ஆலோசனை கூட்டம் - 24 --01--2015 ஞாயிறு மாலை 4--30 மணிக்கு

.
அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் தமிழை முன்னெடுக்கின்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள் ,கலைஞர்கள் ,விமர்சகர்கள் ,கல்வியாளர்கள்,ஆய்வாளர்கள் , இதழாளர்கள் ஆகியோரை  இணைக்கும் ஓர் அமைப்பைத் தொடங்குவது குறித்து நீண்ட காலமகச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். அமைப்பு என்றால் வெறுமனே விழா என்ற பெயரில் கூடிக்கலையாமல், புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளையும தாயகஇலக்கியவாதிகளையும்இணைக்கவும் ,இளைய தலைமுறையில் படைப்பாற்றலை  வளர்க்கவும் ,தமிழருக்கு இருக்கும் தேசியஅடையாளமான   தமிழ் மொழி   குறித்து குரல் கொடுக்கவும் பொருத்தமான வகையில் அந்த அமைப்பு இயங்க வேண்டும் என்று கருதுகின்றோம். இதுசம்பந்தமாக
  24 --01--2015 திகதி  ஞாயிறு  மாலை 4--30  மணிக்கு
191 ,  GREAT WESTERN HIGH WAY.MAYS HILL     ( சிட்னி முருகன் கோவிலுக்கு அருகில்  }  முகவரியில்  அமைத்துள்ள சிட்னி தமிழ் அறிவகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில்  ஆலோசனை கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  இலங்கையின்  பிரபல எழுத்தாளர் நீர்வை பொன்னையன் ,தமிழகத்தைச்  சேர்ந்த கவிஞர் சிதம்பர பாரதி   ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன்   அழைக்கிறோம்

அன்புள்ள,
மாத்தளைசோமு