பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் seine-saint-denis மாவடத்தில் உள்ள பொபிணி Bobigny நகரசபையினால் தமிழினவழிப்பின் நினைவாக சமாதானத்தை குறிக்கும் ஒலிவ் மரம் நாட்டப்பட்டு நினைவுக் கல்லும் சனிக்கிழமை 07-12-2024 திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நினைவுக்கல்லினை Bobigny பொபினி நகரபிதாவும் seine-saint-denis மாவட்டசபை உறுப்பினருமான திரு.abdel sadi அவர்களார் திறந்துவைத்தார்.
குறித்த நினைவுக்கல்லின் “சிறீங்கங்கா அரசினால் 1948 முதல் 2009
மே மாதம் வரை இனவழிப்பு செய்யப்பட்ட தமிழீழ மக்களின் நினைவாக” என்ற வாசகங்கள் பிரஞ்சு மொழியிலும் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தன.
நகரசபை மேயர் திரு.abdel sadi உரையாற்றும் போது பொபினி நகரசபையில் 2021 தமிழினவழிப்பை அங்கீகரத்து தீர்மானம் நிறைவேற்றிதையும் , பொபினி நகரம் தமிழ் மக்களின் நீதியை வென்றெடுக்க துனைநிற்பதையும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment