சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா

.

சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார்.
யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன், சாவ­கச்­சேரி மாவட்ட நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­க­ரன் ஆகி­யோரை உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை மதிப்­பு­றுத்­தி­யது.
நியா­யத்தை நிலை­நாட்­டு­ வ­தற்­காக ஆற்­றிய சேவை­யைப் பாராட்டி உலக பௌத்த இளை­யோர் சங்­கச் சபை­யி­னால் இவர்­கள் மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.
கண்டி பல்­லே­க­ல­யில் உள்ள மத்­திய மாகாண சபைக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்ற இளை­யோர் சங்க சபா­வின் 14ஆவது வரு­டாந்த மாநாட்­டில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது. நீதி­ப­தி­க­ளுக்கு விரு­தும் வழங்­கப்­பட்­டுள்­ளது.



அஸ்­கி­ரிய பீடத்­தின் மஹா­நா­யக்­கர் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ரத்ன தேரர் இதனை வழங்கி வைத்­தார். 56 நாடு­க­ளின் மஹா­நா­யக்­கர்­கள், பிக்­கு­கள், பௌத்த தூது­வர்­கள் உள்­ளிட்ட பல­ரின் பங்­கேற்­பு­டன் இந்த மாநாடு நடை­பெற்­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.


No comments: