அனைவரும்
வாழ்ந்திடில் மகிழ்ச்சிதானே?
உறவினுக் கெதிரியாய் உழன்றுநீ அலைவதால்
உண்மையில் இழப்பது நீயன்றோ?
உறவுமே உன்னையே ஒதுக்கியே வைத்திடில்
உலகினில்
உனக்கென இருப்பதேது?
பறவையும் இனத்துடன் பகிர்ந்துதான் வாழ்ந்திடும்
பார்த்ததைப்
போலநீ திருந்துவாயே! (1)
என்றுமே உறவுகள் இணைந்துடன் வாழ்வதால்
எய்துவர்
வாழ்வினில் இன்பமதே;
நன்றென நம்மவர் நவின்றநன் மொழிகளை
நாளுமே
பற்றுதல் நன்மைதானே;
இன்றுநான் உரைப்பவை ஏற்றிட மறுத்திடில்
இனியவுன்
உறவுகள் இழந்துநிற்பாய்;
என்றுமே மாந்தரும் தீவினை யாளரை
ஏற்பதே உலகினில் இல்லைதானே? (2)
No comments:
Post a Comment