அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி பெற்றது.

.
இந்தியா அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக மைகேல் கிளார்க் 111 ஓட்டங்களும் (138 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஒயிட் 89 ஓட்டங்களும் (49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக வீரட் கோக்லி அபாரமாக விளையாடி தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 121 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 118 ஓட்டங்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா 47 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க வில்லை. யுவராஜ் சிங் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.

No comments: