இரண்டாம் வாய்ப்பு !


ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !
நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.
எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..
ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……
வருந்துகிறேன்
என் மவுனத்தில் கரைந்த 
அந்நாட்களை நினைத்து. 



சொல்லியிருக்க வேன்டும்
ஏதாவது
எப்படியாவது
நீ புரிந்துகொள்ளும் வகையில் !
வேறொரு நாள் 
பிரிந்தோம்.
நம்மிடையே இடைவெளி
நாம் பேசுவது நின்றுப்போனது. 
என் தவறுதான்
என்னால்தான் !
மீண்டும்
நம்பிக்கை கொள்கிறேன்
இதை மாற்றக்கூடும்
என்னால் மட்டுமே !
எத்தனை இரவுகள்
வெகு நேரமாகியும்
தூங்காமல் தவித்திருக்கிறேன்
ஏன் தெரியுமா
நீ என்னுடன் இருந்திருக்கிறாய்
நெருக்கமாக
என் வசம் இழுத்து
உன்னை அனைத்திருக்கிறேன்
என் போர்வைக்குள் !
சற்று நினைத்துபார்
உணர்ந்துக்கொள்வாய்
உன்னில் பாதியாக – நான் !
எத்தனை முறை
என் உணர்வுகளை
கரைத்திருக்கிறேன்
கண்ணீரிலே !
காத்துக்கொண்டிருந்து இருக்கிறேன்
எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்
ஏங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்
உன் தொடுதலை உணர்வதற்காக‌ !
உன்னுடன் சேர்ந்திருக்க
உன்னுடன் கைகோர்த்திருக்க
 முத்தம்
ஒன்றினை கொடுக்க
ஒரு முறையாவது !
எத்தனை விடியல்கள்
உன்னை தேடியபடியே
விழித்திருக்கிறேன்
ஆனால் நீயில்லை !
சில நேரங்களில்
கற்பனையில் நீ
என்னுடன்
என்னில் அக்கறையாக
பேசிக்கொண்டிருக்கிறோம்……
மறுபடியும் !
எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னருகில் இருக்கும்
என் இரண்டாம் வாய்ப்பை !

***

(இது என் க‌விதை அல்ல‌… மொழிப்பெயர்ப்பு செய்வது ரொம்ப பிடிக்கும் என்பதால் என்னை கவர்ந்த‌  ஒரு ப்ரெஞ்சு கவிதையினை நான் தமிழாக்கம் செய்ததுதான் இது)

nantri tamilkavithai11.blogspot

No comments: