இலங்கைச் செய்திகள்


யோசித்தவின் பதவி, தொழில் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த

இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல் 

காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் :  தாய் ஒருவர்  சாட்­சி­யம்

6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு பிணை

லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்

விடுவிக்கப்படாத காணிகள் விரைவில்  உரிமையாளர்களிடம் வழங்கப்படவேண்டும் : அமெரிக்கா  வலியுறுத்தல்

வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி யாழில் கவ­ன­யீர்ப்பு 

எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பேராதனைப் பல்கலைக்கழக கலை பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்






யோசித்தவின் பதவி, தொழில் தற்காலிகமாக இடைநிறுத்தம்

29/02/2016 பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன்  யோசித்த  ராஜபக்ஷவின் பதவி மற்றும் தொழில் ஆகியன  பெப்ரவரி 28  ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யோஷித்தவின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் எல்லாம்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்.  அவர் கடற்படை தலைமையகம் அனுமதி இல்லாமல் எந்த கடற்படை வளாகத்திற்குள்  நுழைய அனுமதி கிடையாது என கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி  தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார் மஹிந்த


29/02/2016 சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் மீண்டும் இன்று கடுவெல நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார். 
மேலும் இன்று யோஷித்த ராஜபக்ஷ வின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் சமூகமளித்திருந்தார். 
இந் நிலையில் குறித்த பிணை மனு விசாரணை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு அன்று இடம்பெற்றவேளையிலும் மஹிந்த ராஜபக்ஷ கறுப்பு நிற கோட்டினை அணிந்து நீதிமன்றதிற்கு சமுகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி 















இராணுவத்திடமே எமது பிள்ளைகள் : மீட்டுத்தருமாறு ஆணைக்குழு முன்னிலையில் தாய்மார் கதறல் 

01/03/2016 எமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு பல இடங் களிலும் முறையிட்டு விட்டோம். ஆனால் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல்போனோரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனாதி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்சேரி பிர­தேச செயலர் பிரிவில் நேற்றைய தினம் இடம்­பெற்­ற­போதே தமது உறவுகளை தொலைத்து விட்டு தவிக்கும் மக்கள், ஆணைக்குழு அதிகாரி களிடம் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
இந்த விசாரணை அமர்வில் சாவ­கச்­சேரிப் பகு­தியைச் சேர்ந்த ஆசி­ரி­ய­ரான ஸ்ரீஸ்­வரி புஸ்­ப­ராசா என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
யாழ்ப்­பா­ணத்தில் ஏற்­பட்ட இடப்­பெ­யர்­வினை அடுத்து வன்னி நோக்கி நாம் குடும்­பத்துடன் இடம்­பெ­யர்ந்­தி­ருந்தோம். இந்­நி­லையில் காணா­மல்­போன புஸ்­ப­ராசா அஜிந்தன் (வயது 18) என்ற எனது மகன் மல்­லாவி மத்­திய கல்­லூ­ரியில் உயர்­த­ரத்தில் கல்வி கற்று வந்தார்.
இதன்­போது 2008 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை பிடித்துச் சென்­றி­ருந்­தனர். இவ்­வாறு பிடித்துச் செல்­லப்­பட்ட எனது மகன் மீண்டும் எம்­மிடம் தப்­பித்து வந்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து இரண்­டா­வது தட­வையும் விடு­த­லைப்­பு­லி­களால் எனது மகன் பிடித்துச் செல்­லப்­பட்டு மீண்டும் தப்­பித்து வந்த நிலையில் உற­வினர் வீட்டில் சுமார் ஒரு வருடம் அவரை மறைத்து வைத்­தி­ருந்தோம். எனினும் மூன்றாம் தட­வை­யா­கவும் விடு­த­லைப்­பு­லிகள் எனது மகனை கைது செய்­தி­ருந்­தனர் . இந்­நி­லையில் அவர்­க­ளி­ட­மி­ருந்து மீண்டும் தப்­பித்து வந்த எனது மகனை முள்­ளி­ய­வளை புது­மாத்­தளன் பகு­தியில் 200-9ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இறு­தி­யாகக் கண்­டி­ருந்தோம். அதன்­போது அவ­ருடன் கதைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் எமக்குக் கிடைக்­க­வில்லை.
இந்­நி­லையில் நாம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­ததன் பின்னர் எமது உற­வினர் ஒருவர், 2009 மே மாதம் புது­மாத்­தளன் பகு­தியில் எனது மகனை இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருந்­ததை கண்­ட­தாகத் தெரி­வித்­தி­ருந்தார்.
2013, 2014 ஆண்டுகளில் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் கைகள் கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் எனது மக­னுடன் பலர் நிலத்தில் இருத்தி வைக்­கப்­ப­பட்­டுள்­ள­துடன் சுற்­றி­வர இரா­ணு­வத்­தினர் நிற்­ப­தாக புகைப்­படம் ஒன்று பிர­சு­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.
இத­னை­ய­டுத்து குறித்த பத்­தி­ரி­கையின் ஆதா­ரத்­தோடு எனது மகனை மீட்­டுத்­த­ரு­மாறு மனித உரிமை ஆணை­ய­கத்­திலும் வேறு பல இடங்­க­ளிலும் முறை­யிட்­டி­ருந்தேன்.
எனினும் இது­வரை எந்தப் பதிலும் எமக்குக் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. தயவு செய்து எனது மகனை திருப்பித் தாருங்கள். எனது மகன் உயி­ரு­ட­னேயே உள்ளார் என குறித்த தாயார் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.
சிவில் காரி­யா­ல­யத்தில் வைத்து எனது மகன் காணா­மல்­போ­யுள்ளார்
இதேவேளை கையெ­ழுத்து வைக்­கப்­ப­ட­வேண்­டு­மென இரா­ணு­வத்தால் கொடி­காமம் சிவில் காரி­யா­ல­யத்­திற்கு அழைக்­கப்­பட்ட மகன் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் இதன் பின்­ன­னியில் தமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் எழு­து­மட்­டுவாள் தெற்குப் பகு­தியைச் சேர்ந்த கந்­த­சாமி பரி­மளம் எனும் தாய சாட்­சி­ய­ம­ளித்­தார்.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி காணா­மல்­போன கந்­த­சாமி ஹரி­கரன் (வயது 18) என்ற தனது மகன் தொடர்பில் ஆணைக்­குழு முன்­னி­லையில் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்கையில்
என்­னு­டைய மகனை விடு­த­லைப்­புலி அமைப்பைச் சேர்ந்­தவர் எனக்­கூறி கொடி­காமம் இரா­ணுவ சிவில் காரி­யா­ல­யத்­திற்கு வந்து கையெ­ழுத்து இடு­மாறு அழைக்­கப்­பட்­ட­டி­ருந்தார்.
இதன் போது அவரை அழைத்துக் கொண்டு நானும் ஆரம்­பத்தில் சென்­றி­ருந்தேன். பின்னர் என்னை அங்கு வர­வேண்டாம் எனவும் மக­னை­மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என அங்­கி­ருந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் என்­னிடம் தெரி­வித்­தி­ருந்­தனர். கையெ­ழுத்து இடு­வ­தற்கு மட்­டுமே என எண்ணி கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி தனி­யாக எனது மகனை அனுப்பி வைத்­தி­ருந்த நிலையில் அவர் அன்­றைய தினம் வீட்­டுக்குத் திரும்­ப­வில்லை.
இந்­நி­லையில் அவர் அங்­குள்ள இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என்­பதை பின்னர் அறிந்­து­கொண்டேன். எனது மகனின் கைதின் பின்­ன­னியில் எமது ஊரைச் சேர்ந்த மகா­லிங்கம் என்­பவர் செயற்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. எனினும் அவர் தற்­போது எமது ஊரில் இல்லை. எங்­கு­சென்றார் என்­பதும் தெரி­யாது.
அத்­துடன் குறித்த சிவில் காரி­யா­ல­யத்தில் குமார, நரையன் என இரண்டு இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் எனக்குத் தெரியும் எனத் தெரி­வித்தார்.
மேலும் தனது மகன் சாவ­கச்­சேரி சர­சாலைப் பகு­தி­யி­லேயே தற்­போதும் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை அங்­கி­ருந்து மீட்டுத் தரு­மாறும் குறித்த ஆணைக்­குழு அதி­கா­ரி­க­ளிடம் அவர் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.
கோவிலில் தங்கி நின்ற மகன்­களை இரா­ணு­வமே பிடித்துச் சென்­றது
கொடி­காமம் இரா­மச்­சந்­திரன் செல்­லம்மா என்ற தாய் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,
இரா­மச்­சந்­திரன் இரா­ச­குமார் (வயது 24) என்ற எனது மகன் கோவிலில் இர­வு­வே­லைக்­காக தங்கி நின்­றுள்ளார். இதன்­போது அங்கு சென்ற இரா­ணு­வத்­தினர் அவர்­களைப் பிடித்துச் சென்­றுள்­ளனர். இத­னை­ய­டுத்து வரணி இரா­ணுவ முகா­மிற்கு சென்ற நாம் எமது பிள்­ளை­களை விடு­விக்­கு­மாறு கோரி­யி­ருந்தோம். இதன்­போது எமது பிள்­ளை­களை தாங்கள் பிடிக்­க­வில்லை எனவும் இப்­ப­கு­திக்குள் மீண்டும் மீண்டும் வரு­வதை தவிர்த்துக் கொள்­ள­வேண்டும் என வும் தெரி­வித்­தி­ருந்­தனர்.
இத­னை­ய­டுத்து நாம் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­தி­ருந்தோம். அவர்­களும் இடை­யி­டையே விசா­ரணை என எம்­மோடு வந்து கலந்­து­ரை­யா­டி­விட்டுச் செல்­வார்கள்.
எனினும் காணா­மல்­போன எனது மகன் உட்­பட எட்­டுப்பேர் தொடர்பில் எவ்­வித பதிலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனத் தெரி­வித்தார்.
மல்­லிகா தேவி என்ற தாய் காணாமல் போன சிவா­னந்தம் (வயது 24) என்ற மகன் தொடர்பில் சாட்­சி­ய­ளிக்­கையில்,
காணாமல் போன தன்­னு­டைய மகனின் பெயர் உள்ளூர் பத்­தி­ரிகை ஒன்றில் வெளி­வந்­துள்­ள­தா­கவும் அவரை கடத்­தி­ய­வர்கள் தற்­போது வரை உயி­ரு­ட­னேயே வைத்­துள்­ள­தாக தெரிவித்தார்.
இதனையடுத்து மந்துவில் வடக்கைச் சேர்ந்த கந்தசாமி லோகநாயகி என்ற தாய் காணாமல்போன கந்தசாமி பரிமேலழகர் (வயது 29) என்ற மகன் தொடர்பில் சாட்சியம் அளிக்கையில்
என்னுடைய மகன் கோவிலில் நின்றிருந்த அன்று இரவுவேளை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதனையடுத்து அதிகாலை எனது மகனைத் தோடி குறித்த கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கு எனது மகன் உட்பட எட்டுப்பேரின் கைகளும் வயர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதன்போது அங்குவந்த "பவல்" வாகனத்திற்குள் இராணுவத்தினரால் எமது பிள்ளைகள் தூக்கிப் எறியப்பட்டதையடுத்து வரணியை நோக்கி பவல் வாகனம் சென்றதாக கண்ணீர்மல்க சாட்சியமளித்திருந்தார்.  நன்றி வீரகேசரி 










காணாமல்போன எனது மகளை வெலிக்கடைச் சிறையில் கண்டேன் :  தாய் ஒருவர்  சாட்­சி­யம்

01/03/2016 வன்­னியில் காணாமல் போன எனது மகளை வெலிக்­கடை சிறைச்­சா­லையில் கண்­டி­ருந்தேன். அப்­போது அவர் வெள்ளை நிற உடையில் வெள்ளை நிற மாலை அணிந்து வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­பட்டார் என தாய் ஒருவர் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

காணாமல் போனோர் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்தும் மெக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு-­ழுவின் விசா­ர­ணைகள் சாவ­கச்­சேரி பிர­தேச செயலர் பிரிவில் நேற்­றைய தினம் நடை­பெற்­றன. இதன்போது கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த தாய் ஒருவர் அங்கு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­டவாறு கூறினார். அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கை யில்,
எனது மகள் அனு­சியா கிளி­நொச்­சியில் அரச துறையில் பணி­பு­ரிந்து கொண்டு எனது சகோ­த­ரி­யோடு வாழ்ந்து வந்தார். இந் நி­லையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அவர் காணாமல் போயி­ருந்தார்.
இவ்­வாறு இருக்­கையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு பதிவு ஒன்றை மேற்­கொள்­வ­தற்­காக நான் ­சென்­றி­ருந்தேன். இதன்­போது எனது மகளை அங்கு கண்டேன். எனினும் எனது மகள் என்னைக் காண­வில்லை. அவர் சற்று தூரத்­தி­லேயே நின்­றி­ருந்தார். அப்­போது அவர் வெள்ளை நிற உடை­ய­ணிந்­தி­ருந்­த­துடன் வெள்ளை நிறத்தில் மாலையும் அணிந்­தி­ருந்தார். இந்­நி­லையில் எனது மகள் உட்­பட சிலரை அங்கு வந்த அதி­கா­ரிகள் வாக­ன­மொன்றில் ஏற்­றிக்­கொண்டு சென்­றனர். அங்கு நின்ற அதி­கா­ரி­க­ளிடம் இவர்கள் எங்கு கூட்டிச் செல்­லப்­ப­டு ­கி­றார்கள் எனக் கேட்­ட­போது நீதி­மன்­றத்­துக்கு கூட்டிச் செல்­வ­தாக அந்த அதி­காரி பதில் வழங்­கி­யி­ருந்தார். இதன்­போது அந்த அதி­கா­ரி­யிடம் எனது மகளின் பெயர் விப­ரத்தை கூறி வாக­னத்தில் அழைத்துச் செல்­லப்­ப­டு­ப­வரில் எனது மகளும் ஒருவர் எனக் கூறினேன். அதற்கு அந்த அதி­காரி அத்­த­கைய பெயர் இல்லை எனத் தெரி­வித்தார்.
அவ­ரு­டைய கூற்று அவ்­வா­றாக அமைந்­தி­ருந்­தாலும் நான் கண்­டது எனது மகளைத் தான். அது எனக்கு நன்­றாக தெரியும்.
அத்­தோடு எனது மகள் மற்றும் அவ­ரோடு சேர்த்து மேலும் பலர் நிற்­ப­தாக இருக்கும் படத்தை முகப்­புத்­தகம் ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பார்த்தேன். எனவே என்­னு­டைய மகள் உயி­ரோ­டுதான் உள்ளார். தயவுசெய்து அவரை என்­னிடம் மீட்டுத் தாருங்கள் என ஆணைக்­குழு அதி­கா­ரி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.
இதே­வேளை தன்­னு­டைய பிள்ளை உட்­பட எட்டுப் பேரை இரா­ணு­வமே சித்­தி­ர­வதை செய்து படு­கொலை செய்­தது என ஆணைக்­குழு முன்­னி­லையில் தந்தை ஒருவர் சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் மகனின் படு­கொ­லைக்கு நஷ்ட ஈடு வழங்­கு­மாறும் கோரிக்கை விடுத்தார்.
அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
எனது மகன் சந்­தி­ர­சே­கரம் யாழ்ப்­பாணம் காட்டுக்கந்தோர் வீதியில் இருந்த கூட்­டு­றவு சங்­கத்தில் காவ­லா­ளி­யாக பணி­பு­ரிந்து வந்தார். 1996 ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 19 திகதி அன்று இரவு அரி­யா­லையில் இருந்த இரா­ணுவ முகாமைச் சேர்ந்த இரா­ணு­வத்­தினர் எனது மக­னையும் அவ­ரோடு சேர்த்து வேறு எட்டுப் பேரையும் பிடித்து சென்­றனர்.
இத­னை­ய­டுத்து நான் எனது மகனை தேடி குறித்த இரா­ணுவ முகா­மிற்குச் சென்ற போது அங்­கி­ருந்த இரா­ணு­வத்­தினர் என்னை தாக்க வந்­த­துடன், உங்­க­ளது மகனை தேட வேண்டாம் அவர் இங்கு இல்லை என கூறினர்.
காலப்­போக்கில் கிடைக்­கப்­பெற்ற தக­வலின் அடிப்­ப­டையில் எனது மகன் உட்­பட எண்மர் இரா­ணு­வத்­தி­னரால் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.
எனவே எனது மகன் உயிரோடு இல்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அத்துடன் எனது மனைவியும் இன்னொரு மகனும் விமானத் தாக்குதலில் உயிரிழந்து விட்டனர். எனவே வறுமை நிலையில் இருக் கும் எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.   நன்றி வீரகேசரி 









6 தேரர்கள் உட்பட 11 பேருக்கு பிணை



01/03/2016 ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 11 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். 
இவர்களில் ஆறு தேரர்கள் மற்றும் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்

01/03/2016 பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 
ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன் தன்னை அப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதிற்கான கடிதம் கிடைத்துள்ளதாகவும்,எனினும் பதவி நீக்கத்துக்கான காரணம் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் லெசில் டி சில்வா தெரிவித்தார்.
 நன்றி வீரகேசரி 













விடுவிக்கப்படாத காணிகள் விரைவில்  உரிமையாளர்களிடம் வழங்கப்படவேண்டும் : அமெரிக்கா  வலியுறுத்தல்

01/03/2016 இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள்  உரிய  காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 
அத்துடன் இலங்கை மேற்கொண்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீட்கும் முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 
அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு,
இலங்கையின் ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சிப்படுத்தல்,  நீதி மற்றும் நல்லிணக்கம்,  பாராளுமன்ற செயற்பாடுகள் போன்றவற்றை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இதேவேளை கடந்த வருடத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கின்றது.
விசேடமாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டமை சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரனை வழங்கியமை, விசாரணைப் பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை போன்றவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.
அந்த வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா   ஆதரவை வழங்கும். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பலமான நட்புறவு கட்டியெழுப்பப்படுவதை இரண்டு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்கா மிக அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. 
இதேவேளை இதுவரை மீள் வழங்கப்படாதுள்ள பொது மக்களின் காணிகள்  காணி உரிமையாளர்களிடம் மிக விரைவாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன்  பயங்கரவாத தடைச் சட்த்திற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக மாற்றீடு ஒன்றை மேற்கொள்ளவுள்ள இலங்கை அரசாங்கத்தின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும். 
மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு கூட்டுறவை பலப்படுத்த வேண்டுமென இரண்டு நாடுகளும் திட்டமிடுகின்றன.  நன்றி வீரகேசரி 








வித்தியா படுகொலை : சந்தேகநபர்கள் விடுவிப்பு

02/03/2016 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தொடர்புபட்டவர்கள் என குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை (29) கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும், நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற சந்தேகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 10 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்க வலி­யு­றுத்தி யாழில் கவ­ன­யீர்ப்பு 

03/03/2016 நாட்­டி­லுள்ள சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகளை விரைவில் விடு­விக்க வலி­யு­றுத்தி யாழ்ப் பாணத்தில் நேற்று முற்­பகல் 11 மணி­ய­ளவில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் இடம்­பெற்­றது. தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு ­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.   நன்றி வீரகேசரி 






எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாணை
03/03/2016 இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பணப்பரிமாற்றத்தின்போது, விடுதலைப் புலிகள் தரப்பின் பிரதிநிதியாக செயற்பட்டதாக கருதப்படும் எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
எமில்காந்தனுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராக தயாரென, அவர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து பிடியாணை மற்றும் சிவப்பு அறிக்கை என்பன நீக்கிக்கொள்ளப்பட்டன.
எதுஎவ்வாறு இருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். 
இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். 
அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 






கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
03/03/2016 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்று பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 
இது  தொடர்பில் முன்னரும் சில தடவைகள் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான  ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி




பேராதனைப் பல்கலைக்கழக கலை பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
03/03/2016 பேராதனைப் பல்கலைக் கழக கலை பீட மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர்  இன்று எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கலைப்பீட விசேட பாட நெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர் தொகையை எல்லைப் படுத்தியுள்ளதுடன் பாடநெறியின் தரத்தை பேணுதல் என்ற ரீதியில் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகள் திணிக்கப்பட்டு அதனை ஒரு காரணமாக வைத்து சிலர் பாட நெறியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மாணவர் சங்கத் தலைவர் ஜே.பிரசன்ன சம்பத் தெரிவித்தார்.
பல்கலைக் கழகக் கல்விக்கு இவ்வாறு பல்வேறு நிபந்தனைகளை உட்படுத்தி தனியார் கல்வித்துறையை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டினர். 

இது விடயமாக நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்க வில்லை எனவும் தெரிவித்து அவர்கள் கலைப்பீட வளாகத்தில்  சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   நன்றி வீரகேசரி