உலகச் செய்திகள்


மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு

துருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்

ஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.!

சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி

அறிந்­து­கொள்ள தன்­னந்­த­னியே பய­ணச்­சீட்­டின்றி விமா­னத்தில் பய­ணித்த 11 வயது ரஷ்ய சிறுமி






மலேசிய எம்.எச்.17 விமானம் உக்ரேனிய போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது : புதிய சான்றுகள் தெரிவிப்பு




25/04/2016 மலேசிய எம்.எச். 17 விமானமானது உக்ரேனிய போர் விமானமொன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய சான்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி போயிங் 777 விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த விமானம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி கிழக்கு உக்ரேனுக்கு மேலாக வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் பிரித்தானிய பிபிசி ஊடகத்தில் வெளியான புதிய ஆவணப்படத்திற்கு மேற்படி விமானம் உக்ரேனிய வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்தவர்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அந்த விமானம் உக்ரேனிய போர் விமானமொன்றாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.    நன்றி வீரகேசரி 








துருக்கியில் தற்கொலை குண்டு தாக்குதல்

28/04/2016 துருக்கி - பர்ஷா நகரில் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை குண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த குண்டு வெடிப்பு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.




குறித்த தற்கொலை குண்டு தாக்குதல் பெண் ஒருவரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என பர்ஷா நகரின் ஆளுனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இத் தாக்குதலை இதுவரை எந்த அமைப்பும் உரிமையோரியில்லை.


நன்றி வீரகேசரி 











ஒத்திவைக்கப்பட்டது ஜெ. சொத்துக்குவிப்பு மேன்முறையீடு.!


28/04/2016 சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேன்முறையீடு மீதான விசாரணை மே 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு வாக்குரைஞர் சேகர் நாபே மே 3ஆம் திகதி தனது வாதத்தை தொடர்ந்து முன் வைப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.   நன்றி வீரகேசரி 











சிரியாவில் புனித ஸ்தலத்துக்கு அருகில் கார் குண்டுத் தாக்குதல்; 7 பேர் பலி


26/04/2016 சிரிய தலை­நகர் டமஸ்­கஸின் தெற்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள ஷியா இனத்­த­வர்­களின் புனித ஸ்தல­மொன்­றுக்கு அண்­மையில் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற கார் குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 7 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செய்தி முகவர் நிலை­ய­மான சனா தெரி­விக்­கி­றது.


அல் திய­பியஹ் நக­ரி­லுள்ள சேயிடா ஸெய்னாப் புனித ஸ்தலத்­திற்கு அருகில் இடம்­பெற்ற இந்தத் தாக்­கு­தலில் குறைந்­தது 20 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.


இந்­நி­லையில் இந்தத் தாக்­கு­தலில் 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரிவிக்கிறது.


எனினும் மேற்­படி தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் பொது­மக்கள் எத்­தனை பேர் என்­பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.


கடந்த பெப்­ர­வரி மாதம் மேற்­படி புனித ஸ்தலத்­துக்கு அண் மையில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் குறைந்தது 134 பேர் உயிரிழந்திருந்தனர்.



 நன்றி வீரகேசரி 










அறிந்­து­கொள்ள தன்­னந்­த­னியே பய­ணச்­சீட்­டின்றி விமா­னத்தில் பய­ணித்த 11 வயது ரஷ்ய சிறுமி

29/04/2016 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட இரு­வ­ருக்கு சிலு­வையில் அறைந்த பின்னர் தலையில் துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை வெளியி­டப்­பட்ட இந்த புகைப்­ப­டங்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.


சிரிய ரக்கா நகரில் பட­மாக்­கப்­பட்டு' உள­வா­ளி­களை அறு­வடை செய்தல்' என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்தப் புகைப்­ப­டங்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் வில்­லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெய­ரி­லான ஊட­கத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­யொ­ருவர், செம்­மஞ்சள் ஆடை அணிந்த நிலையில் காணப்­பட்ட குறிப்­பிட்ட இரு உள­வா­ளி­க­ளுக்கும் அருகில் நின்­ற­வாறு அவர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட குற்­றங்கள் குறித்து அறிக்­கை­யொன்றை வாசிப்­ப­தையும் தொடர்ந்து அந்த இரு­வரும் சிலுவைக் கட்­ட­மைப்­பு­களில் கட்­டப்­பட்­டி­ருப்­ப­தையும் அவர்கள் இரு­வரும் தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­லப்­ப­டு­வ­தையும் தீவி­ர­வா­தி­களால் வெளி­யி­டப்­பட்ட பிந்­திய புகைப்­ப­டங்கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.


கண்கள் கட்­டப்­பட்­டி­ருந்த அந்த உள­வா­ளி­களின் ஆடையில், ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் எதி­ரி­க­ளுக்­காக அவர்களை உளவு பார்க்கும் ஏனையவர்களுக்கும் இதே கதியே நேரிடும் என எச்சரிக்கும் அரேபிய மொழியிலான குறிப்பு குத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி