பார்வையில் மலர்ந்த காதல் -

 .



அவள் பார்வை என்மீது பட்டது
என்னை நான் மறந்தேன்
என்னுள் எல்லாம் அவளானதால்
என்னை நான் மறந்தேன்
நான் பார்ப்பதெல்லாம் அவளானதால்
என்மனம் அவள் மனம் சங்கமமானது
ஈருடல் ஓருயிராய் போவது உணர்ந்தேன்
அது ஓர் காதல் மலரானதோ !
கண் திறந்து பார்த்தேன்
என்னை நானே கொஞ்சம் கிள்ளிப் பார்த்தேன்
என்னை உணர்ந்தேன் இப்போது நான்
என்னைத் தழுவி இப்போது அவள்
என் அரவணைப்பில்
எங்கள் பார்வையில் மலர்ந்த காதல்
நாங்கள் இணைந்தோம்
ஈருடல் ஓருயிராய்....



வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன்

நன்றி https://eluthu.com/kavithai/434384.html

No comments: