உலகச் செய்திகள்


ஈக்­கு­வ­டோரை உலுக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி 77 பேர் உயி­ரி­ழப்பு ; 588 பேர் காயம்

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்

ஆப்கான் தலை­ந­கரில் தற்­கொலைக் குண்டு தாக்­குதல்; 30 பேர் உயி­ரி­ழப்பு; 327 பேர் காயம்
ஈக்குவடோரை தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்










ஈக்­கு­வ­டோரை உலுக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி 77 பேர் உயி­ரி­ழப்பு ; 588 பேர் காயம்





18/04/2016 ஈக்­கு­வ­டோரை கடந்த சனிக்­கி­ழமை இரவு தாக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி குறைந்­தது 77 பேர் பலி­யா­ன­துடன் 588 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
இது ஈக்­கு­வ­டோரை 1979 ஆம் ஆண்­டிற்கு பின்னர் தாக்­கிய மிகப் பெரிய பூமி­ய­திர்ச்­சி­யா­க­வுள்­ளது.
மேற்­படி பூமி­ய­திர்ச்சி வட நக­ரான டுயிஸ்­னி­யி­லி­ருந்து சுமார் 27 கிலோ­மீற்றர் தொலைவில் 19.2 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கி­யுள்­ளது.
அந்தப் பூமி­ய­திர்ச்­சியால் அது மையங்­கொண்­டி­ருந்த பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சுமார் 300 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள குவேகில் நக­ரி­லுள்ள பாலம் அழிவடைந்­துள்­ள­துடன் பிராந்­திய கட்­ட­மைப்­பு­க­ளுக்கும் கடும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் இத்­தா­லிக்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த ஈக்­கு­வடோர் ஜனா­தி­பதி ராபயல் கொர்­ரியா, இந்த பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து தாய்­நாடு திரும்­பி­யுள்ளார். அவர் தனது நாட்டில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்றைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.
"இது மிகவும் வேதனை மிக்க தருணமாகவுள்­ளது. நாட்டு மக்­களை அமை­தி­யு­டனும் ஐக்­கி­யத்­து­டனும் இருக்க கோரு­கிறேன். இதனால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளி­லி­ருந்து மீள நாம் பல­மாக இருப்­பது அவ­சி­ய­மா­க­வுள்­ளது" என அவர் கூறினார்.
“வீதி­க­ளையும் மருத்­து­வ­ம­னை­க­ளையும் மீள நிர்­மா­ணிக்க முடியும். ஆனால் இழந்த உயிர்­களை நாம் மீளப்­பெற முடி­யாது. அதுவே மிகவும் வேதனை தரும் இழப்­பா­க­வுள்­ளது" என அவர் மேலும் குறிப்­பிட்டார்.
மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் பாதிக்­கப்­பட்ட பின்­தங்­கிய பிராந்­தி­யங்­களைச் சென்­ற­டை­வது சிர­ம­மா­க­வுள்­ளதால் அங்கு ஏற்­பட்ட பாதிப்­பு­களை அறிய முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பூமி­ய­திர்ச்­சியால் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள பொர்­தோ­விஜோ பிராந்­தி­யத்­தி­லுள்ள பல கட்­ட­டங்கள் தரை­மட்­ட­மா­கி­யுள்­ள­தா­கவும் அங்­குள்ள குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் குழுக்கள் நிலை­மையை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி கொள்­ளை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
அதே­ச­மயம் பூமி­ய­திர்ச்சி கார­ண­மாக பிறி­தொரு நக­ரான பெடர் னேல் முழு­மை­யாக தரை­மட்­ட­மா­கி­யுள்­ள­தாக அந்த நகரின் மேயர் கப்­றியல் அல்­சிவார் தெரிவித்தார்.
இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து பிறப்பிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சி தொடர்பில் அயல் நாடான பெருவின் வட கடற்கரைப் பிராந்தியங்களிலும் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  










நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்


18/04/2016 தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில்நேற்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளதுடன் 2500 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எஸ்மரல்டாஸ், லாஸ் ரியோஸ், மனாபி, சாண்டா எலினா, கயாஸ், சாண்டோ டோமின்கோ உள்ளிட்ட 6 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் அங்கு முழு வீச்சில் நடந்து வருகின்றன. மீட்பு பணியில் 10 ஆயிரம் ராணுவ வீரர்களும், 3,500 பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். 
நிலநடுக்கம் நடந்த இடத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக 80 பேருந்துகள் மற்றும் 5 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு படையினரால் தேடுதல் பணியில் ஈடுபட இயலவில்லை. 
சனிக்கிழமை ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை விட 20 மடங்கு அதிக சக்திவாய்ந்ததாக ஈகுவேடாரில் இருந்ததாக லண்டன் நார்த்ஈஸ்ட் ஓபன் பல்கலைக்கழகத்தில் பிளானிட்டரி ஜியோ சயின்ஸ் துறை ஆராய்ச்சியாளர் டேவிட் ரொத்தேரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  





ஆப்கான் தலை­ந­கரில் தற்­கொலைக் குண்டு தாக்­குதல்; 30 பேர் உயி­ரி­ழப்பு; 327 பேர் காயம்
20/04/2016 ஆப்­கா­னிஸ்­தா­னிய தலை­நகர் காபூலில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் குறைந்­தது 30 பேர் பலி­யா­ன­துடன் 327 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட வாக­னத்தை பயன்­ப­டுத்தி இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது. மேற்­படி தாக்­கு­தலின் போது துப்­பாக்கிச் சூட்டு சத்­தங்­களும் கேட்­ட­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தமது குழு­வி­னரே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக தலிபான் தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர். பாது­காப்பு அமைச்சுக் கட்­டடம் மற்றும் இரா­ணுவ வளா­கங்கள் அமைந்­தி­ருந்த பிராந்­தி­யத்­துக்கு அண்­மை­யி­லுள்ள குடி­யி­ருப்புப் பிர­தே­சத்தில் சன­சந்­த­டி­மிக்க காலை வேளை இந்தக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் தலிபான் தீவி­ர­வா­திகள் அந்­நாட்டின் பிர­தான உளவு முகவர் நிலை­ய­மான தேசிய பாது­காப்பு பணி­யக கட்­ட­டத்­துக்குள் ஊடு­வி­யுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அந்தப் பிராந்­தி­யத்­துக்­கான வீதிகள் பாது­காப்புப் படை­யி­னரால் மூடப்­பட்­டுள்­ளன.
தாக்­குதல் நடத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஒரு சில நூறு யார்கள் தூரத்தில் அந்­நாட்டு ஜனா­தி­ப­தியின் அலு­வ­லகம் அமைந்­துள்­ளது. இது மூர்க்­கத்­த­ன­மான தாக்­குதல் என குற்­றஞ்­சாட்­டி­யுள்ள ஜனாதிபதி அலுவலகம், இந்தத் தாக்குதலால் பாதுகாப்பு படையினரின் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான தீர்மானம் பலவீனமடைய மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.





நன்றி வீரகேசரி






ஈக்குவடோரை தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
20/04/2016 ஈக்­கு­வ­டோரைத் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி பலி­யா­ன­வர்கள் தொகை 413 ஆக உயர்ந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
ஈக்­கு­வ­டோரின் பசுபிக் பிராந்­திய கடற்­க­ரையை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நிலையில் பலி­யா­ன­வர்கள் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.


கடந்த 7 தசாப்த காலத்தில் ஈக்­கு­வடோர் எதிர்­கொண்ட பாரிய பூமி­ய­திர்ச்­சி­யாக இது விளங்­கு­கி­றது. இந்த அனர்த்­தத்தில் சிக்கி சுமார் 2,500 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.
பூமி­ய­திர்ச்சி தாக்கி இரு நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்­தினம் திங்­கட்­ கி­ழமை பின்­னி­ரவு கடற்­கரை நக­ரான மான்­டா­விற்கு அருகில் இடிந்து விழுந்த ஹோட்­ட­லொன்றின் இடி­பா­டு­களின் கீழி­ருந்து 9 மாத மற்றும் 3 வய­து­டைய இரு பால­கிகள் உட்­பட 6 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­க­ளி­லான மீள் நிர்மாணப்பணி­க­ளுக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான நிதி தேவைப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி ராபயல் கொர்ரியா குறிப்பிட்டுள்ளார்.


 நன்றி வீரகேசரி












இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்



20/04/2016 'இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூபா மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்" என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.
"கியூபாவின் மூத்த தலைவர்கள் மறைந்தாலும்கூட அந்நாட்டின் புரட்சிகர சிந்தனை தலைமுறைகள் கடந்து நிற்கும்" என்பதே அச்செய்தி.
நேற்று கியூபா காங்கிரஸ் கூடி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பை 84 வயதான ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது.
முக்கிய முடிவு எட்டப்பட்ட அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர், ஃபிடெல் காஸ்ட்ரோ கியூபா அரசு தொலைக்காட்சியில் தோன்றினார் 
தலைநகர் ஹவானாவில் உள்ள பாரம்பரிய அரங்கில் ஃபிடெல் காஸ்ட்ரோ உரையாற்றினார். அவர் பேச்சை கேட்க குழுமியிருந்த விருந்தினர்கள் சிலர் காஸ்ட்ரோவின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கண்ணீர் சிந்தினர்.
அவர் பேசியதாவது: இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூபா மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
நான் விரைவில் 90 வயதை தொட்டு விடுவேன். அதன்பின்னர் நானும் மற்ற வயோதிகர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்டுகள் இந்த புவியில் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்வர்.
கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடனும் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாச்சார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றி போராட வேண்டும்.  நன்றி வீரகேசரி