பகவத் கீதை




ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

வணக்கம். மீண்டும் தங்களை இந்த பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற வார கட்டுரை குறித்து தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

இந்த காலத்தில் நம் வாழ்க்கை மிக வேகமாக உருண்டோடுகின்றது. சமையலாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி அல்லது விளையாட்டாக இருந்தாலும் சரி - எல்லாவற்றிலும் நாம் விரைந்து செயல்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம். நமக்கென்று நாம் ஒதுக்கி வைக்கின்ற நேரம் குறைந்து கொண்டே வருகின்றது. இது முக்காலமும் அறிந்த அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிக நன்றாகத் தெரியும். அதற்காகவே அவர் நம்முடைய நலனை கருத்திற்கொண்டு, இப்படிப் பட்ட சூழலில் வாழும் நம்மை வழி நடத்திச் செல்ல பகவத் கீதையை பாடி இருக்கிறார். வேதங்களின் சாரமான இந்த நூலை வணங்கி நம்முடைய இந்த முதல் பாடத்தைத் துவக்குவோம்.



பொதுவாக பகவத் கீதை எதற்காக படிக்க வேண்டும் என்ற கேள்வியை நம் மக்களிடையே கேட்டால் அதற்கு பல விளக்கங்கள் கிடைக்கும். சிலர் அது ஒரு புனித நூல் அதற்காக அதை நாம் படிக்க வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் அது ஒரு அறிவுப் பெட்டகம், ஆகவே அறிவை வளர்ப்பதற்காக அதை நாம் படிக்க வேண்டும் என்பார்கள். வேறு சிலரோ மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி குறித்து நாம் அறிய அதை கற்க வேண்டும் என்பார்கள். இது போல பல விளக்கங்களை நாம் அனைவரும் கேட்டு இருக்கிறோம். இதில் எதுவுமே முழுமையான பதிலாகாது. பகவத் கீதை என்றால் என்ன? பகவான் பாடிய அந்த கீதமே பகவத் கீதை. அவர் எதை குறித்து பாடினார் என்று பார்ப்போம். என் பெயர் கனஷியாம். என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் என் நண்பர்களிடம் விசாரிக்கலாம் அல்லது என்னுடைய பெற்றோரிடமோ உறவினரிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். அனைவரும் என்னைப் பற்றிய அவர்களின் எண்ணத்தைக் கூறுவர். ஆனால் அவை எதுவுமே முழுமையான பதிலாகாது. என்னைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும். அது போல பகவான் கிருஷ்ணரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவரே அவருடைய திருநாவினால் பாடிய இந்த பகவத் கீதையை நாம் படிக்க வேண்டும். கடவுளே கடவுளைப் பற்றி இயற்றிய ஒரே நூல் தான் பகவத் கீதை. நாம் யார்? கடவுள் யார்? நமக்கும் கடவுளுக்கும் என்ன உறவு? நாம் ஏன் இந்த உலகில் அவதியுறுகிறோம்? கடவுள் என்பவர் இருக்கின்றாரா? ஒரு வேளை அவர் இருந்தால் ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு துன்பம் நடைபெறுகிறது? நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்திற்கும் தெளிவான விடை தான் என்ன? இப்படிப் பட்ட நமது எண்ணத்தில் உதயமாகும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் நாம் விடை காணக் கூடிய ஒரே நூல் தான் பகவத் கீதை.

எப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஒரு முறை இருக்கிறதோ, எவ்வாறு மருத்துவம் கற்றுக்கொள்ள ஒரு முறை இருக்கிறதோ அது போல இந்த கீதையைக் கற்றுக்கொள்ளவும் ஒரு முறை உள்ளது. இந்த முறையை அர்ஜுனன் பின்பற்றினான். அதனால் அவன் போரிலும் வாழ்விலும் வெற்றி கண்டான். அர்ஜுனன் பின்பற்றிய அந்த முறையை நாமும் பின்பற்றி கீதையைக் கற்றோமேயானால் நமக்கும் வெற்றி நிச்சயம். அர்ஜுனனின் வெற்றியின் ரகசியம் தான் என்ன? இதற்கு ஸ்ரீகிருஷ்ணரே விளக்கம் தருகிறார். அர்ஜுனனுக்கு இரண்டு உன்னதமான தகுதிகள் உண்டு. ஒன்று அவன் கிருஷ்ணரின் பக்தன். மற்றொன்று அவன் கிருஷ்ணரின் நண்பன். நாமும் நம்முடைய மனதளவிலாவது கிருஷ்ணரின் நண்பனாகவும் பக்தனாகவும் இருந்தோமேயானால் பகவத் கீதை நமது அறிவுக்கு புலப்படும், நமக்கும் வெற்றி நிச்சயம்.

பகவத் கீதையின் இந்த அறிமுகத்துடன் நம்முடைய முதல் ஸ்லோகத்தைத் துவக்குவோம். மகாபாரதம் குறித்து, அதிலும் குறிப்பாக குருஷேத்ரப் போர் குறித்து நம்மில் பலருக்குத் தெரியும். அர்ஜுனன் ஒரு க்ஷத்ரியன் அதாவது ஒரு போர் வீரன். இந்தப் போரில் அவன் அவனுடைய உறவினருடனேயே சண்டையிடும் நிர்ப்பந்தம். கேவலம் ஒரு நாட்டை வெல்ல நான் எதற்கு என் உறவினரைக் கொல்ல வேண்டும் என்று குழம்புகிறான். அந்த நிலையில் அவன் ஸ்ரீகிருஷ்ணரிடம் தனது மனதை வெளிப்படுத்தி தன்னுடைய குழப்பத்தை தீர்த்து வைக்கும்படி கூறி, கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைகிறான். அப்பொழுது கிருஷ்ணர் கீழ்வரும் ஸ்லோகத்தைக் கூறுகிறார்.

தேஹினோ' ஸ்மின் யதா தேஹே

கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹான்தரப் ப்ராப்திர்

தீரஸ் தத்ர ந முஹ்யதி

பகவத் கீதை 2.13

தமிழ் மொழிபெயர்ப்பு: "உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"

இந்த ஸ்லோகத்தின் மூலம் "நாம் யார்" மற்றும் "இறப்பு என்றால் என்ன" என்ற மிக முக்கிய கேள்விகளுக்கு விடையினை அறியலாம். முதலில் "நான் யார்" என்ற கேள்விக்கு இந்த வாரம் விடை தேடுவோம். நான் இந்த உடல் அல்ல. நான் ஒரு ஆத்மா. இதை நாம் அறிந்து கொள்வது வெகு சுலபம். உதாரணமாக நம்முடைய வீட்டை சுட்டிக்காண்பித்து "இது எனது வீடு" என்று கூறுகிறோம். நான் வீடு அல்ல. அதாவது நான் வேறு, எனது வீடு வேறு. நம்முடைய புத்தகத்தை சுட்டிக்காண்பித்து "இது எனது புத்தகம்" என்கிறோம். நான் புத்தகம் அல்ல. நான் வேறு, எனது புத்தகம் வேறு. அது போல நம்முடைய உடலை சுட்டிக்காண்பித்து "இது எனது கண். இது எனது வாய். இது எனது கை. இது எனது கால். இது எனது உடல்", என்று கூறுகிறோம். அதாவது நான் உடல் அல்ல. நான் வேறு எனது உடல் வேறு. நான் எனது உடல் இல்லையெனில் நான் யார்? நான் ஆத்மா. ஒரு சிறு குழந்தை கூட இந்த உண்மையினை கீதை மூலம் இவ்வாறு வெகு சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

நாம் இந்த உடல் இல்லை என்று புரிந்து கொண்டோம். நாம் ஆத்மா. ஆனால் நம்முடைய அன்றாட வாழ்கையில் நம்முடைய உடல் ஒன்றிற்கே நம்முடைய நேரம் அனைத்தையும் செலவு செய்கிறோம். எது நாம் இல்லையோ அதற்காகவே இரவு பகலாக உழைக்கிறோம். பிறகு நம்முடைய வாழ்வில் நிம்மதி இல்லை என்று வருந்துகிறோம். இந்த உடல் ஒன்றிற்கு மட்டுமே உணவளித்து மகிழ்ச்சியைத் தேடுகின்றோம். நாம் ஆத்மா. ஆனால் நம்முடைய ஆத்மாவிற்காக நாம் உணவளிப்பதே இல்லை. உடல் ஒரு ஜடப் பொருள் மட்டுமே. ஆத்மா அதில் குடி கொண்டிருபதால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. எப்பொழுது ஆத்மா அதிலிருந்து ஒருவர் இறக்கும்பொழுது வெளியேருகிறதோ அப்பொழுது அது மீண்டும் ஒரு ஜடப் பொருளாகிவிடுகிறது.

ஒரு கிளி கூண்டில் இருக்கும்பொழுது, அந்த கிளிக்கு உணவளிக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த கிளி மகிழ்ச்சியாக இருக்கும். நாம் கிளிக்கு உணவளிக்காமல் கூண்டினை மட்டும் நன்றாக பராமரித்து வந்தால், கிளி வாடி வருந்தி ஒரு நாள் இறந்து விடும். நம்முடைய ஆத்மாவும் அது போலத்தான். நம்முடைய ஆத்மாவிற்கு நாம் எப்பொழுது உணவளிக்கின்றோமோ அன்று தான் நமக்கு வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். அதுவரை நமக்கு மகிழ்ச்சி கானல் நீர் தான். துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் அனைவரும் உடல் ஒன்றினை மட்டுமே கருத்திற்கொண்டு உழைக்கின்றனர். அதனால் தான் இன்று பெரும்பாலானோர் மன அழுத்தத்துடன் மகிழ்ச்சி இன்றி வாழ்கின்றனர். நாம் உடல் இல்லை. ஆகவே நாம் என்ன தான் நம்முடைய உடலுக்கு நல்லதொரு இனிய வாழ்வினைக் கொடுத்தாலும் நமக்கு மகிழ்ச்சி நிரந்தரமாகாது. ஏனென்றால் நம்முடைய உடல் நிரந்தரமானது இல்லை. உடலே நிரந்தரம் இல்லாதபொழுது உடல் எவ்வாறு நிரந்தர சந்தோஷத்தை நமக்கு கொடுக்க முடியும்? மேலே கூறப்பட்ட இந்த ஸ்லோகத்திலும் கிருஷ்ணர் இதைத்தான் கூறுகிறார்.

நம்முடைய உடல் நிரந்தரமானது கிடையாது. எனக்கு இப்பொழுது 29 வயது ஆகிறது. ஒரு காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன், பிறகு சிறுவனாக இருந்தேன், பிறகு குமரனாக இருந்தேன். இப்பொழுதோ குமரப் பருவத்தின் அந்தியில் இருக்கிறேன். என்னுடைய அந்த குழந்தை உருவம் எங்கே போனது? சிறுவனாக இருந்த உடல் என்ன ஆனது? குமரனாக இருந்த உடலும் இப்பொழுது என்னிடம் இல்லை. இந்த ஒரு வாழ்விலேயே நான் அதற்குள் நான்கு உடலை மாற்றி விட்டேன். நான் என்னுடைய உடலை மாற்றினாலும் கனஷியம் என்கிற என்னுடைய ஆத்மா மட்டும் மாறவே இல்லை. நான் இறந்தபின் நான் என்கிற இந்த ஆத்மா என்னுடைய இந்த உடலை விட்டு வேறு ஒரு உடலுக்குச் சென்று விடும். இதிலிருந்தே நாம் ஆத்மா தான் என்றும் நம்முடைய உடல் நிரந்தரமற்றது என்றும் புரிந்து கொள்ளலாம்.

நாம் இல்லாத ஒன்றிற்காக நம்முடைய நேரம் அனைத்தையும் செலவழித்து நம்முடைய வாழ்க்கையும் வீணடிக்கின்றோம். என்று நம்முடைய ஆத்மாவிற்கு உணவளித்து நம்முடைய ஆத்மாவை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறோமோ அன்று தான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். இந்த உன்னத அறிவையே ஸ்ரீகிருஷ்ணர் இந்த நான்கு வரிகளில் கூறி இருக்கிறார். ஆத்மாவிற்கான அந்த உணவு என்ன என்பது பற்றி அடுத்த வாரம் ஆராய்வோம்.

திருக்குறள் குறித்து கூறும் பொழுது கடுகைத் துளைத்து அது எழுகடல் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்பார்கள். பகவத் கீதையும் அது போலத்தான். கீதையின் ஒரு ஸ்லோகத்தை வைத்து நம்முடைய வாழ்நாள் முழுவதும் ஆராயும் அளவிற்கு அதில் அவ்வளவு விஷயம் உள்ளது. நான் சுவாமி பிரபுபாதாவின் "பகவத் கீதை உண்மையுருவில்" என்ற புத்தகத்தைப் போன இரண்டு வருடங்களாகத்தான் படித்து கற்றுக்கொண்டேன். உங்களுக்கும் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.இதே புத்தகம் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.

இந்த கட்டுரை குறித்து உங்கள் கேள்விகள் அனைத்தையும்  இணைய அஞ்சலுக்கு அனுப்புங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,

கனஷியம் கோவிந்த தாஸ்

13 comments:

Anonymous said...

Arputham!!! Arumai!! nam vazhkayil thunbam yen varugirathu endru enakku ippothu purigirathu... Bhagavat Gita padikum arvam enakku ullathu. thangalin email enna?

- Janaki

Unknown said...

Hi Janaki,
Thanks for your comment. Please keep reading these Bhagavad Gita articles and benefit from them. My email id is ghanashyam.jps@gmail.com

Everyone...
Please feel free to email me any questions that you may have. I am more than happy to answer them in this section.

Endrum Anbudan,
Ghanashyam Govinda Das

Anonymous said...

Dear All

It will be good if you could post your questions and clarifications on this page itself so that Ghanashayam's response to that can be viewed by everyone. By developing a question and answer forum on this page instead of sending an email to his email id will definitely benefit others as well.

Thank you for your kind cooperation in this matter and thank you Ghanashyam for the well written article.

Kind regards
Tamilmurasu

Anonymous said...

Wonderful...Makes sense why I feel so sad even when I have a good job, money and a good place to live.still feel i miss sth in life,thanks for this wonderful article

Gopi / Renganathan R said...

Hare Krshna..Prabhu jiee,

Simple way to understand the value of Bhagavadth-Gita as it is.
You are doing wonderful services.
I am going to share your http://www.tamilmurasuaustralia.com/2010/04/blog-post_821.html with all of my email friends.

Thank you...Have an good health for Spiritual service...

Unknown said...

Hare Krsna!
Thanks for your comments. I agree with Tamilmurasu Moderator's comments. A discussion forum would be a fantastic idea! Vedic sastras say that there are 3 people who benefit from any question.
1) One who asks the question(thats you!)
2) One who answers the question(thats me!)
3) One who listens(reads) the answers(Everyone else).

By asking questions you are doing everyone a big favour. So please post your questions here along with comments. Only for any personal questions email me. Thank you very much.


Endrum anbudan,
Ghanashyam Govinda Das

Anonymous said...

ganasiyam avargalukku. bhagavad geethai anupiyatharku mikka nandri. ennidam oru kelvi ullathu. namakku thevayaana ellavithamaana arivum geethayil ullathu engirargalay. athu unmaya?

- Janaki

Anonymous said...

Hi Ghanashyam

I agreed what you are saying about life, but with out body, the life can't do anything. the body also equally important to life. please clarify.

Athi

Unknown said...

ஜானகி அவர்களுக்கு,
தங்களின் கேள்விக்கு மிக்க நன்றி. தாங்கள் பகவத் கீதை குறித்து கேள்விப்பட்டது உண்மை தான். பகவத் கீதையில் நமக்குத் தேவையான எல்லாவிதமான அறிவும் புதைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியுடன் நடத்துவது போன்ற மிக அறிதான விஷயமும் அடங்கி உள்ளது. நம்முடைய டிவியில் கோளாறு என்றால் முதலில் நாம் "TV manual" என்று சொல்லக்கூடிய புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பி அந்த கோளாறு எதனால் ஏற்பட்டது, அந்த கோளாற்றை எவ்வாறு சரி செய்வது என்று அறியலாம். வேற எந்த புத்தகத்தைத் திருப்பாமல் ஏன் "TV manual" என்ற இந்த புத்தகத்தை மட்டும் திருப்புகிறோம் என்றால், டிவியை உருவாக்கியவனே இந்த புத்தகத்தையும் உருவாக்கினான். அதனால் டிவி சம்மந்தமான எந்த கேள்விக்கும் அதிலே பதில் இருக்கும். அது போல நம்மை உருவாக்கிய அந்த பகவான் தான் இந்த பகவத் கீதையையும் உருவாக்கினான். ஆகவே நம்முடைய உடல், மனது, ஆத்மா மற்றும் நம்முடைய வாழ்க்கை குறித்த எல்லாவிதமான பிரச்சனைக்கும் இந்த "பகவத் கீதை" என்ற இந்த ஒரு புத்தகத்தைப் படித்தே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய தீர்வு காண முடியும்.

அன்புடன்
கனஷியம் கோவிந்த தாஸ்

Unknown said...

Hi Athi,
Thanks for your question. Yes, you are right. The body is also important. Without this body we cannot live in this world let alone serve the Lord. Since our usual focus of interest is on the body, I was stressing more on the soul in this article. However my intention was not to undermine the role of the body in our life.
In fact the great sage Narada Muni says that "hrishikena hrishikesha sevanam bhaktir ucyate".
hrishika means senses(eyes, ears, nose, tongue, skin, mind, intelligence and ego - in short "body")
hrishikesha means "master of senses" who is none other than Krishna.
So even Narada Muni says that "To serve Krishna with our senses(body) is called Bhakti". Thus body does play a huge role both in devotional life as well as in our day today life. Now having said that I want to add that the challenge here is to find the right balance between maintaining the body and the soul(athma). The soul and the body are like the two rails on which a train runs. The train can run only if both the rails are maintained properly. Neglecting one for the other will derail it. Even Krishna says clearly in Bhagavad Gita that only one who is balanced in life can become a good devotee. So to cut the long story short, yes we need to take care of both body and soul properly to lead a happy life. Hope thats clear. I will highlight this point again when I discuss more on this topic soon.
Thank you for that wonderful question.


Anbudan,
Ghanashyam Govinda Das

Anonymous said...

hi Ghanashyam

I am justified, thanks a lot

Athi

ஜெய் ராம் said...

யார் எழுதினாரோ அவர் நல்லாக எழுதியிருக்கிறார்
யார் எழுதிக் கொண்டிருக்கிறரோ அவர் நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார்
யார் எழுதவுள்ளாரோ அவர் நன்றாக எழுதவுள்ளார்.

Anonymous said...

Hi

Where can we purchase this book?