறப்பிடமாக கொண்டவரும், அவுஸ்திரேலியாவில் Strathfield ஐ  வசிப்பிடமாகக்  கொண்டவரும், Spiceland முன்னாள் உரிமையாளருமான புத்திசிகாமணி  இராமநாதன்  அவர்கள் 25-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற புத்திசிகாமணி இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ரத்னாவின் அன்புக் கணவரும், கஜன், சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சதிஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,  இஷான், யுவன் ஆகியோரின் அன்பு பாட்டனுமாவார்.
இவர் பத்மநாதன், சிதம்பரநாதன், செல்வராசா, தவமணி ஆகியோரின் சகோதரனும், சித்திரா நடராஜா, மகேசன், கனேசன், ரஞ்சன் கந்தவனம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை Strathfield-Town Hall, 65 Homebush Road,Strathfield என்ற இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ஈமக்கிரியைகளும், தகனக்கிரியையும்  Macquarie Park crematorium, corner of Delhi and Plassey Roads, North Ryde என்ற இடத்தில் 30-06-2012 சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 2 மணிவரை நடைபெறும்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

No comments: