இலங்கைச் செய்திகள்


சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்


திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.?

 ''மக­னுடன் பேசமுற்­பட்­ட­போது இரா­ணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்­குழு முன் தாயார் கதறல் 

கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்

சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் கைது 

இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்த கண­வனை மீட்­ப­தற்கு பல­ரிடம் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்தேன்

இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.  

கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ

மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?

 முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் கைது தொடர்பில் ஆரா­யப்­படும் : சூழ்ச்­சி மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அனுமதியேன்

கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.!

அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்:  கண்ணீருடன் தாய் சாட்சியம்







சுவீடன் ​வெளிவிவகார அமைச்சர் இன்று வடக்கிற்கு விஜயம்





26/04/2016 உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுகிழமை இலங்கைக்கு வருகை தந்த சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ட்ஸ்ரம் இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


இவ்விஜயத்தின் போது, வட மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



மேலும் நலன்புரி முகாம்களிற்கும் செல்லவுள்ளதுடன், சிவில் அமைப்புகளை சந்திக்கவுள்ளதுடன், மறவன்புலவு வீட்டுத் திட்டத்தையும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கண்காணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைக்க ஒப்புதல்


26/04/2016 ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










திடீர் யாழ்.விஜயம் செய்த அங்கஜன், ரிஷாட்: காரணம் வெளியாகியது.?



26/04/2016 யாழ்ப்பாணத்திற்கு நேற்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்து உடல நலன் குறித்து விசாரித்துள்ளனர்.
இதன்போது, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் சுகவீனமடைந்து சகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











 ''மக­னுடன் பேசமுற்­பட்­ட­போது இரா­ணுவ சிப்பாய் அடிக்க வந்தார் '': ஆணைக்­குழு முன் தாயார் கதறல் 

26/04/2016 ஓமந்­தையில் இரா­ணு­வத்­தி­னரின் வாக­னத்தில் எனது மகனை ஏற்­றி­ய­போது அவ­ருடன் பேசு­வ­தற்கு அனும­தி­யுங்கள் என அருகில் நின்ற இரா­ணுவச்சிப்­பா­யிடம் கேட்­டி­ருந்தேன்.

இதன்­போது அவர் என்னை அடிக்க வந்­த­தோடு உரிய இடத்தில் இருக்­கு­மாறு அதி­கா­ர­தொ­னியில் தெரி­வித்தார் என்று காணாமல் போன இரா­ஜ­ரட்ணம் ஜெயராஜ் (வயது 28) என்­ப­வரின் தாயார் நேற்று காணா மல் போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­விடம் சாட்­சி­ய­ம­ளித் தார்.
மேலும், காணா­மல்­போன எனது மகனை மீட்டுத் தருவோம் என கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் எம்மை ஏமாற்­றி­யி­ருந்­தனர். எனினும் தற் ­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எனது மகன் எனக்கு மீளக் கிடைப்பார் என்ற நம்­பிக்­கை­யுள்­ளது என்று காணாமல் போன­வர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினர் முன்­னி­லையில் மற்­று­மொரு தாயொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.
கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­யி­லேயே காணாமல் போனோரின் உற­வுகள் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்­தனர்.
கிளி­நொச்சி உத­ய­ந­கரைச் சேர்ந்த குறித்த தாய் காணா­மல்­போன பத்­ம­நாதன் சுலக்ஸன் (வயது 17) என்ற மகன் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்
க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை எழு­தி­விட்டு பெறு­பே­றுக்­காக காத்­தி­ருந்த எனது மகனை கடந்த 2008ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களின் அமைப்­பினர் பிடித்துச் சென்­றனர். அவர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டு வந்த எனது மகன் எங்­க­ளுடன் வாழ்ந்து வந்தார். இந்­நி­லையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விடு­தலைப் புலி­களின் அமைப்­பினர் மீண்டும் எனது மகனைப் பிடித்துச் சென்­றனர்.
இந்­நி­லையில் இறுதி யுத்தம் ஆரம்­ப­மா­ன­தை­ய­டுத்து நாங்கள் குடும்­ப­மாக இடம்­பெ­யர்ந்த நிலையில் நான்கு நாட்கள் வட்­டு­வா­கலில் முள்­வேலி சுற்­றப்­பட்ட பகு­திக்குள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்தோம். இத­னை­ய­டுத்து நாங்கள் குடும்­ப­மாக ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி முகா­முக்கு மாற்­றப்­பட்டோம்.
இதே­வேளை எனது மகன் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் சென்­றதை பார்த்­த­தாக எனது உற­வி­னர்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் அவரை மீட்­ப­தற்­காக பல இடங்கள் தேடி­அ­லைந்தேன். எனினும் இன்­று­வரை எனது மகன் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.
காணாமல் போன மகனை மீட்­டுத்­த­ரு­மாறு குறிப்­பாக கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­போதும் எனது மகனை அவர்கள் மீட்­டுத்­த­ர­வில்லை. எனினும் உயி­ரோ­டுள்ள எனது மகனை தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் மீட்­டுத்­தரும் என்ற அசை­யாத நம்­பிக்கை எனக்­குள்­ளது என்றார்.
இரா­ணு­வத்­தி­ன­ரி­டமே கண­வனை ஒப்­ப­டைத்தேன்; மனைவி சாட்­சியம்
இறுதி யுத்­தத்தின் போது முள்­ளி­வாய்க்­காலில் வைத்து ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் முன்­னி­லையில் எனது கண­வரை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தேன். அதன் பின்னர் வவு­னியா யோசப் மற்றும் பூசா முகாங்­களில் எனது கணவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அங்கு ஒட்­டப்­பட்­டி­ருந்த பெயர் விப­ரங்கள் மூலம் அறிந்து கொண்டேன் என காணா­மல்­போன செல்­லையா விஸ்­வ­நாதன் (வயது 47) என்­ப­வரின் மனைவி சாட்­சி­ய­ம­ளித்தார்.
அவர் மேலும் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
விடு­தலைப் புலிகள் அமைப்பில் போரா­ளி­யா­க­வி­ருந்த எனது கண­வரை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது இரண்டு பிள்­ளைகள் மற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தேன்.
பாதி­ரியார் பிரான்­சி­ஸூடன் சர­ண­டைந்த விடு­தலைப் புலி­களின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளுடன் எனது கண­வ­ரையும் பேருந்து ஒன்றில் ஏற்றிச் சென்­றனர். அதன் பின்னர் எனது கணவர் வவு­னியா யோசப் மற்றும் பூசா முகாங்­களில் உள்­ள­தாக அறிந்­தி­ருந்தேன். எனினும் அவரை சந்­திப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் எனக்குக் கிடைக்­க­வில்லை.
எனது கண­வரை மீட்­ப­தற்­காக பல இடங்கள் தேடி அலைந்து தற்­போது 7 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் கணவர் பற்­றிய எவ்­வித தக­வலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. ஆணைக்­குழு எங்­க­ளிடம் மட்­டுமே விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்­றது. எனது கணவர் காணா­மற்­போ­னமை தொடர்பில் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் ஆட்­கொ­ணர்வு மனுத்­தாக்­கலும் மேற்­கொண்­டுள்ளேன். இத்­தனை விட­யங்­களை மேற்­கொண்டும் இது­வரை எனது கண­வரை விடு­விக்­காமல் தடுத்து வைத்­துள்­ளார்கள். தயவு செய்து உயி­ருடன் உள்ள எனது கண­வரை விட்டு விடுங்கள் என அவர் கண்ணீர் மல்க சாட்­சி­ய­ம­ளித்தார்.
இரா­ணுவப் பேருந்­தி­லேயே எனது மகனை இறு­தி­யாகக் கண்டேன்: தாய் சாட்­சியம்
இரா­ணு­வத்­தினர் எனது மகனை பேருந்தில் ஏற்றிச் செல்­வதை ஓமந்தைப் பகு­தியில் வைத்துக் கண்­டி­ருந்தேன். அதன் பின்னர் அவரை இன்­று­வரை காண­வில்லை என தாயொ­ருவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
கிளி­நொச்சி விவே­கா­னந்த நகரை சேர்ந்த காணாமல் போன இரா­ஜ­சட்னம் ஜெயராஜ் ( வயது 28) என்­ப­வரின் தாயார் மேற்­கண்­ட­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.
அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் முள்­ளி­வாய்­காலில் இருந்து எங்­களை இரா­ணு­வத்­தினர் பேருந்­து­களில் ஏற்றி ஓமந்­தைக்கு கொண்டு சென்று இறக்கி விட்­டனர். இதன்­போது மற்­று­மொரு பேருந்தில் சில இளை­ஞர்கள் ஏற்றி வரப்­பட்டு நாமி­ருந்த பகு­தியில் இறக்கி விடப்­பட்டு மீண்டும் அங்கு நின்ற இரா­ணு­வத்­தினர் பிறி­தொரு பேருந்தில் அவர்­களை ஏற்­றி­னார்கள். இவ்­வாறு ஏற்றும் போது எனது மகனும் அங்கு காணப்­பட்­டி­ருந்தார். அதுவே எனது மகனை பார்த்த கடைசி நாளாகும்.
எனது மகனை அவ்­வாறு கண்ட நிலையில் எனது மக­னுடன் பேசு­வ­தற்கு அனு­ம­தி­யுங்கள் என அருகில் நின்ற இரா­ணுவ சிப்­பா­யிடம் கேட்­டி­ருந்தேன். இதன்­போது அவர் என்னை அடிக்க வந்­த­தோடு உரிய இடத்தில் இருக்­கு­மாறு அதிகாரதொனியில் தெரிவித்ததுடன் விசாரணைகளின் பின்னர் எனது மகனை இராணுவத்தினர் விடுவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று வரை எனது மகன் விடுவிக்கப்படவில்லை. எனது மகனை இராணுவம் எதற்காக இன்று வரை தடுத்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கவில்லை. எனவே தயவு செய்து எனது மகனை விட்டு விடுங்கள் என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் தொடர்ச்சியாக எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











கடத்தப்பட்ட ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்




25/04/2016 திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள  வீட்டில் வைத்து நேற்று  காலை இனம் தெரி­யா­த­வர்­க­ளினால் ஜீப் ஒன்றில்  கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்­வாழ்வு பெற்று விடு­த­லை­யா­கிய புலி­களின் முன்னாள் அம்­பாறை மாவட்ட தள­பதி ராம் என்­பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்­கோவில் தம்­பி­லுவிலில் உள்ள அவரது வ வீட்டில் வைத்து நேற்று காலை 8.30 மணியளவில் நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த சிலரால், தனது கணவர் கடத்தப்பட்டதாக அவ­ரது மனைவி சுதா­ராணி திருக்­கோவில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 
இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலே அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
விடு­தலைப் புலி­களின் அம்­பா­றை­மா­வட்ட தள­ப­தி­யாக இருந்து 2009 ஆம் ஆண்டு இரா­ணு­வத்­தி­னரால் திரு­கோ­ண­ம­லையில் வைத்து கைதுசெய்­யப்­பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடு­த­லை­யானார். 
அதன் பின்னர் திரு­மணம் முடித்து திருக்­கோவில் தம்­பி­லுவில் பிர­தே­சத்தில் வாடகை வீட்டில் வசித்­து­வ­ரு­வ­துடன் விவ­சாயம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி 












சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் கைது 

27/04/2016 தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களின் சாள்ஸ் அன்­ரனி படைப்­பி­ரிவின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான நகுலன் என அழைக்­கப்­படும் கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி என்­பவர் நேற்­றைய தினம் முற்­பகல் 11 மணி­ய­ளவில் நீர்­வேலி தெற்குப் பகு­தியில் அமைந்­துள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் உடையில் வந்­த நான்கு பேரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த கைது நட­வ­டிக்கை தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இரவு நீர்­வே­லியில் உள்ள நகு­லனின் இல்­லத்­துக்கு சென்ற நான்­குபேர் அவர் தொடர்­பாக வீட்­டி­லி­ருந்­த­வர்­க­ளிடம் விசா­ரணை செய்­துள்­ளனர். இந்­நி­லையில் நேற்­றைய தினம் முற்­பகல் 11 மணி­ய­ளவில் மீண்டும் அவ­ரது வீட்­டிற்கு சென்ற குறித்த நால்வர், மீண்டும் நகுலன் தொடர்­பாக விசா­ரித்­த­துடன் அவர் தற்­போது எங்­குள்ளார் என வீட்­டி­லி­ருந்­த­வர்­க­ளிடம் கேட்­டுள்­ளனர். இதன்­போது நகுலன் நீர்­வேலி கரந்­தனில் உள்ள தோட்­டத்துப் பயிர்­க­ளுக்கு நீர்­பாய்ச்­சு­வ­தாக அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் சிவில் உடையில் நின்ற நால்­வரும் குறித்த தோட்­டத்­துக்குச் சென்று ந­கு­ல­னுடன் உரை­யா­டி­ய­துடன் அவரை விசா­ர­ணைக்­காக யாழ்ப்­பாணம் அழைத்துச் செல்­வ­தாக உற­வி­னர்­க­ளிடம் தெரி­வித்து கைது செய்­துள்­ளனர். இதன்­போது நகு­லனின் தந்­தையும் அவ­ருடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­றி­ருந்தார். இந்­நி­லையில் நகு­லனை கொழும்பு தலை­மை­யக விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­ல­வுள்­ள­தாக அவ­ரது தந்­தை­யிடம் கைது செய்த சிவில் உடை தரித்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
விடு­த­லைப்­பு­லிகளின் சாள்ஸ் அன்­ர­னி­படைப் பிரிவின் தள­ப­தி­களில் ஒரு­வ­ரான கண­ப­திப்­பிள்ளை சிவ­மூர்த்தி (நகுலன்) என்­பவர் இரா­ணு­வத்­திடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் அவர் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்து முழுநேர விவசாயியாக வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்த கண­வனை மீட்­ப­தற்கு பல­ரிடம் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்தேன்

முல்­லைத்­தீவு வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைத்த எனது கணவர் திரு­கோ­ண­மலை புல்­மோட்டை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பலர் தெரி­வித்­தனர். அவ்­வாறு தெரி­வித்த அவர்கள் கண­வனை மீட்டுத் தரு­வ­தற்கு பணம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தனர். அவர்கள் கோரிய பணத்­தினை வழங்­கி­யி­ருந்தும் இன்­று­வரை எனது கணவன் விடு­விக்­கப்­ப­ட­வில்லை என இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்து காணாமல் போன மச்­ச­யக்­காளை கண்ணன் என்­ப­வ­ரது மனைவி ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்தில் காணா­மல்­போனேர் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­ வி­சா­ரணை நேற்­றைய தினம் இடம்­பெற்­றது. இதன்­போதே குறித்த மனைவி மேற்­கண்­ட­வாறு சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். அவர் அங்கு மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எனது கண­வரை நான் வட்­டு­வா­கலில் வைத்து இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தேன். தற்­போது 7 வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் கணவர் பற்­றிய எந்த தக­வலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.
எனது கணவர் கடந்த 2002ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இணைந்து கொண்டு 2009ஆம் ஆண்டு வரையும் அதில் செயற்­பட்­ட­வ­ராவார். இறுதி யுத்தம் நிறைவு பெற்­றதன் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நாங்கள் குடும்­ப­மாக இரா­ணு­வக்­கட்­டுப்­பாட்­டிற்குள் வந்தோம். இதன்­போது வட்­டு­வா­கலில் நின்ற இரா­ணு­வத்­தி­னரின் வாக்­கு­று­தி­களை நம்பி எனது கண­வரை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்தேன்.
பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு எனது கணவர் திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை கடற்­படை முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பலர் என்­னிடம் தெரி­வித்­த­துடன் கண­வரை அங்­கி­ருந்­து­மீட்­ப­தற்கு
அதிக பணம் செல­வாகும் என்றும் கூறினர். இந்­நி­லையில் எவ்­வா­றா­வது எனது கண­வனை
மீட்­ப­தற்­காக வெளிநாட்­டி­லுள்ள எனது சகோ­த­ர­னிடம் தெரி­வித்­திருந்தேன். எனது சகோ­த­ரனும் அவ்­வாறு கூறிய அந்த நபர்­க­ளுக்கு பணத்­தினை அனுப்­பி­யி­ருந்தார். இவ்­வாறு இரண்டு மூன்று
தட­வைகள் பணத்­தினைக் கொடுத்து ஏமாந்­துள்ளோம். எனினும் பணத்தினைப் பெற்ற வர்களிடமிருந்து இன்று வரை எவ்விதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. தயவுசெய்து எனது கணவனை மீட்டுத் தாருங்கள் என அவர் கண்ணீர் மல்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.  நன்றி வீரகேசரி 








இனப்பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறையிலேயே அமைய வேண்டும் : சுவீடன் அமைச்சரிடம் சி.வி.  

27/04/2016 இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு சமஷ்டி முறை­யி­ன் அடிப்படையிலேயே காணப்பட வேண்டும் என்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜ யம் மேற்­கொண்ட சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் எடுத்­து­ரைத்­துள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை வந்துள்ள சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மார்கொட் வோல்ட்ஸ்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவர் வட­மா­காண முத­ல­மைச்­சரை கைத­டியில் அமைந்­துள்ள அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.
இக்­க­லந்­து­ரை­யாடல் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்­த­தா­வது,
கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்ட சுவீடன் வெ ளிவி­வ­கார அமைச்சர் இலங்­கையின் அர­சியல் நிலைப்­பா­டு­தொ­டர்பில் தாம் அறிந்து வைத்­துள்­ள­தா­கவும் தற்­போது புதிய அர­சாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் அர­சியல் நிலைப்­பாடு எவ்­வாறு உள்­ளது என என்­னிடம் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.
நாட்டில் அர­சியல் ரீதி­யாக மாற்­றங்கள் ஏற்­பட்டு ஜன­நா­யகம் எங்­க­ளிடம் பர­வி­யுள்­ளது என எண்ணு­கிறேன் என அவ­ரிடம் பதி­ல­ளித்­தி­ருந்தேன். இதன்­போது அவர், உங்­க­ளு­டைய நாட்­டிலே அனைத்து செயற்­பாட்­டையும் சேர்த்துப் பார்க்­கும்­போது நாடு நல்ல இடத்­தி­லேயே இருப்­பதை உண­ரு­கின்றேன் எனத் தெரி­வித்­த­துடன் தம்மால் எவ்­வி­த­மான உத­வி­க­ளையும் செய்­ய­மு­டி­யாமல் உள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
நாட்­டி­லுள்ள செயற்­பா­டுகள் அனைத்­தையும் இணைத்துப் பார்க்கும் போது நல்ல நிலையில் இருந்­தாலும் வட­மா­கா­ணத்தைப் பொறுத்­த­வரை பின்­தங்­கிய நிலை­யிலே உள்­ளது. எனவும் அதனை மீள்­கட்­ட­மைக்க உங்­க­ளு­டைய உதவி தேவை­யென்றும் சுவீடன் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தேன்.
இதே­வேளை வெளி­வி­வ­கார அமைச்சர் என்­னிடம் எதிர்­கா­லத்தில் எத்­த­கைய மாற்­றங்கள் ஏற்­ப­ட­வேண்டும் எனக் கேட்­டி­ருந்தார்.
அர­சியல் ரீதி­யான தீர்வைக் காண­வேண்­டிய அவ­சி­யத்தைக் அவ­ருக்கு எடுத்துக் கூறினேன். அதன்­போது அவர் எவ்­வா­றான தீர்வை எதிர்­பார்க்­கி­றீர்கள் என என்­னிடம் கேட்­டி­ருந்தார்.
சமஷ்டி முறையே சரி­யான தீர்வென கூறினேன். அதா­வது பல வரு­டங்­க­ளாக நாம் முன்­வைத்த இந்த சமஷ்டி முறைக்கு வலுச்­சேர்க்கும் வகையில் சுவிர்­ஸர்­லாந்தில் இருந்து நிபு­ணர்கள் அழைத்து வரப்­பட்டு கலந்­தா­லோ­சித்த பின்­னரே குறித்த முடிவை இறு­தி­யாக எடுத்­தி­ருந்தோம் என அவ­ரிடம் தெரி­வித்­தி­ருந்தேன்.
நான் கூறி­யதை ஏற்றுக் கொண்ட அவர், இத்­த­கைய தீர்வுத் திட்­டத்தை பெரும்­பான்மை இனத்­த­வர்கள் ஏற்றுக் கொண்­டுள்­ள­தாக தெரி­ய­வில்­லையே எனத் தெரி­வித்­தி­ருந்தார்.
நீங்கள் குறிப்­பி­டு­வது உண்­மை­யென அவ­ரிடம் தெரி­வித்த நான், அர­சி­யல்­வா­திகள் சமஷ்­டியை பிரி­வி­னை­வா­த­மாகக் கூறி­ய­த­னா­லேயே இத்­த­கைய நிலைப்­பாடு அவர்­க­ளிடம் உரு­வா­கி­யுள்­ளது. உண்­மையில் நாங்கள் சமஷ்­டியைக் கோரு­வது நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கவே. ஆனால் அதனை பிரி­வி­னை­வா­த­மாகத் பிரச்­சாரம் செய்­யப்­ப­டு­வதே பிரச்­சி­னை­யாக உள்­ளது என்­பதை வெளி­வி­வ­கார அமைச்­ச­ரிடம் கூறினேன்.
இறு­தி­யாக வெளி­நாட்டு அர­சாங்கம் என்ற முறையில் எங்­க­ளு­டைய பங்கு எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை எதிர்­பார்க்­கி­றீர்கள் என அவர் என்னிடம் கேள்வி முன்வைத்தார்.
வெளிநாட்டு அரசினுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் நாம் மேலும் பாதிக்கப்பட்டுவிடுவோம். மேலும் ஜெனீவாத் தீர்மானங்கனை அரசாங்கம் கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டு அரசுகளுடைய நெருக்குதல்களும் நல்லெண்ணங்களும் அறிவுரைகளும் எமக்கு நன்மைபயத்தது என அவரிடம் தெரிவித்திருந்தேன் எனக் கூறினார். நன்றி வீரகேசரி 












கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ

28/04/2016 சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.


இவருடன் இந்த வழக்கில் பிரதவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சந்கே நபர்களும் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 











மே தினத்தில் என்ன பொய் சொல்ல போகின்றீர்கள்.?



28/04/2016 தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் கட்சிகளின் மே தினங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் கறுப்பு மே தினமாக தோட்டங்கள் தோறும் நடாத்த உள்ளோம் என பத்தனை - திம்புள்ள சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தார்கள்.

சுமார் அரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இம்முறை கொண்டாடப்படும் மே தின விழாவில் மலையக தொழிற்சங்கவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூறியது போல் 1000 ரூபாய் சம்பள பணத்தை பெற்றுக்கொடுக்க மேதின மேடைகளில் உண்மையான வாக்குறுதியை வழங்க வேண்டும்.
இதைவிடுத்து காலம் காலமாக சொல்லி வந்த பொய்யான கூற்றுக்கள் இம்முறையும் மேடை ஏறும் பட்சத்தில் மேதின விழாவை கறுப்பு கொடிகள் அணிந்து கறுப்பு மேதினமாக தோட்டங்களில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்போவதாக இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், இவ் ஆர்ப்பாட்டத்தின் போது சில தொழிற்சங்கவாதிகள் பெயர்கள் உச்சரிக்கப்பட்டு கோஷம் எழுப்பப்பட்ட நிலையில் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 









முன்னாள் புலி உறுப்­பி­னர்­களின் கைது தொடர்பில் ஆரா­யப்­படும் : சூழ்ச்­சி மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு அனுமதியேன்

28/04/2016 சூழ்ச்­சிகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன். கடந்த பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­ சிக்கு 106 உறுப்­பி­னர்­க­ளையும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கு 95 உறுப்­பி­னர்­க­ளையும் பொது­ மக்கள் தெரிவுசெய்­தி­ருந்­தனர். இதி­லி­ருந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்பார்ப்­பாக இருந்­தது. அரசை கவிழ்க்க முயல்­ப­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்­மையை காண்­பிக்­க­வேண்டும். அதற்­கான சாத்­தியங்கள் ஒரு­போதும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.


வடக்கு மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது அவர்­களின் நிலைப்பாடாகும். நாட்டின் இறைமை ஆட்­புல ஒரு­மைப்­பாட்­டுக்கு பங்கம் ஏற்­ப­டுத்­தவோ, அல்­லது நாட்டைப் பிரிப்­ப­தற்கோ நாம் ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்­ப­டை­வாத கொள்­கை­களை முன்­வைக்­கின்­றனர். ஆனாலும் நாம் நாட்­டைப்­பி­ரிக்க இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. தமி­ழ­கத்தில் தேர்­தலை இலக்­காகக் கொண்டு தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் நாம் கவ­லை­கொள்ளத் தேவை­யில்லை என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டினார்.
தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்க முன்னாள் உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­ப­டு­வது தொடர்பில் நான் அறி­ய­வில்லை. அப்­படி நடந்தால் அதற்கு அனு­மதி அளிக்­கப்­ப­ட­மாட்­டாது. இவ்­வி­டயம் குறித்து உரிய கவனம் செலுத்­தப்­படும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்தார்.
தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்கள், மற்றும் ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று முற்­பகல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இந்த சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:-
அண்­மையில் பொலிஸ் ஆணைக்­குழு மற்றும் அரச சேவை ஆணைக்­குழு என்­ப­வற்றின் பிர­தி­நி­தி­களை நேற்று சந்­தித்து நான் பேசி­யி­ருந்தேன். அவர்­க­ளது பிரச்­சி­னைகள் குறித்து நான் கேட்­ட­றிந்­து­கொண்டேன். ஆணைக்­கு­ழு­விற்கு நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் தமது பத­விக்­கா­லத்­திற்குள் முக்­கிய பிரச்­சி­னை­களை தெரிவு செய்து அவற்­றுக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். நானும் அப்­ப­டித்தான் செய்து வரு­கின்றேன். எனது பத­விக்­கா­லத்­திற்குள் தேசிய ரீதியில் முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து அவற்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றேன்.
அரசின் மீது குற்­றச்­சாட்டு
எமது அர­சாங்கம் பத­வி­யேற்று 15 மாதங்கள் ஆகின்­றன. அர­சுக்கு எதி­ரா­கவும் எனக்கும் பிர­த­ம­ருக்கும் எதி­ரா­கவும் விமர்­ச­னங்கள், குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய விமர்­ச­னங்கள் நியா­ய­மா­ன­தா­கவும், தென்­ப­டு­கின்­றன. 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம்­தி­கதி எமது நாட்டு மக்கள் வழங்­கிய ஆணை இல­கு­வா­ன­தல்ல.
தேர்தல் ஒன்றை சந்­திக்­க­வுள்ள தலைவர் ஒருவர் முழு ஆயத்­தங்­களை செய்த பின்­னர்தான் தேர்­தலில் ஈடு­ப­டுவார். ஆனால் நான் சந்­தித்த தேர்­தலின் போது நா ன் எவ்­வித ஆயத்­தங்­க­ளு­மின்றி அந்த நட­வ­டிக்­கையில் இறங்­கி­யி­ருந்தேன். அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய அன்­றுதான் நான் வேட்­பாளர் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தத் தேர்­த­லா­னது மக்கள் பொறுப்­பே­டுத்த தேர்­த­லாகும். 49 கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஒப்­பந்தம் செய்து தேர்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டாலும் மக்­களே அந்தத் தேர்­தலை பொறுப்­பெ­டுத்து மேற்­கொண்­டனர். 1947 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் நடை­பெற்ற எந்த தேர்­த­லிலும் இவ்­வாறு மக்கள் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. இவ்­வாறு ஆணை­வ­ழங்­கிய மக்கள் புதிய அர­சாங்­க­மா­னது விரைவில் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் என எதிர்­பார்த்­தனர். இவ்­வா­றான எதிர்­பார்ப்பே விமர்­ச­னங்­க­ளு­கு்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.
சேத­ம­டைந்த வீதி­யொன்­றினை புன­ர­மைக்­க­வேண்­டு­மென்­றாலும் அதற்கு கார்பட் போட­வேண்­டு­மென்­றாலும், அந்தப் பாதையில் சென்­றுதான் அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­க­வேண்டும். சேத­ம­டைந்த பாதை வழி­யா­கவே வாக­னங்­களும் புல்­டோ­சரும் இயந்­தி­ரங்­களும் எடுத்து செல்­லப்­ப­ட­வேண்டும். இவ்­வாறு அந்தப் பாதை வழியே சென்று அதனை புன­ர­மைக்­க­வேண்டும். இவ்­வாறு செயற்­படும் போது விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் எழு­வது என்­பது வழ­மை­யா­ன­தாகும்.
கடந்த பொதுத்­தேர்­த­லின்­போது ஐக்­கிய தேசி­ய­கட்­சிக்கு 106 ஆச­னங்­க­ளையும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு 95 ஆச­னங்­க­ளையும் மக்கள் வழங்­கி­யி­ருந்­தனர். தனித்து ஆட்சி அதி­காரம் செய்­வ­தற்கு மக்கள் இரு­பி­ர­தான கட்­சி­க­ளுக்கும் ஆணை வழங்­க­வில்லை. அவ்­வாறு ஆணை வழங்­கி­யி­ருந்தால் பாரா­ளு­மன்­றத்தில் 113 ஆச­னங்கள் ஒரு கட்­சிக்கு கிடைத்­தி­ருக்­க­வேண்டும்.
எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளிலும் தேசிய அர­சாங்கம் அமை­யு­மென்றே கூறி­யி­ருந்தோம். தேர்தல் முடி­வை­ய­டுத்து சக­லரும் ஒன்­றி­ணைந்து ஆட்சி செய்யும் தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யி­ருந்தோம். எமது புதிய அர­சாங்­கத்தின் மீது பெரும் எதிர்­பார்ப்பை மக்கள் வைத்­துள்­ளனர். சேத­ம­டைந்த பாதை­யினை புதுப்­பிப்­ப­தற்­காக அந்த வழியில் நாம் முன்­னேறி செல்­கின்றோம்.
இரண்டு வரு­டங்­க­ளுக்கு
முன்னர் ஏன் தேர்தல்?
எனக்கு முன்­பி­ருந்த ஆட்­சி­யாளர் இரண்டு வரு­டங்கள் பத­விக்­காலம் இக்கும் நிலையில் ஏன் தேர்­த­லுக்கு சென்றார். என்­பது தொடர்பில் நீங்கள் யாரும் கேள்வி எழுப்­பி­ய­தாக தெரி­ய­வில்லை. அதேபோல் அவரும் தனது பத­விக்­காலம் நிறை­வ­டை­வ­தற்கு இரு­வ­ரு­டங்கள் இருக்கும் நிலையில் தேர்­த­லுக்கு சென்றார் என்­பது குறித்து கூற­வில்லை. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நான் எட்டு விட­யங்­களை குறிப்­பிட்டு தேர்­த­லுக்கு செல்­வ­தாயின் அந்த எட்­டு­வி­ட­யங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று கோரி­யி­ருந்தேன்.
யுத்­த­மொன்­றுக்கு இரா­ணுவம் செல்­வ­தாயின் படை அதி­கா­ரிகள், மற்றும் படை­வீ­ரர்கள் மத்­தியில் அதற்­கான மன­நி­லை­யினை ஏற்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு தேர்­த­லுக்கு செல்­வ­தற்கு முன்னர் எமது கட்­சி­யினர் மத்­தியில் அதற்­கான மன நிலையை ஏற்­ப­டுத்­து­மாறு நான் கேட்­டி­ருந்­தேன. ஆனால் அவற்­றுக்கு செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை.
உண்­மை­யி­லேயே இரண்டு விட­யங்­க­ளுக்­காக மட்­டுமே தேர்­தலை முன்­ன­தா­கவே நடத்­து­வ­தற்கு முன்னாள் நாட்டின் தலைவர் தீர்­மா­னித்­தி­ருந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா தீர்­மா­னத்­திற்கு முகம் கொடுக்­க­வேண்­டிய நிலை, பொரு­ளா­தார பிரச்­சினை ஆகி­ய­வையே இந்த இரு கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருந்­தன.
அன்று நாட்­டுக்குப் பொருத்­த­மற்ற தீர்­மா­னங்­களே எடுக்­கப்­பட்­டன. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் புதன்­கி­ழ­மை­களில் தேனீர் விருந்­துக்­கான சந்­தர்ப்­ப­மா­கவே அமைச்­ச­ரவைக் கூட்டம் அமைந்­தி­ருந்­தது. அன்று ஆட்சி செய்த குடும்­பத்­தி­லுள்ள ஐந்து பேர் மட்டும் அமர்ந்­தி­ருந்து முடி­வு­களை எடுத்து விட்டு அந்த விட­யங்­களே அமைச்­ச­ர­வைக்கு கொண்­டு­வந்­தனர். அதி­கா­ர­மற்ற அமைச்­ச­ர­வையும் அர­சாங்­க­முமே அன்று காணப்­பட்­டன.
மாவட்­டங்­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீ­டுகள்
அன்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்­தவர் ஒவ்­வொரு மாவட்­டத்­திற்கும் சென்று நிதி ஒதுக்­கீ­டு­களை மேற்­கொண்டார். கொழும்­பி­லி­ருந்து மேடைகள், கட்­ட­வுட்­டுகள் மாவட்டம் தோறும் கொண்­டு­செல்­லப்­பட்­டன. பஸ்­களில் மக்கள் ஏற்றி இறக்­கப்­பட்­டனர். கட்­சியின் மாவட்டத் தலை­வர்­க­ளுக்கோ, அல்­லது மாவட்ட அமைச்­சர்­க­ளுக்கோ இது குறித்து அறி­விக்­கப்­ப­டு­வ­தில்லை. மாவட்டம் தோறும் குறித்த அமைச்சர் உரை­யாற்­று­வ­தா­கவே நிகழ்­வுகள் அமைந்­தி­ருந்­தன. ஐந்­து­ச­தத்­திற்­குக்­கூட மாவட்­டத்­தி­லுள்ள அமைச்­சர்கள் கணக்­கி­லெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு நிதி­ஒ­துக்­கி­யவர் தற்­போது மேதினக் கூட்­டத்­தினை நடத்­து­வ­தற்­காக பிர­தே­சங்கள் தோறும் சென்று போக்­கு­வ­ரத்­துக்கும் சாப்­பாட்­டுக்கும் நிதி பகிர்ந்து வரு­கின்றார். இந்த நிதி எங்­கி­ருந்து வந்­தி­ருக்­கின்­றது என்ற பிரச்­சி­னையும் எழுந்­துள்­ளது.
சொகுசு விமானக்
கொள்­வ­னவை நிறுத்­தினோம்
சிறி­லங்கன் எயார்லைன்ஸ் விமா­ன­சேவை நிறு­வனம் பெரும் நஷ்­டத்தில் இயங்­கு­கின்­றது. இந்த நிலையில் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் 250 கோடி ரூபா செலவில் அதி­சொ­குசு விமா­ன­மொன்றை கொள்­வ­னவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர். இலங்கை வங்கி மூலம் இதற்­கான ஒரு­துக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. நாம் இந்தக் கொள்­வ­னவை இரத்து செய்து அந்தப் பணத்தை விமான சேவை உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்யும் வகையில் மாற்­றி­யி­ருக்­கின்றோம்.
கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நில­விய ஊழல் மிக்க செயற்­பா­டு­களை ஒழிப்­ப­தற்­கா­கவும் நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கா­வுமே நான் அன்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினேன். 48 வரு­டங்­க­ளாக எதி­ராக செயற்­பட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து புதிய ஆட்­சியை உரு­வாக்கி ஜன­நா­ய­கத்தை உரு­வாக்­கி­யுள்ளோம்.
சில ஊடக நிறு­வ­னங்கள் செயற்­படும் விதத்தைப் பார்த்தால் அவர்கள் இவ்­வாறு ஊழல் மோச­டி­களை மேற்­கொண்ட தலை­வர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது. அன்­றைய காலத்தில் ஊட­க­வி­ய­லார்கள் கொல்­லப்­பட்­டனர். ஊடக நிறு­வ­னங்கள் எரிக்­கப்­பட்­டன. ஊடக நிறு­வ­னங்கள் மீதும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதும் அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், மற்றும் ஊடக நிறு­வ­னங்கள் தொடர்பில் நான் தற்­போது விப­ரங்­களை கோரி­யி­ருக்­கின்றேன். ஊட­கங்கள் ஒரு­பக்கம் சாராது நடு­நி­லை­யாக செயற்­ப­ட­வேண்டும் என்று தய­வாக கேட்­டுக்­கொள்­கின்றேன்.
சுதந்­திர கட்­சிக்குள் உள்­மு­ரண்­பாடு இல்லை. கட்­சியை தோல்­வி­ய­டையச் செய்ய முயல்­ப­வர்கள் தொடர்­பி­லேயே முரண்­பாடு தொடர்­கி­றது. அர­சாங்­கத்தை உடைத்து புதிய ஆட்­சியை உரு­வாக்கும் சூழ்ச்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. சூழ்ச்­சிகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு ஒரு­போதும் நான் இட­ம­ளிக்க மாட்டேன். ஆட்­சியை அமைப்­ப­தென்றால் பாரா­ளு­மன்­றதில் 113 உறுப்­பி­னர்­களின் பெரும்­பான்மை காண்­பிக்­கப்­ப­ட­வேண்டும். பிர­த­மரின் ஒத்­து­ழைப்­பின்றி எனது ஆசீர்­வா­த­மின்றி இவ்­வாறு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாது.
சுதந்­தி­ரக்­கட்சி கடந்த தேர்­தலில் 95 ஆச­னங்­களைப் பெற்­றி­ரு­நந்­தது. சூழ்ச்சி செய்­ப­வர்கள் இதில் 50 ஆச­னங்­களைக் கூட பெற்­று­விட முடி­யாது. சரி 50 உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை இவர்கள் பெற்­றாலும் இன்­னமும் 63 உறுப்­பி­னர்கள் பெரும்­பான்­மையை பெற தேவை­யாகும். ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஜே.வி.பி. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, ஆகி­ய­வற்றின் ஆத­ரவைப் பெற்­றால்தான் இந்தப் பெரும்­பான்­மை­யினை சூழ்ச்சி செய்வோர் பெற­மு­டியும். வாழ்க்­கையில் ஜே..வி.பி. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றின் ஆத­ரவு இவர்கள் பெற முடி­யாது.
ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆத­ரவும் இவர்­க­ளுக்கு கிடைக்­கப்­போ­வ­தில்லை. இவ்­வாறு சூழ்ச்­சியை மேற­கொள்­ப­வர்கள் நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லை­யென்றும் அர­சாங்கம் தொடர்ந்தும் பய­ணிக்க முடி­யாது என்றும் காண்­பிக்­கவே முயல்­கின்­றனர்.
ஹைட்பார்க் கூட்டம்
அண்­மையில் ஹைட்­பார்க்கில் கூட்­ட­மொன்­றினை இவர்கள் நடத்­தி­யி­ருந்­தனர். உள­வுத்­த­க­வல்­களின் படி இந்தக் கூட்­டத்­திற்கு 11900 பேரே வந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தக்­கூட்­ட­மா­னது ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விசா­ரணை நடத்தி வரும் அதி­கா­ரி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தற்­கா­கவே நடத்­தப்­பட்­டது. இங்கு உரை­யாற்­றிய முன்னாள் அரச தலைவர் இங்கு கூடி­யுள்ள மக்­களை நீதித்­து­றை­யினர் பார்க்­க­வேண்டும் என்று உரை­யாற்­றி­யி­ருந்தார். இந்­தக்­கூற்றின் மூலம் அவர் நீதித்­து­றை­யி­ன­ருக்கு மற்றும் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுப்­ப­தையே அவ­தா­னிக்க முடிந்­தது.
உல­கி­லேயே தோல்­வி­யுற்ற ஒரு தலை­வ­ருக்கு விரும்­பிய இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும், பாது­காப்பு தரப்­பி­ன­ரையும் அழைத்­துக்­கொண்டு ஹெலி­கொப்டர் மூலம் வீடு திரும்­பு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்த ஒரே தலை­வ­ராக நானே இருக்­கின்றேன்.
கேள்வி:- ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மீன்­பிடி இறக்­கு­மதி தடை நீக்­கப்­பட்­டுள்­ளது. இதேபோல் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையும் கிடைக்­குமா?
பதில்:- மீன்­பிடி இறக்­கு­மதி தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் தளர்த்­து­வ­தற்கு நான், பிர­தமர் , வெ ளிநாட்டு அமைச்சர் உட்­பட அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கையே கார­ண­மாகும். தனிப்­பட்ட முயற்­சி­யாக இதைக் கொள்ள முடி­யாது. கொள்கை ரீதி­யான நட­வ­டிக்­கை­யா­கவே இது அமைந்­தி­ருந்­தது. இதேபோல் வெகு­வி­ரைவில் ஜி.எஸ்.பி. வரிச்­ச­லு­கையும் கிடைக்கும்.
கேள்வி:- பாதிக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தக­வல்­களை கோரி­யுள்­ளீர்கள், இதேபோல் தாக்­கு­தல்­க­ளுக்கு உள்­ளான ஊட­க­நி­று­வ­னங்­க­ளுக்கு நட்ட ஈடுகள் வழங்­கப்­ப­டுமா?
பதில்:- ஊடக நிறு­வ­னங்கள் இதற்­கான கோரி­கை­களை முன்­வைத்தால் அர­சாங்கம் எவ்ற ரீதியில் இவை குறித்து பரி­சீ­லிக்­கப்­படும்.
கேள்வி:- சிறி­லங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தை தனியார் மயப்­ப­டுத்தப் போவ­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?
பதில்: சிறி­லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வனம் மிக மோச­மான நிலையில் காணப்­ப­டு­கின்­றது. 21 விமா­னங்கள் இருக்­கின்ற நிலையில் ஐயா­யிரம் ஊழி­யர்கள் இதில் பணி­யாற்­று­கின்­றனர். நாம் ஆட்சி அமைத்த பின்னர் விமா­னங்­களில் வணிக இருக்­கை­களில் இருந்தே நான் பயணம் செய்­கின்றேன். இதனால் அர­சாங்கம் வேறு அர­சாங்­கத்­து­டனோ அல்­லது சர்­வதே நிறு­வ­னத்­து­டனோ ஒன்­றி­ணைந்து இந்த சேவை­யினை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது. அவ்­வாறு இல்­லை­யானால் மக்­களே கடன்­சு­மையை சுமக்­க­வேண்டி வரும்.
கேள்வி:சமஷ்டி மூல­மான அர­சி­யல்­தீர்வு வேண்­டு­மென்று வட­மா­கா­ண­சபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. தமிழ்­நாட்டு முத­ல­மைச்சர் செல்வி ஜெய­ல­லிதா இலங்­கையில் வேறு நாடு உரு­வா­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென்று கூறி­யி­ருக்­கின்றார். இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் உங்­களின் நிலைப்­பாடு என்ன?
பதில்:- வெளி­நாட்­டி­லி­ருந்­து­கொண்டு ஒவ்­வொ­ரு­வரும் கூறும் விட­யங்கள் தொடர்பில் கவ­னத்­தில்­கொள்­ள­வேண்­டி­ய­தில்லை. தமி­ழ­கத்தில் தேர்­தலை இலக்­காகக் கொண்டு கருத்­துக்­களை கூறு­கின்­றனர். மத்­திய அரசின் தலை­வர்­க­ளுடன் நாம் இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். இதனால் தேர்­தலை இலக்­காகக் கொண்டு தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் கவ­லை­கொள்­ளத்­தே­வை­யில்லை.
அத்துடன் பொதுவாக எடுத்துக்கொண்டால் மாகாண சபைகளில் முன்மொழிவுகள் பிரேரணைகள், நிறைவேற்றப்படுகின்றன. பாராளுமன்றத்தில் 1947 ஆம் ஆண்டு முதல் பல பிரேரணைகள் சட்டமூலங்கள், நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அப்படியே உள்ளன. வடமாகாணசபையிலும், பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அது அவர்களது கருத்தாக அமைந்துள்ளது. ஆனால் நாட்டை பிரிப்பதற்கோ , அல்லது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படுவதற்கோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.
வடக்கு, மற்றும் தெற்கில் அரசியல் இலாபம் பெறுவதற்கு சிலர் முயலுகின்றனர். வடக்கு, தெற்கில் சிலர் தமது அடிப்படைவாதக் கொள்கைகளை முன்வைக்கின்றனர். எது எப்படியிருந்தாலும் நாட்டை துண்டாடுவதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
கேள்வி:- 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை எவ்வாறானதாக அமைந்துள்ளது? .
பதில்:- ஐ.நா. ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த போது மூன்று விடயங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியிருந்தார். வடக்கு மக்களின் மீள் குடியேற்றம், காணாமல் போனோர் விவகாரம், நீதிமன்றத்தின் சுயாதீனம் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டியிருந்தார். ஜெனிவா தீர்மானம் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
கேள்வி:- வடக்கில் முன்னாள் விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்:- இந்தப் பிரச்சினை குறித்து நான் தேடிப்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.    நன்றி வீரகேசரி 












கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.!


28/04/2016 தேடப்­பட்­டு­வரும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உத­யங்க வீர­துங்க தாய்­லாந்தில் மஹிந்த ராஜபக் ஷவை சந்­தித்­தது எவ்­வாறு என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் ஆரா­யப்­பட்­ட­தாக அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
புனர்­வாழ்வு வழங்­கப்­பட்ட புலிகள் கைது செய்­யப்­ப­டு­வது அண்­மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கே­யாகும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
உத­யங்க வீர­துங்­கவின் ,ராஜ­தந்­திர கட­வுச்­சீட்டை இரத்து செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் டாக்டர்.ராஜித சேனா­ரத்ன இதனைத் தெரி­வித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
தாய்­லாந்து சென்­றுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தேடப்­பட்­டு­வரும் முன்னாள் ரஷ்ய தூதுவர் உத­யங்க வீர­துங்­கவை சந்­தித்­துள்ளார். இது தொடர்­பான புகைப்­ப­டங்கள் வெளி­யா­கி­யுள்­ளன.
பல குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு அரசால் தேடப்­பட்டு வரும் உத­யங்க வீர­துங்க எவ்­வாறு தாய்­லாந்து சென்றார் என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது.
அத்­தோடு அவ­ரது இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்டு 2020 ஆம் ஆண்டு வரை செல்­லு­ப­டி­யா­க­வுள்­ளது. இதனை இரத்து செய்­யவும் தடை­செய்­யவும் வெளி­வி­வ­கார அமைச்சு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.
இக் கட­வுச்­சீட்டை தடை செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தோடு விசா­ர­ணை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.
அவரை கைது செய்­வ­தற்கும் நடவ டிக்கைகள் எடுக்கப்படும். அதேவேளை புனர்வாழ்வு வழங்கப்பட்ட புலிகள் கைது
செய்யப்படுவது அண்மையில் கண்டுபிடிக் கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக விசா ரணைகளை நடத்துவதற்கேயாகும் என்றார்.   நன்றி வீரகேசரி 











அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


29/04/2016 கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட மாணவர்கள் இன்று பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் வீதியில் அமர்ந்திருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதாகவும் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறுவதால் பாடங்கள் நடைபெறுவதில்லையெனவும் நிர்வாக அடக்குமுறை காரணமாக மாணவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் ஆர்பாட்டகாரார்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.    நன்றி வீரகேசரி 














மகனை கருணாவும் மற்றைய இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்:  கண்ணீருடன் தாய் சாட்சியம்

29/04/2016 தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்­க­ளையும் புலி­களும் பிடித்துச் சென்­றனர். இன்று மூன்று பிள்­ளை­க­ளையும் இழந்து மன­நலம் பாதிக்­கப்­பட்­டவள் போல் இருக்­கின்றேன் என பூந­கரி பள்­ளிக்­கு­டாவைச் சேர்ந்த சோம­சுந்­தரம் ஜெய­மேரி எனும் தாய் கண்­ணீ­ருடன் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் இறு­திநாள் அமர்வு நேற்று வியா­ழக்­கி­ழமை கிளி­நொச்சி மாவட்ட செய­ல­கத்தில் பளை மற்றும் பூந­கரி பிர­தேச செய­லக பிரி­வு­களை சேர்ந்­த­வர்­க­ளுக்­காக இடம்­பெற்­றது. இதன்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் தனது சாட்­சி­யத்தில்,
1978 ஆம் ஆண்டு பிறந்த எனது மூத்த மகன் 2004 ஆம் ஆண்டு மட்­ட­க்க­ளப்பு குருக்­கள்­மடம் பகு­தியில் வைத்து கருணா குழுவால் பிடித்துச் செல்­லப்­பட்டார். இவர் பின்னர் இயக்­கத்தில் இருக்கும் போது இறந்து விட்டார்.
பின்னர் 1986 ஆம் ஆண்டு பிறந்த இரண்­டா­வது மகன் சோம­சுந்­தரம் இரு­த­ய­ராசா 2008-–2-–6 அன்று புலி­களால் பிடித்­துச்­செல்­லப்­பட்டார் இன்றுவரை எந்த தக­வலும் இல்லை.
இந்த நிலையில் 1989 ஆம் ஆண்டு பிறந்த எனது மூன்­றா­வது மகனை 2009- ஆம் ஆண்டு 2-8 ஆம் திகதி புலிகள் கட்­டாய ஆட்­சேர்ப்பில் பிடித்துச் சென்­றனர். அவர் தொடர்­பிலும் எந்த தக­வலும் இல்லை. என கண்­ணீ­ருடன் தெரி­வித்த ஜெய­மேரி, புலி­களால் பிடிக்­கப்­பட்ட எனது இரண்டு பிள்­ளை­களில் ஒரு மகனை மாத்­தளன் கடற்­க­ரையில் எனது ஊர­வர்கள் கண்­டுள்­ளனர். அதில் ஒரு மகன் மாத்­தளன் பகு­தியில் இருந்து சாலை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்­த­தாக கண்­ட­வர்கள் சொன்­னார்கள் என்றும் தெரி­வித்தார்.
எனது மூன்று ஆண் பிள்­ளை­களும் இல்­லாமல் நான் பெரிதும் கஷ்­டப்­ப­டு­கின்றேன், அவர்­களை நினைத்து நினைத்து மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதற் காக சிகிச்சையும் பெறுகின்றேன் எனப் பையிலிருந்த குளிசைகளையும் எடுத்து காட்டினார்.   நன்றி வீரகேசரி