12/12/2018 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 117 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி