அன்றொருநாள் - கவியரசு கண்ணதாசன்


.
சென்னை பம்மல் கவியரசர் கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் நடத்திய
விழாவில் கவியரசரின் மகன் கண்மணிசுப்பு அவர்கள் கூறியது.
   கவியரசரின் உறவினர் ஒருவர் சொந்தப்படம் எடுக்க, அதற்கு கவியரசரை பாடல் எழுதவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதன் படி கவியரசரை அணுகிய போது படத்தின் பெயரரை கேட்டார். சூதாட்டம் என்றதும், இந்த பெயர் கவியரசருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. எனவே படத்தின் பெயரை மற்றச் சொன்னால் அது அவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் என்பதால், மங்களகரமாக வாழ்த்தி பாடலை எழுதி தொடங்கி வைத்தார். அந்த சிந்தனையில் உதித்ததுதான் “விளக்கேற்றி வைக்கிறேன்.. என்ற அருமையான பாடல். அந்த படத்தை வெற்றிபடமாகியது என்பதும் குறிப்பிடதக்கது. இது போன்ற விடயங்களில் கவியரசர் முக்கிய கவனம் செலுத்தினார். ஒருமுறை சென்னை அண்ணாசாலையில் புதிய படம் ஒன்றின் விளம்பரம் கவியரசரின் கண்ணில் பட்டது. “சென்னை எங்கும் விரைவில் தீஎன்பதாக தீ படத்திற்கு விளம்பரம் செய்திருந்தார்கள். இதைக் கண்ட கவியரசர் மனம் பதறினார். சில தினங்களில் அண்ணாசாலையில் இருக்கும் எல்.ஐ.சி கட்டிடம் தீப்பற்றி எரிந்தது!

Nanri: kaviyarasuminnanchal

1 comment:

kannansekar.p said...

நன்றி
-கண்ணன்சேகர்
கவியரசு மின்னஞ்சல்